Showing posts with label குஷ்வந்த் சிங். Show all posts
Showing posts with label குஷ்வந்த் சிங். Show all posts

Saturday, March 19, 2011

குஷ்வந்த் சிங் - 90!


இறந்தவர்களை விமர்சித்து இரங்கல் எழுதுவது தவறில்லையா? அதை எதிர்த்து பேச அவர்கள்தான் வரப் போவதில்லையே?

(சிரித்தபடி) அவர்கள்தான் உங்களை கோர்ட்டுக்கு இழுக்கப் போவதில்லையே?! மரணம் எல்லோருக்கும் பொதுவானது. அதைக் கண்டு யாரும் பயப்பட வேண்டியதில்லை.

எனக்கு ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. லண்டனில் இந்திய ஹை கமிஷன்-ல் நான் வேலை பார்த்தபோது மண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்திய ராணி இறந்து போனார். அவர் தன்னை எரியூட்டும் போது தான் புடவை அணிந்திருக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். கென்யாவைச் சேர்ந்த மயான பணியாளர்கள் என்னிடம் வந்து எப்படி புடவை கட்ட வேண்டும் என்று கேட்டார்கள். 'மன்னிக்கவும், எனக்கு புடவையை அவிழ்க்கத்தான் தெரியும்' என்று சொன்னேன். அவர்கள் கடுப்பாகி விட்டார்கள்! ஹை கமிஷனர் கிருஷ்ணன் மேனோனிடம் அதைப் பற்றி புகார் கூடச் சொன்னார்கள்!


இறந்த பிறகு எப்படி நினைக்கபடவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

விளைவுகளைப் பற்றிக் கவலையே படாமல் மனதில் பட்டதைப் பேசிய மனிதனாக!


எதை மிகவும் மிஸ் செய்வீர்கள்?

செக்ஸை. அதை ஏற்கனவே பல காலமாக மிஸ் செய்து விட்டேன். ஆனால், அதைப் பற்றி நான் கற்பனை செய்கிறேன்!


-குஷ்வந்த் சிங் பேட்டி, குமுதம் வார இதழ்