Wednesday, July 20, 2005

தமிழ்ல எழுதினேன்பா.......

என்னப்பா தமிழ் படிக்க தெரியாதா?
சரி போ...அதையே
இங்க்லீஷ்ல ·பர்ஸ்ட் காமென்ட்-ஆ போட்டுர்றன்!

என்ன தமிழே தெரியாதா?
இங்க்லீஷ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணிர்றேன்!

அப்போ இங்க்லீஷ்லயே எழுதிருக்கலாமே?!

4 comments:

Ram C said...

கலக்கீட்டீங்க, ரங்கா..

ஆங்கிலத்தில் என் கவிதையை மாற்ற, சில சமயம் எனக்கே யோசனையாகத் தான் இருக்கும். தமிழின் அழகு ஆங்கிலத்திற்கு இல்லை என்றில்லை... எனக்கு அழகாக ஆங்கிலக் கவி பாடும் அளவுக்கு புலமையில்லை என்பதே காரணம்.

இருந்தாலும், ஆங்கில மொழிபெயர்ப்புக்குக் காரணம்... நம் தமிழார்வத்திற்கு தீனி போட்ட மாதிரியும் ஆகும், நம் வலைப்பதிவின் சில (தமிழ் அறியா) நலவிரும்பிகளுக்கு ஒரு பதிவைப் புரிந்து கொண்ட சந்தோஷம் அளித்ததாகவும் ஆகும்.

ஒரே பதிவில் இரண்டு மாங்காய்கள்.....

இது எப்படி இருக்கு?

ioiio said...

heheheheh :)

வெங்கி / Venki said...

ரங்கா உண்மையை சொல்றேன். என்னுடைய வலைப்பதிவிக்கு யார் யார் வராங்கனுத் தெரியல, வரவுங்க எல்லாருக்கும் தமிழ்த் தெரியுமானுத் தெரியல. அதனால தான் இங்க்லீஷ்ல ·பர்ஸ்ட் காமென்ட் போட்டேன். நிறைய கருத்துக்கள் வரணுமினு வேற ஆசை. அதுவும் ஒரு காரணம். தமிழ் படிக்கத் தெரிந்தவர்களும், உங்களைப் போன்ற சில நணபர்கள் மட்டும் என் வலைப்பதிவுக்கு வருவதால் இனி ·பர்ஸ்ட் காமென்ட் போடுவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்.

Unknown said...

Ranga, Tanglishla ezhudha solli kekkura guilty person yerkanave hehehehe-nnu sirichittaaru second commentla :)