Saturday, September 24, 2005

விருத்தம் விசுவநாதன் சிலவேளை புதுக்கவிதையும் எழுதுகிறார். கொஞ்சம் ஸினிக்கலாக இருக்கும்.

சுறுசுறுப்பான சாலையில்
புதிய புதிய கார்களில்
விரைந்து செல்லும் மனிதர்கள் மேல்
பொறாமைப்படாதே;
ஒருவனுக்கு 'பைல்ஸ்'
ஒருவனுக்கு ஹார்ட்
ஒருவனை பொண்டாட்டி ஏமாற்ற
ஒருவனுக்கு பெண் கர்ப்பம்
(ஓட்டல் சர்வரிடம்)
ஒருவனுக்கு டாக்ஸ் பயம்
ஒருவனுக்கு மரண பயம்
ஒருவனுக்கு கான்ஸர்
ஒருவனுக்கு ஒரு கிட்னி
ஒருவனுக்கு மூணுபடி மூச்சிரைப்பு
ஒருவனுக்கு 'பேஸ் மேக்கர்'
ஒருவனுக்கு வேலை நிரந்தர பயம்

----

இவை அனைத்து இன்றி
மூக்கை நோண்டிக் கொண்டு
பிளாட்பாரத்தில் பராக்குப்
பார்த்துக் கொண்டிருக்கும்
நீ பாக்யவான்!

-சுஜாதாவின் புதிய பக்கங்கள், குமரிப் பதிப்பகம்

2 comments:

Narayanan Venkitu said...
This comment has been removed by a blog administrator.
Narayanan Venkitu said...

superb one Ranganathan, Enjoyed reading it.!! The last lines sum it up. Be happy with what you have.!! Live life one day at a time and ejoy what it brings to you.

Welcome back and a nice post to start.!!