Saturday, October 29, 2005

ஏறக்குறைய எட்டு ஆண்டுகளுக்குப் பின் எனது 'தொழிற்சாலை' வாழ்க்கை திரும்பியிருக்கிறது. இப்படி மொட்டையாய்ச் சொன்னால் புரியாதென்பதால் நிற்க!

திஸம்பர் 1994-ல் துவங்கிய எனது தொழிற்சாலை வாழ்க்கை ஆகஸ்ட் 1997 வரை நீடித்தது; அப்போதுதான் இடப்பட்டிருந்த 100 அடி சாலை, பெருகத்துவங்கிய 70 எண் பேருந்துகள்; இவைகளோடு அந்த வழியே செல்லும் மோட்டார் சைகிள், கார் வைத்திருக்கும், சீருடை அணிந்திருக்கும் சக ஊழியர்கள், மேலதிகாரிகள்! இவர்களின் தயவால் கே கே நகரிலிருந்து 7.55-க்குத்தான் கிளம்புவேன்!வாரத்தில் எட்டு நாட்கள் வேலை இருப்பதால், 8 மணிக்குத் துவங்கும் அலுவலகத்திற்கு 9 மணி வரை வரலாம்!

இருந்தாலும் நண்பர் தியாகு 8 மணிக்கு ஆஜர்! எல்லோரும் பார்த்துப் பொறாமைப்படும் சக ஊழியர் ஏ ஜி வி நிதானமாய் 9.50க்கு வருவார்! ஆ•பிஸ் முடிந்து, முன்னிரவில் நண்பர்களின் தயவில்தான் வீடு போய்ச் சேர முடியும்; அதற்கு முன்னால் 'மூச்! ரஜினி பாஷையில் சொன்னால் 'நொந்திடுவீங்க'!' மாலையில் வரும் வெண் பொங்கல் (அ) ரவா உப்புமா (தொட்டுக்கொள்ள சர்க்கரை!)வுக்கு அடிதடி நடக்கும்!

கனடாவில் வெள்ளையும் சொள்ளையுமாய் இருந்துவிட்டு, பெங்களூர் திரும்பிய எனக்கு 'வேணும்டா மச்சான்!'; வீட்டிலிருந்து அதிகமில்லை ஜெண்டில்மேன், 25 கிமீ தூரத்தில்தான் ஆபீஸ¤! காலை 7 மணி, 9 மணி, மாலை 2 மணி என ஷிப்ட் முறை! அதற்கேற்றாற் போல காலை 6, 7.55 மற்றும் பகல் 1.50 என அலுவலகத்தின் தயவில் பேருந்து! வீட்டிற்குச் செல்ல முறையே மாலை 4, 6 மற்றும் இரவு 8, 10 அல்லது 11 மணி; உலகின் முதன்மையான நிறுவனமொன்றுக்கு 24x7 (சேனல் இல்லப்பா!) Production Support. வேலை ரொம்பவே ஜாஸ்தி! (நம்புங்கப்பா!)

இதில் 9 மணி ஷிப்ட் இருக்கே......அதுதான் ரொம்ப கொடுமை!

காலை 7.30 மணிக்கே அரக்கப் பறக்க கிளம்ப வேண்டும்; ஈஸ்ட் எண்ட் என அழைக்கப்படும் ஜெயநகர் 9வது ப்ளாக் 'கால் நடை'யாய் நடந்து செல்ல வேண்டும்; 2ஏ என எண்ணிடப்பட்டுள்ள அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசுப் பேருந்தில் தூசு (இருந்தால்) தட்டி, நனைந்து (இருந்தால்) துடைத்து, ஏறி உட்கார்ந்தால்.........போவது நம் கையில் இல்லை. பன்னர்கட்டா ரோடில் ஜாம்; பிடிஎம் உடுப்பி கார்டனில் ஜாம்; வாட்டர் டாங்கில் ஜாம்; பிடிஎம் பஸ் டிப்போவில் ஜாம்;

மெ........து...........வா.............ய் ஊர்ந்தால் ஸிஎஸ்பி என அழைக்கப்படும் சென்ட்ரல் ஸில்க் போர்டில் ஜாம்! இதில் தப்பித்தால் அவுட்டர் ரிங் ரோடில் ஜாம்; என ஜாம்களுக்கிடையே பயணம். ஒரு தூக்கம் போட்டு எழுந்திருந்தால் பிடிஎம்தான் வந்திருக்கும்! முக்கி முனகி ஆபீஸ் வர 9.15 அல்லது 9.30 கிவிடும்!

சரி மாலை 6.00 மணிக்குத் திரும்பும்போதாவது ஓகேயா? இல்லவே இல்லை! ரொம்பவும் மோசம்......சமயத்தில் 8.00 அல்லது 8.30! ண்டவன் நம்மை சோதிக்கத் தொடங்கினால் இரவு மணி பத்து! இப்படித்தான் காலை 9 மணிக்கு வந்த நண்பர் ஒருவர் இரவு 8 மணி வண்டியில் உட்கார்ந்த போது, இன்னொரு நண்பரின் நினைவு வந்திருக்கிறது; செல்பேசியில் அழைத்தபோது நண்பர் பேருந்தில் இருப்பதாகக் கூறியிருக்கிறார்; 'என்னப்பா உன் மொகத்தையே காணுமே?' என இவர் வினவ, 'அட போய்யா! நான் 6 மணிக்கே கிளம்பிட்டேன்; இன்னும் பஸ்லதான் இருக்கேன்!' என்றாரே பார்க்கலாம்!

உள்ளே நுழைந்தாலோ வெளியுலகம் மறந்து போகும்; எல்லாம் சல்லிசாய் கிடைக்கிறது. சமூசாவிற்குச் சட்னி சைட் டிஷ்! பேல் பூரியில் கேரட் துருவித் துருவி போடுவார்கள்! அவ்ளோதான்! என்ன ஏதாவது 'த்திரம், அவசரம்'னு ஓடணும்னா...வேற வழியே கிடையாது...ஓடி(த்தான்) போகணும்! இல்லாட்டி பீஸ் பஸ் வர்ற வரைக்கும் உக்கார்ந்திருக்கணும்; அவ்ளோதான்!'

இதனால்தான் சொன்னேன் 'ஏறக்குறைய எட்டு ஆண்டுகளுக்குப் பின் எனது 'தொழிற்சாலை' வாழ்க்கை திரும்பியிருக்கிறது!' என்று!

ஆனால் ஒன்று, ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்கள் வருகை தரும், வைட்•பீல்ட் என அழைக்கப்படும் பகுதி எங்கள் அலுவலகத்திலிருந்து 4 கி மீ தொலைவில் உள்ளது. அதனாலேயே, எல்லா இடர்களையும் தாண்டி ஏதேனும் கொஞ்சம் சாதிக்க முடிகிறது!

1 comment:

Ram C said...

Interesting Job going experience.. eventhough it highlights the infrastructure difficulties of Bangalore.... :-< :-<