Tuesday, July 19, 2005

குடும்பம் இந்தியா, நான் கனடா என்றாகிவிட்ட நிலையில் உருவான தனிமைத் தவத்தை விரட்ட என்னை நானே எதிலாவது செலுத்திக் கொள்வதுண்டு.

இறை வணக்கம், பொது நூலகத்தின் தயவில் நல்ல நூல்கள், திரைப்பட ஒளி நாடாக்கள், எழுத்து, புத்தம் புது சினிமா என புதுப்பித்துக் கொண்டாலும் தனிமைத் தீ என்னைச் சமயத்தில் சுட்டெரிக்கிறது.

நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ள முடியாத பலவீனம், மற்றும் நல்ல நண்பர்களுடன் தொடர்பில்லாத நிலை எனும்போது இது இன்னும் அதிகமாகிறது.

இந்நிலையில்
இந்தப் பாடல்...

நான் உறங்கும் நாள் வேண்டும்
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
என் கண்ணில் நீர் வேண்டும்
சுகமாக அழ வேண்டும
யோசித்துப் பார்க்கும்பொழுது, அழும் அளவிற்கு கண்ணீர் இருக்கிறது; உறங்க நாளும், சாய தோளும் இல்லை......