Sunday, April 30, 2006

திருட்டு விசிடியில் திருட்டு பயலே...






பில்லியனர் கணவனுக்குத் தெரியாத மனைவியின் கள்ளத் தொடர்பு நமக்கு புதிதல்ல; கள்ளத் தொடர்பின் நாயகன் கணவனின் உயிர் நண்பன் நமக்கு புதிதல்ல; இதைப் பார்த்து விட்ட மூன்றாம் நபர் ப்ளாக் மெயில் செய்வது புதிதல்ல; எதிர் கொள்ள வேண்டி புதுப் புது நடவடிக்கை எடுக்கும் மேல் வர்க்க பிரதிநிதி மனைவியும் புதிதல்ல; ஒரு கட்டத்தில் இதையறிந்த கணவன், மனைவியை மீட்க வேண்டி பழி வாங்கத் துடிப்பதும் புதிதல்ல. ஆனால், இவையெல்லாம் கோர்த்து ஸாலிடாய் திரைக்கதை அமைத்திருப்பது புதிது; சுவாரஸ்யமானது.

'காக்க காக்க' ஜீவன் தான் வில்லன்; எப்படிப்பட்டவன் என்பதை முதல் காட்சியிலே விவரித்திருப்பது பளிச்; அஸால்டாய் படம் நெடுக வந்தாலும், நடிப்பின் பல்வேறு பாணிகளை காட்டியிருப்பது புன்னகைக்க வைக்கிறது; சில இடங்களில் கை தட்டவும். பாஸ்போர்ட் விசாவை பறிகொடுத்து, அழுது கொண்டே ·போனில் கெஞ்சி, பின் சிரித்து கழுத்தறுக்கும் போது...'சபாஷ் ஜீவா!'

நீண்ட நாட்களுக்குப் பின் மாளவிகாவுக்கு சூப்பர் ரோல்; மேல் வர்க்க பிரதிநிதியாய் அம்மணி வளைய வரும்போது இயல்பாய் இருக்கிறது; கணவனுக்கு அடங்கி நடித்து, நண்பனான அப்பாஸிடம் உறவு கொள்வது, ஜீவனிடம் கெஞ்சுவது என்று ஸ்கோப் அதிகம். இருந்தாலும் இவ்வளவு 'தாராளம்' தேவைதானா? (ஹி..ஹி..!)



கணவனாய் மனோஜ் K ஜெயன், நண்பனாய் அப்பாஸ், வாட்ச்மேனாய் சார்லி, ஜீவனின் காதலியாய் சோனியா அகர்வால் (அழுகை மூஞ்சியிலிருந்து, அழகு முகமாய் மாறியிருக்கிறார்; நீச்சல் உடையில் வரும்போது நமக்கே கூச்சமாயிருக்கிறது!), ஜீவனின் நண்பர்கள் என ஒரு பட்டாளமே வந்து போயிருக்கிறது.

''வைடு ஆங்கிள்' ரவிஷங்கரின் கேமரா சினிமாவுக்குப் பிள்ளையார் சுழி' என்ற ஆ.வி.யில் படித்ததை (திருட்டு) விசிடியில் பார்க்கும்போது அவ்வளவாகத் தெரியவில்லை; மே பி, தியேட்டரில் காசு கொடுத்துப் பார்த்தால் தெரியுமோ என்னவோ?!

எடிட்டிங், இசை, ரீரெகார்டிங் என எல்லாமே கச்சிதம். 'சின்னப் பயலே' பாணியில் 'திருட்டுப் பயலே' எழுதியிருக்கும் கவிப்பேரரசுவுக்கு ஒரு ஷொட்டு.

மிகச் சாதாரணமாய்த் துவங்கி முகத்தில் அறையும் ·ப்ளாஷ்பேக் சூப்பர்; எந்த ஒருவனும் தானாய்க் கெடுவதில்லை என்பதை அருமையாய்க் காட்டியிருக்கிறார்கள்; அதையே இறுதியில் ஜீவன் நினைத்துப் பார்ப்பதாய் வைத்திருப்பது சூபர்ப்!

மணிரத்னம் அஸிஸ்டெண்ட் சுசி.கணேசனின் மூன்றாவது படம் இது; விரும்புகிறேன், ·பைவ் ஸ்டார், திருட்டுப் பயலே என கதைக் களத்தை வித்தியாசமாய் அமைத்ததில் குருவுக்குப் பெருமை சேர்த்து விட்டார்.

சினிமாவுக்குப் புதுசு புதுசாய் கதை பண்ண முடியாது; என்றாலும் பழசை புச்சாய் காட்ட முடியும் என்கிற வகையில் 'திருட்டு பயலே'வை ரசிக்க முடியும்.

Monday, April 10, 2006

பசங்களுக்கு பரீட்சை வந்தா நம்ம பாடு திண்டாட்டந்தேன்; டி.வி., சாப்பாடு எல்லாம் இரண்டு, மூன்றாம் பட்சமாகியதில், சினிமாவைப் பார்க்க முடியாமலே போய்விட்டது! சிவா படித்தது (கவனிக்கவும்!) வகுப்பு மூன்று என்றாலும் பெற்றோருக்கே உரிய டென்ஷனில் எதுவுமே பிடிக்கவில்லை (இத பாருடா! என்னாமா வுடறான் ரீலு!). ஒரு வழியாய் சிவா எக்ஸாம் முடிந்ததில் (எனக்கு) ரொம்ப சந்தோஷம். (இருக்காதா பின்னே, திருட்டு சிடியில் படம் பாக்கலாமே!)

