Showing posts with label மீனாட்சி புத்தக நிலையம். Show all posts
Showing posts with label மீனாட்சி புத்தக நிலையம். Show all posts

Saturday, September 26, 2009

சிலரைத் திட்டும்போது 'போக்கிரிப் பயலே' எனக் கடிந்து வசை கூறுவர்.

போக்கிலி என்பதே போக்கிரி ஆகிவிட்டது. அது பேச்சில் ஏற்பட்ட திரிபு; தப்பு. போக்கிடம் இல்லாதவன், புகலிடமின்றிப் போனவன், தீங்கு செய்யவும் திருடவும் முரட்டுத்தனம் செய்யவும் துணிந்ததால், போக்கிலி, ஒரு கலகக்காரனைக் குறிக்கலானது; தீயவனைச் சுட்டியது.

அனாதையை 'ஏதிலி' என்பார்கள். 'ஏதுமிலித் தனியனேற்கே' என்பார் மாணிக்கவாசகர். போக்கிலிகளும், ஏதிலிகளும் இல்லா நாடே நல்ல நாடாகும்.

-பிழை திருத்தும் மனப்பழக்கம், தமிழண்ணல், மீனாட்சி பதிப்பகம்