Saturday, July 16, 2005

என் நண்பர் திரு ஜி ஆர் ஷங்கர் அவர்கள் எழுதியது
சில நாட்களாகத்தான் அந்தப் பெண்ணை நான் bells road பஸ் ஸ்டாப்பில் பார்க்கிறேன். ரொம்ப simple. நான் போகும் பஸ்(எண் 25)-ஸில்தான் இவளும்! tvs ஸ்டாப்பில் நான் இறங்குவதால், அவள் எங்கு போகிறாள் எனத் தெரியத்தான் இல்லை. (tvs வடபழனியில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!) அவளும் என்னைக் கவனிக்கிறாளா என்றும் தெரியவில்லை.
ஆனால், மூன்று நாட்களாக எனக்கு மிக அருகாமையில் நின்றதில், எங்கள் கண்கள் எதேச்சையாக(?!) மோதிக் கொண்டன. இதனால், அலுவலகம் இல்லாத ரெண்டாவது சனிக்கிழமையான் இன்றும், டீக்காக உடுத்திக்கொண்டு பஸ் ஸ்டாப் வந்தேன்.
'எப்படியாவது இன்னிக்கு அவகிட்ட ரெண்டு வார்த்தை(ஏன் மூணு வார்த்தைன்னு சொல்லக்க்கூடாது?!)யாவது பேசிடணும்' என்று முடிவு செய்து, எனக்கு முன்பாகவே வந்து 25-க்காகக் காத்துக்கொண்டிருந்தவளின் (எனக்காக என எழுதத்தான் ஆசை!) அருகில் நின்றேன். கொஞ்சம் costlyயான 'கோரா' ஸில்க்/attached short sleeves அணிந்திருந்தாள். இன்னும் நெருங்கியதில், lavender மணம்! (கண்கள் மோதிக்கொண்டன!)
தொண்டையை அவளுக்குக் கேட்காத அளவுக்கு செருமி, நான் "எக்ஸ்க்யூஸ் மீ" என்றதில் நிமிர்ந்து, 'என்ன?' என்பது போல் பார்த்தாள். (நான் totally flat!)
"25 போயிடுத்தா?" என்றேன்.

1 comment:

Speech is Golden said...

4 vaarthai ranga!

Excuse me and 25 poyittatha!