சரவணா
'ஜோ'வுக்குகாகப் பார்த்த படம். அதென்னமோ தெரியவில்லை, சிம்பு-ஜோ பொருத்தம் திரையில் அம்சமாக இருக்கிறது. மனுஷி இளமை + ஸ்லிம் (ஹி...ஹி..!). சிம்புவுக்கு நடிப்பும் காமெடியும் நன்றாக வருகிறது (நடிப்பே காமெடிதான் என்ற தவறான வதந்தியும் உண்டு!). அடிதடி, ரத்தக் களறியில் வந்த தெலுகு இறக்குமதியில் 'ஜோ'வைத் தவிர வேறு எதுவுமே இல்லை இயக்குனர் கே எஸ் ரவிகுமார். அப்டியா?

சங்கமம் (விஜய், ஞாயிறு காலை 09.30 மணி)

விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சிகள் வித்தியாசமாயும் சுவாரஸ்யமாயும் இருப்பதாக அவ்வப்போது காதில் விழுவதுண்டு. அந்த வகையில் பின்னணி பாடகி மாதங்கி அவர்கள் நடத்தும் 'சங்கம'த்தில் பத்மஸ்ரீ எஸ் பி பி அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டிய ஒன்று.

'ஆயிரம் நிலவே வா', 'இயற்கை என்னும்', 'உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்', 'வான் நிலா, நிலா அல்ல', 'பொட்டு வைத்த முகமோ', 'என்னடி மீனாக்ஷ¢', 'நலம் வாழ', 'இது ஒரு பொன்மாலைப் பொழுது', 'பனி விழும் மலர்வனம்', 'எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்' என எனக்குப் பிடித்த பாடல்களையே பாடியதில் டபுள் சந்தோஷம்!

எஸ் பி பி அவர்கள் பாடும் 'நிலா' பாட்டுக்கள் ஹிட் ஆவது பற்றி கங்கை அமரனின் காமெண்ட்; 'நிலாவும் ரவுண்ட்; எஸ் பி பியும் ரவுண்ட்!'

எஸ் பி பி அவர்கள் பேசும்போது தென்பட்ட பணிவு 'நிலை உயரும்போது பணிவு கொண்டால் உலகம் உன்னை வணங்கும்' பணிவு. ஒரு anchor எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மாதங்கி அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

வரும் வாரமும் தொடர்கிறதாம்....பார்க்க வேண்டும்...பாருங்கள்!

Hard Target(தமிழ்)(விஜய், ஞாயிறு காலை 11.00 மணி)

கதைக் கருவும், துவக்கக் காட்சியும் ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் superb! னால், படம் நெடுக breath taking stuntதான்; அதுவும் climax காட்சிகளின் வன்முறை நம்மை உறைய வைக்கிறது; சமயத்தில் போரடிக்கவும் செய்கிறது. வான் டாமே படங்களின் பலமே ஸ்டண்ட்/வன்முறை காட்சிகள்தாம். னால், அதையே நம்பி எடுத்தால்?
‘விஜய்’ டப்பிங்-ல் கண்ணியம் இருக்கிறது; அனாவசிய வார்த்தை ஒன்றுகூட இல்லை. சந்தர், நீங்கள் இனி ‘விஜய்’ தமிழாக்க ங்கிலப் படங்களைப் பார்க்கத் துவங்கலாம்.

மெர்க்குரி பூக்கள்

நடுத்தரக் குடும்பங்களின் அன்றாட அவலங்கள்தான் கதை. ஸ்ரீகாந்த், மீரா ஜாஸ்மின் ஜோடியில் ஒரு துள்ளல் தெரிகிறது (மாமனார் வீட்டுக்கு வரும் ஸ்ரீகாந்த்-ன் நடிப்பைப் பாருங்கள்!) அப்பாவாக வரும் டெல்லி கணேஷ் பட்டையைக் கிளப்புகிறார். காமெடி கருணாஸ் கடைசியில் சீரியஸாய் அட்வைஸ் கொடுப்பது நிச்சயம் சினிமாவில்தான் வரும்! பாலச்சந்தர் படங்களில் டெலி•போன் நடிப்பது போல, இதில் மொபட்-டையும் நடிக்க வைத்திருப்பது சுவாரஸ்யம். சண்டைக் காட்சியையும், இரண்டு பாடல்களையும் (ஒரு பாடலில் சமிக்ஷா ரொமபவே ஓவர்!) ட்ரிம் செய்திருந்தால் படம் 'ஓஹோ'. னாலும் ஹீரோயிஸம், பஞ்ச் டயலாக் இல்லாமல் கதை பண்ணியிருக்கும் ஸ்டான்லிக்கு 'தில்' ஜாஸ்தி!