Sunday, August 07, 2005

வணக்கமுங்கோ...

மொத மொதல்ல அவுட்ஸைட் இந்தியா வந்ததுல அறிவு(?!) விசாலமாச்சி; பார்வை விரிஞ்சிருச்சு (வேற காரணமும் உண்டு!).

முக்கியமா நான் எயுதறதுக்கு ரெண்டு பேர் காரணம்........
ஒண்ணு,
ஹேமந்த்............ இன்னொருத்தர், கேப்ரிம்மா!

டீக்கடா ஹேமந்த் 'உங்களுக்காக ஸ்பெஷல் டீ போடறேன்'னு சொல்லிட்டு தமிழ்ல எயுதச் சொன்னாரு. நெறய என்கரேஜ் பண்ணாரு. 'ஒயுங்கா எய்தினா போறும், மத்தபடி ஸ்கைதான் லிமிட்'டுன்னு மொதல்லியே சொன்னதால நமக்கு ப்ராப்ளமே இல்லாம பூடுச்சு. ஆனா நம்ம ராசி, அவரு கடையை மூடிட்டாரு!

என்ன பண்றதுன்னு முழிச்சிகினு இருந்தப்ப
கேப்ரிம்மா வந்தாங்கோ. அவங்களோட மொத தபாவே லடாய்தான்! அவங்க எயுதறது எனக்கு பிடிக்கலேன்னு தெகிரியமா சொல்லிப்போட்டேன். ஆனாலும், அப்பப்போ கேப்ரிம்மா சைட் (site-pa!) போய்கினே இருந்தேன். நம்ம ராசி தொடர்ந்திச்சு..அந்தம்மாவும் கொஞ்ச நாள் காணாம போயிட்டாங்கோ.......அப்பதான் ஐடியா வந்திச்சு!

'என்ன கேப்ரிம்மா! நான் எழுதலாம்மா?'ன்னு வெள்ளாட்டா கேட்டதுல அம்மா 'ஓகே'னுட்டாங்கோ! அந்தம்மா சைட்டு (site!) எப்பவுமே லைட்டாவும் வேடிக்கையாவும் இருக்கும். 'சரி! நாமும் அதே ரூட்ல போயிருவோம்'னு எயுத ஆரம்பிச்சேன்.

அப்பதான்
கேப்ரிம்மா 'நீங்களே ஒரு சைட் இஷ்டார்ட் செஞ்சா என்ன?'ன்னு ஒரு கேள்வி கேட்டாங்கோ. 'என்னடாது......நம்ம ஐடியாவே வேற......இத்துல இறங்கலாமா?'ன்னு கொஞ்சம் கூட யோசிக்காம இறங்கிபுட்டேன். 'ரொம்பவே லைட்டாதான் எயுதனும்'னு முடிவு செஞ்சேன்.

இத்துல நெறய பேர் அறிமுகமானங்க..........சில பேர்
காறியும் துப்பினாங்க! அது சரி, 'இங்கே எச்சில் துப்பவும்'னு போர்டு கீதோ என்னமோ?! யாரு கண்டது?!

சில பேரப் பத்தி சொல்லாம போனா எனக்கு 'போற வழிக்கு புண்ணியம் கெடக்காது'ங்கறதால....

டீக்கடா ஹேமந்த்
கேப்ரிம்மா ( கூந்தல்!)
வெங்கிட்டு ஐயா ( ·ப்ரெஞ்ச் தாடி!)
சிங்கப்பூர் ராம்( பால் வடியும் முகம் !)
வெங்கட் கண்ணதாசன் (விரிந்த கண்கள்!)
ஐயய்யோ(எருமை(தானே?!))
விச்சி ஏஞ்சல் (விக்கட் ஏஞ்சலானது)
டிஜே ( ஸ்டைல் போஸ்!)
டிடி ( கறுப்பு வெள்ளை!)
·பெராரி(ஸப்வே ட்ரெயின்!)
ப்ரியம்வதா (சொல்!)
நித்யா(மாறி வரும் எ(வ)ண்ணங்கள்!)
சுபா ( சிரிப்பு!)

