Monday, July 15, 2013

(பாடல் வரிகளில்) பரதேசி டைரிக் குறிப்பு - 51


தோழர் பாலா அவர்கள் கவியரசு / கவிப்பேரரசு அவர்களின் கற்பனை ஒன்றாயிருக்கிறது / நன்றாயிருக்கிறது என்று சிலாகித்திருந்தார்.  அதை இங்கு தந்திருக்கிறேன்.


வைரமுத்துவின் வைர வரிகள்:
(நினைவெல்லாம் நித்யா-ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்)

"வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்.
இலையுதிர்க் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்."
கண்ணதாசனின் "ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் இருந்தும் என்ன? என் வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்" என்ற வரிகளுக்கு இணையானவை இவ்வரிகள்.

இது போன்ற இரண்டு பாடல்கள் என்னுள் கொஞ்ச நாட்களாய் உழன்று கொண்டிருந்தன. 

Sunday, July 14, 2013

(ஓடும்) பரதேசி டைரிக் குறிப்பு - 50

எச்சரிக்கை# 4 : வெள்ளி, சனி கிழமைகளில் ப.டை.கு வெளிவராது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்   (மீதி மூன்று எச்சரிக்கைகள்? - அட! தேடிப் பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள் வாசகர்களே!)




புகழ் பெற்ற அந்த இந்திய வீரரின் பெயர் தெரியும்.  தங்கப் பதக்கம் ஹாக்கி விளையாட்டில் வாங்கியிருக்கிறார் என்று மட்டும் (தவறாக!) அறிந்திருந்தேன்.  அவரைப் பற்றி முழுமையாய்த் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு வெள்ளி இரவு கிடைத்தது.