Saturday, November 07, 2009

பத்து ஆசைகள்!

1. அலுவலகத்துக்கருகே வீடு (அ) வீட்டுக்கருகில் அலுவலகம் (நடக்குமா?!).
2. 'சின்னச் சின்ன ஆசை' போல ஒரு பாட்டெழுதி பிரபலமாக வேண்டும் (அப்புறம் பாட்டே எழுதக்கூடாது!).
3. 'மாமி'யுடன் (மட்டும்) முழு நாள் இருக்க வேண்டும் (சிவா/விஷ்ணு-வை என்ன பண்றது?!).
4. மனதுக்குப் பிடித்த தோழியுடன் மாலை தேநீர் அருந்த வேண்டும் (வருவாளா?!).
5. தனியாக ஒரே நாள் உயர் ரக ஸ்டார் ஹோட்டலில் 'ஹாயாக' இருக்க வேண்டும் (அட போய்யா!).
6. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் ஆலயத்தின் அர்ச்சகராய் மாற வேண்டும் (மீசை வெச்ச பெருமாளை பாத்துகிட்டே இருக்கலாமே?!).
7. டிரைவரோடு கார் வாங்க வேண்டும் (ரொம்ப ஓவரா தெர்ல?!).
8. நண்பர்கள் ஐவரோடு அரை மணியாவது கழிக்க வேண்டும் (ஹ¤ம்...அந்த நாள் எந்த நாளோ?!).
9. ரஜினி சாரோடு ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் (2 தடவை பாத்தும் மிஸ் பண்ணியாச்சு!).
10. வட இந்தியாவைச் சுற்றி வர வேண்டும் (முடியுமா?!).

முக்கிய பின்குறிப்பு:
எல்லாவற்றையும் தனித்தனியாகப் படியுங்கள்.
முக்கியமாக 4,5 - எதேச்சையாக இரண்டும் அடுத்தடுத்து வருகின்றன. மற்றபடி வேறு எதுவுமில்லை ஐயா
!

Friday, October 16, 2009

தீபாவளி வாழ்த்துக்கள்!


Sunday, October 11, 2009

2 States - The story of my marriage - Chetan Bhagat


Dear Chetan,

I happened to read your ‘2 States’.

This ‘fiction’ reminded me two things

‘Singam Aiyengaar Peran’ (Grandson of Singam Aiyengaar) – This novel is penned b by Sujata in Tamil almost 15 years ago.
Jodi (Pair) – This is a Tamil movie produced in the year 1999 that dwells on groom staying in bride’s place and vice versa to earn their acceptance.

I could not stop crying after reading

‘Forgiveness’ uttered by Guruji Pondicherry
Efforts taken by Krish’s father on Krish’s marriage and dialogues between father/son after his return to Delhi


You tried to re-create the magic what you did in the first two (deliberately I missed the third one!). But, I was little disappointed after reading this novel probably because nothing is offered new.

Yes. Your punch liners all through this piece made me to smile/laugh and made the reading enjoyable and not allowed me to keep it down. That is where your success lies!

And Tam Brahms will take everything on their stride! Be it digging or praising! You should have done it more!!

Regards,
(Mis)Chief Editor
(in your language, Tamil Brahmin!)

Saturday, October 03, 2009

பாபா பற்றி எழுதியது (ஆகஸ்ட் ௨00௨)