இப்படிப்பட்ட ஆளுங்களோட பேசற சான்ஸ் கெடச்சதுல ஹேப்பியோ ஹேப்பி. இவங்க எல்லாரும் நன்னாருக்கணும்னு ஆண்டவன்கிட்ட ஒரு மனுப் போடப் போறேன்.

இத்தன நாள் டொரொன்டோ வயர்லெஸ்ல blog இஷ்டார்ட் பண்ணி கலாய்ச்சாச்சி.........ப்ராஜக்ட் ஓகேயாயி இப்போ வூடு திரும்பணும்...பெங்களூர் போயி ஆ·பீஸ்ல ஜாய்ன் பண்ணப்புறம் தான் தெரியும்......என்னாவும்னு.

அத்தால ஒரு சின்ன ப்ரேக்.......பொறவு ஆண்டவன் தொணையிருந்தா அப்பாலிக்கா மீட் பண்ணுவோம்.

ஓகே? வுடு ஜுட்!

Saturday, August 06, 2005

ஸ்கைலான் டவரில் "நயாகரா"





'என் பையன் மிகவும் நல்லவன்' என்று நீ நம்பிவிட்டால், எந்தவிதத் தொல்லையும் இருக்காது.

பையன் கெட்டவனாக இருக்கலாம்; அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டியவன் அவனே.

மனைவி உத்தமி, பத்தினி என்று நம்பிவிட்டால், உன்னைப் பொறுத்தவரை காதல் சுகமாகிவிடும்.

தவறான நடத்தைக்குத் தண்டனை அனுபவிக்க வேண்டியவள் அவளே.

நம்பிக்கையோடு கோவிலுக்குப் போ.

'நம்பினார் கெடுவதில்லை' என்பது நான்கு மறைத் தீர்ப்பு.

வாஸ்கோடகாமாவின் நம்பிக்கை புதிய நிலத்தைக் கண்டுபிடித்தது.

கொலம்பஸின் நம்பிக்கை, அவன் தாய் நாட்டுக்கு ஒரு புதிய நிலத்தைத் தந்தது.

ஆயுதங்களில்லாத சர்ச்சிலின் நம்பிக்கை, இரண்டாவது உலகப் போரின் போது இங்கிலாந்துக்கு வெற்றியைத் தேடித் தந்தது.

கடலில் விழுந்து தத்தளித்து ஒருவன் இரண்டு மாதங்கள் நீந்திக்கொண்டிருந்தானென்றும், பிறகொரு கப்பலில் கரை சேர்ந்தானென்றும் நான் படித்திருக்கிறேன். நம்பிக்கை மட்டும் இல்லாவிட்டால் அவன் பிணமாகி மீன்களுக்கு இரையாகியிருப்பான்.

பிரகலாதனின் நம்பிக்கை, கடவுளைக் காட்டிற்று.

கண்ணனின் நம்பிக்கை, பாரதப் போரில் வெற்றி பெற்றது.

நான் முன்னேறியது படிப்பினால் அல்ல; நம்பிக்கையால்.

தேசத்தை நம்பு; தெய்வத்தை நம்பு; உலகம் உன்னைப் புகழும்.

'இது நம்மால் முடியும்' என்று எண்ணு; முடிந்து விடும்.

மனோதிடமும், வைராக்கியமும் இந்த நம்பிக்கையின் குழந்தைகளே!

ஒரு துறையில் முனைந்து நின்று நம்பிக்கையோடு முன்னேறினால், நீ நினைக்கும் அளவுக்கு புகழும், பொருளும் வந்து சேரும்.

கடலைக் கடக்கக் கப்பலைத் தந்தது எவனோ ஒருவனின் நம்பிக்கை.

இவற்றுள் தலையாயது தெய்வ நம்பிக்கை.

தெய்வ நம்பிக்கை பொருள் தருகிறது; நிம்மதி தருகிறது; நியாயமாக நடக்கச் செய்கிறது.

மருத்துவரிடம் நம்பிக்கை வைத்தால் மருந்தில்லாமலே பாதி நோய் தீர்ந்து விடுகிறது.

நம்பிக்கை உடையவன் தான் வேதாந்தியானான்; விஞ்ஞானியானான்.

நம்பிக்கை இல்லாதவனுக்குச் சுகமும் அற்பம்; ஆயுளும் அற்பம்.

தண்ணீரைப் பால் என்று நம்பினால் அது பால்தான்; வேப்பிலை இனிக்கும் என்று நம்பினால் அது இனிக்கும்.

நம்பிக்கைக்கு மிகவும் தேவையானது மனம்.

அது உன்னிடமே இருக்கிறது; அதற்காக நீ ஒரு பைசாவும் செலவழிக்கத் தேவையில்லை.

- கடைசிப் பக்கம், கவியரசு கண்ணதாசன், வானதி பதிப்பகம்.

Friday, August 05, 2005

Sir = South Indian Rascal !
(first english post, hi..hi!)
திரு சிவமணி பேட்டி
(நன்றி: www.vikatan.com
)



மொதல்ல
26
இப்ப
36!
எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட 'மை'யைத் தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா?
சிலர் பெரு'மை'யிலும், சிலர் தற்பெரு'மை'யிலும், வேறு சிலர் பொறா'மை'யிலும், சிலர் பழ'மை'யிலும் தொட்டு எழுதுகிறார்கள்.
ஆனால், தொடக்க்கூடாத 'மை'கள், மடமை; கயமை; பொய்மை; வேற்றுமை. நன்மை தரக்கூடிய செம்மை, நேர்மை, புதுமை, ஆகியவற்றைத் தொட்டு வாசகர்களின் நெஞ்சைத் தொடும்படியாக எழுத வேண்டும். அவர்கள் நீக்க வேண்டிய மைகள் வறுமை; ஏழ்மை; கல்லாமை; மடமை; அறியாமை.

இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் கடமையாகவும், உரிமையாகவும் கொள்ள வேண்டும்.
-கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்

Thursday, August 04, 2005

M.B.A-வை இதுக்கு மேல நாறடிக்க முடியாது டோய்!

Wednesday, August 03, 2005

என்னுடைய profile-ல் மூக்கை நுழைத்திருக்கும் 'ஆதிகால மனிதன் (அ) என் மனம்' பற்றிய சுவாரஸ்யமான சோகமான கதை இருக்கிறது.

இவர் பிறந்த இடம் தெரியவில்லை; வளர்ந்தது டொரொண்டோ ஜூவில். பார்க்க வந்த ஆடியன்ஸ் ஒருவர் நீட்டியதைச் சபலப்பட்டு வாங்கித் தின்றதில் வந்தது வினை! நாலே நாளில் 'புட்டுகிட்டார்'! (Aug 3!)

நம் நாடென்றார் 'பத்தோடு' பதினொன்று!! இங்கு விடுவார்களா? "கார்டிகோ" பேர் வைத்து, 'சிலை' வைத்து 'போர்டும் போட்டு வருடா வருடம் துக்கம் அனுஷ்டிக்கிறார்கள்.

குரங்கோடு சேர்ந்த "கோ. ரங்கு" இதோ!

மும்மாரி பெஞ்சா ஒகே........!
மும்பையில் மாறி மாறி பெஞ்சா நாட் ஓகே!!


26!

Tuesday, August 02, 2005

'ஏங்க 'தலைப்பு' (title) இல்லாம எழுதறீங்க?'

'அப்பதானுங்களே கவர்ச்சியா இருக்கும்!'
click on picture for "bigger" view

Monday, August 01, 2005

சமீபத்தில் வழங்கப்பட்ட தேசிய விருதுகள் அனேகமாக எல்லோருக்கும் நினைவிருக்கலாம்.
சிறந்த பாடல் - ஒவ்வொரு பூக்களுமே (ஆட்டோகிரா·ப்)
சிறந்த பாடலாசிரியர் - பா விஜய்
சிறந்த பாடகி - சித்ரா (பாடலைப் பாடியவர்)
இவையனைத்தும் ஒருங்கிணைத்தது பரத்வாஜின் இசை என்பது மறுக்க முடியாத ஒன்று; அப்படியெனில், ஏன் சிறந்த இசையமைப்பாளர் விருது பரத்வாஜ் அவர்களுக்கு வழங்கப்படவில்லை?
பி.கு: எனக்கும் 'மீசிக்'குக்கும் ரொம்ப தூரம்.......அதனால் பிழையெனில் பொறுத்தருள்க!
ஹை! சூப்பர்!