Showing posts with label மாம்பழம். Show all posts
Showing posts with label மாம்பழம். Show all posts

Thursday, June 03, 2010

மாறிப் போன வழக்கம்!

நிறுவன ஊர்தியிலிருநது விடுபட்டு, அரசு போக்குவரத்து கழகத்தில் இணைந்து மாதம் ஒன்றாகி விட்டது.

மெதுவாக 6 மணிக்கு எழுந்து, நமது வேலையை முடித்துக்கொண்டு, நன்றாக காலைச் சிற்றுண்டி மற்றும் கோப்பை வடிநீர் அருந்திவிட்டு, டப்பாவில் அடைக்கப்பட்ட மதிய உணவோடு, கிளம்பிவிடுவேன்.

காலையில் 8.45-9.00க்குள் சொகுசுப் பேருந்தைப் பிடித்தால், மெ...து...வா...க அலுவலகத்திற்குப் போய்ச்சேர 11 மணியாகிவிடும். 9 மணி நேரம் இருக்கையைத் தேய்த்துவிட்டு இரவு 8.15-8.30க்குள் சொகுசுப் பேருந்தைப் பிடித்தால், வீட்டிற்கு வர 10.30 ஆகிவிடும். அப்புறம் மீந்திருக்கிற சோற்றை மோரோடு பிசைந்து, உப்பு பிசிறின மாங்காய்த் துண்டுகளோடு சாப்பிட்டால்...சொர்க்கம்!

என்றாவது ஒரு நாள், மாம்பழமும் உண்டு!