- "அம்மா" ஆட்சியில் பாபா ரிலீஸ்
- பாடல் வரிகளில் "பெரியார்/ராஜாஜி" வந்ததை ஒட்டி தி.க. கோர்ட்டில் மனு தாக்கல். ரஜினி சரண்டர். பாடல் வரிகள் "கட்"!
- பாமக தலைவர் ராமதாஸ் பூம்புகார் மாநாட்டில் ரஜினியை எதிர்த்து பேச்சு. பாபா எங்கு திரையிட்டாலும் பாமக அதை எதிர்க்கும்!
- ஆகஸ்ட் இரண்டாம் வாரம் வரும் அனைத்துப் பத்திரிகை அட்டைகளிலும் "பாபா" அலங்கரிப்பு.
- ஆகஸ்ட் 15 அன்று அஷ்டமி என்பதால், 14 அன்று இரவே அனைத்து தியேட்டர்களிலும் சிறப்புக் காட்சிகள்.
- சத்யம் தியேட்டரில் ரஜினியின் ஆன்மிக குரு சச்சிதானந்த சுவாமிகள் பாபா படத்தைத் துவக்கி வைத்தார். கமல்/விஜயகாந்த் ஆப்செண்ட்! ரஜினி அப்செட்!
- ஆல்பட் தியேட்டர் வாசலில் "காளிகாம்பாள்" முழு உருவ கட் அவுட்.
- திருட்டு விசிடியை அழிக்க அங்கங்கே உள்ள லோக்கல் தியேட்டர்களில் பாபா ரிலீஸ்! உ-ம் வில்லிவாக்கம் ராயல், கொளத்தூர் குமரன், அம்பத்தூர் ராக்கி, கோயம்பேடு ரோகிணி!
- முதல் நாள் உதயம் தியேட்டரில் தொடர்ச்சியாக எட்டுக் காட்சிகள்!- "2000 ரூபாய் வரை கறுப்பில் முதல் நாள் டிக்கெட் போயிற்று!" காதில் விழுந்த செய்தி.
- ஜெயங்கொண்டான் தியேட்டரில் பாபா படச்சுருள் கொள்ளை. தியேட்டர் திரை கிழிப்பு. பாமக வெறிச்செயல்!
-விழுப்புரம், திருவள்ளூர் நகரங்களில் பாபா பார்க்க பாமக முட்டுக்கட்டை!
-ரஜினி ரசிகர் பாபா ரிலீஸ’ன் போது தனது மகளை ஆஸ்பத்திரியில் ரிலீஸ் செய்தார்!மருத்துவரை வற்புறுத்தி ஒரு மாதத்திற்கு முன்பாக குழந்தை ரிலீஸ்!
-ரயிலில் பிரசவ வலி எடுத்து ஆகஸ்ட் 15 அன்று பிறந்த குழந்தைக்கு "பாபா" என்று பெயர் சூட்டப்பட்டது!
-பெங்களூர் ஊர்வசி தியேட்டரில் முண்டியடித்து "பாபா" பார்க்க முயன்ற ரசிகர் ஒருவர் கூட்ட நெரிசலில் பரிதாபமாக உயிரிழப்பு!
-சேலத்தில் லிட்டர் லிட்டராக பாபா கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம்
- "டாக்டர் அய்யாவை சட்டபூர்வமாக சந்திப்பேன். மக்கள் கவலையின்றி திரையரங்குக்குச் சென்று போலீஸ் பாதுகாப்புடன் பார்க்கலாம்" ரஜினி கடிதம்.
-பாமக ராமதாஸ் திடீர் பல்டி "நோ மோர் வயலன்ஸ். பாபா படம் அனைவரும் பார்க்கலாம்!"
-ரஜினி குரு சச்சிதானந்த சுவாமிகள் திடீர் மரணம்.
-பாபா பக்கம், பாபா போட்டோஸ் என ஜால்ரா அடித்து வந்த ஆனந்த விகடன் பாபாவுக்கு அளித்த மதிப்பெண்கள் 39!

படத்தில் தேடினாலும் கிடைக்காத சுவாரஸ்யம் வெளியில் கொட்டிக் கிடக்கிறது! நீங்கள் மேலே படித்தது அதில் ஒரு சிறு துளி !

கமல் பேசிப்பேசியே "ஆளவந்தான்" அழிந்தது! ரஜினி பேசாமலேயே "பாபா" அழிந்தது!

இரு மெகா நாயகர்களையும் "சோதா" நாயகர்களாக ஆக்கிய பெருமை இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணாவையே சேரும்!

மொத்ததில்
பாபா தியேட்டரில் "போர்"பா! வெளியிலோ போர்ப்பா!

Thursday, October 01, 2009

'மௌனகீதங்கள்' திரைப்படத்தில் வரும் தந்தை-5 வயது மகன் உரையாடலைக் படியுங்கள்.
தந்தை முகத்தையே பிறந்ததில் இருந்து பார்த்திராத மகனிடம்

தந்தை: நாந்தாண்டா உன் அப்பா
மகன்: எப்படி நம்பறது?!
தந்தை (போட்டோவைக் காட்டி) உங்கம்மாவைக் கட்டிப் புடிச்சிட்டு இருக்கேன் பாரு! அதனால நாந்தாண்டா உன் அப்பா
மகன்: நான் கூட அம்மாவ அப்டிக் கட்டிப் புடிக்கிறேன்!
தந்தை: இது வேற கட்டிப் புடிக்கறதுடா!
மகன்: அது என்ன வேற?!
தந்தை: அத வெளக்கி சொல்றதுக்கு ஒரு மணி நேரம் ஆகுமே!
மகன்: அதுக்கெல்லாம் டைம் இல்லே! போயிட்டு வா நாளைக்குப் பாக்கலாம்!

அந்நாளைய பாக்யராஜின் குறும்புத்தனத்தை ரசிக்காமல் இருக்க முடியவில்லை!

Saturday, September 26, 2009

'ஆயுத' பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு......

courtesy: flickr.com

Friday, September 25, 2009

சிலரைத் திட்டும்போது 'போக்கிரிப் பயலே' எனக் கடிந்து வசை கூறுவர்.

போக்கிலி என்பதே போக்கிரி ஆகிவிட்டது. அது பேச்சில் ஏற்பட்ட திரிபு; தப்பு. போக்கிடம் இல்லாதவன், புகலிடமின்றிப் போனவன், தீங்கு செய்யவும் திருடவும் முரட்டுத்தனம் செய்யவும் துணிந்ததால், போக்கிலி, ஒரு கலகக்காரனைக் குறிக்கலானது; தீயவனைச் சுட்டியது.

அனாதையை 'ஏதிலி' என்பார்கள். 'ஏதுமிலித் தனியனேற்கே' என்பார் மாணிக்கவாசகர். போக்கிலிகளும், ஏதிலிகளும் இல்லா நாடே நல்ல நாடாகும்.

-பிழை திருத்தும் மனப்பழக்கம், தமிழண்ணல், மீனாட்சி பதிப்பகம்