Saturday, September 12, 2009

உயிர் வரை உன்னோடு எழுதிய பட்டுக்கோட்டை பிரபாகர் 'தொட்டால் தொடரும்' நாவல் மூலம் சிகரம் எட்டியவர். மலிவு விலை மாத க்ரைம் நாவல்களைத் திறம்பட எழுதினாலும் 'காதல்' கதைகளில் அவருக்குத் தனி இடம் உண்டு.

மிக எளிமையான 'காதல் வயப்பட்டு, காலத்தின் கோலத்தால், வேறொருவன் கைபிடித்து, சந்தேகத்துக்கு உட்படும்' ஒரு பெண்ணின் கதை. ஆனால், படிக்கும்போது ஒரு க்ரைம் நாவலின் ஸஸ்பென்ஸ் இருக்கிறது. கதையின் இறுதிப் பகுதி 'சொடேர்' என நிமிர வைக்கிறது.

முடிவு, மேல் ஷாவனிஸம் என பெண்ணியவாதிகள் முத்திரையிட்டாலும், தாம்பத்திய உறவை அறிந்து, உணர்ந்து, அனுபவித்தவர்கள் நிச்சயம் மனதார ஏற்றுக் கொள்வார்கள்.

உயிர்வரை உன்னோடு, பட்டுக்கோட்டை பிரபாகர், பூம்புகார் பதிப்பகம், 1999 வெளியீடு

No comments: