Showing posts with label தமிழ் சினிமா பாடல்கள். Show all posts
Showing posts with label தமிழ் சினிமா பாடல்கள். Show all posts

Monday, July 15, 2013

(பாடல் வரிகளில்) பரதேசி டைரிக் குறிப்பு - 51


தோழர் பாலா அவர்கள் கவியரசு / கவிப்பேரரசு அவர்களின் கற்பனை ஒன்றாயிருக்கிறது / நன்றாயிருக்கிறது என்று சிலாகித்திருந்தார்.  அதை இங்கு தந்திருக்கிறேன்.


வைரமுத்துவின் வைர வரிகள்:
(நினைவெல்லாம் நித்யா-ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்)

"வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்.
இலையுதிர்க் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்."
கண்ணதாசனின் "ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் இருந்தும் என்ன? என் வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்" என்ற வரிகளுக்கு இணையானவை இவ்வரிகள்.

இது போன்ற இரண்டு பாடல்கள் என்னுள் கொஞ்ச நாட்களாய் உழன்று கொண்டிருந்தன.