Showing posts with label கம்ப இராமாயணம். Show all posts
Showing posts with label கம்ப இராமாயணம். Show all posts

Thursday, July 11, 2013

பரதேசி டைரிக் குறிப்பு - 49

இராமனும், சுக்ரீவனும் செய்த கொண்ட ஒப்பந்தம்

-அண்ணன் வாலியை இராமன் வதைத்து, இராச்சியத்தைச் சுக்ரீவனுக்குக் கொடுப்பது.

-தன் படை கொண்டு சுக்ரீவன் சீதா பிராட்டியைத் தேடிக் கண்டு பிடிப்பது.

இராமன் தன் ஒப்பந்தத்தை நிறைவேற்றி விட, மழைக் காலமாதலால் தேடுவதற்கு அவகாசம் வேண்டுகிறான் சுக்ரீவன்.  இராமன் ஒத்துக் கொள்கிறான்.

மழைக்காலம் முடிகிறது. சுக்ரீவன் கொண்டாட்டங்கள் ஓயவில்லை.  குடி போதையில் கொடுத்த வாக்கையும், போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தையும் மறந்தே போகிறான்.

பார்க்கும் ஒவ்வொரு காட்சியிலும் சீதா பிராட்டி நினைவில் வர, பிரிவாற்றாமையும் சேர இராமனுக்குக் கோபம் வந்து விடுகிறதாம்.  ஒப்பந்தத்தை நினைவூட்ட இலக்குவனை அனுப்புகிறான்.