Saturday, May 20, 2006

அரசுக் கண்ணா, பெண்கள் போடும் டிரெஸிலேயே எதுடா செக்ஸி? சொல்லுடா?

மிஸ்டர் அரசு, சற்று ஒதுங்கிக் கொள்ளவும். இதில் எக்ஸ்பர்ட்டான திருவாளர் குஷ்வந்த்சிங் அவர்கள் இதைப் பற்றி பேச வருகிறார். "ம்கும்" தொண்டையைக் கனைத்துக் கொண்டு ஆர்வத்துடன் பதில் சொல்லத் துவங்குகிறார். சிங் "அதாவது..இந்தப் புடவை இருக்கிறதே, அது அலங்காரத்துக்கு அலங்காரம். எல்லாவற்றிற்கும் மிக வசதியானதும் கூட. சரியாக அணியப்பட்டால் பெண்களின் அங்க அசைவுகளையும், பின்புறங்களின் செழிப்பையும் அதைப் போல் வெளிச்சம் காட்டக் கூடிய உடை எதுவும் இல்லை. சரியாக வெட்டித் தைக்கப்பட்ட ரவிக்கை, அதேபோல் மார்பழகை எடுத்துக்காட்டக் கூடியது. வயிறு, இடைப் பகுதிகளைப் பளீரென்று தெரியும்படி காட்டவும் வல்லது. ஒல்லியான பெண்ணைப் பருமனாகவும், பருமனான பெண்ணை ஒல்லியாகவும் மாயம் செய்து காட்ட வல்லது இந்தப் புடவை. அத்துடன் வேறு சில விஷயங்களுக்கும் வசதியானது...." ஹல்லோ மிஸ்டர் சிங்...போதும் இத்தோடு நிறுத்திக் கொள்கிறீர்களா?

-அரசு பதில்கள், குமுதம் வார இதழிலிருந்து

No comments: