Sunday, September 13, 2009

வேர்கள் பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். ஆனந்த விகடன் பொன்விழாவின் சிறந்த சமூக நாவலாக அங்கீகரிக்கப்பட்டு ரூ 20,000 பரிசு பெற்ற புதினம்.

கிருஷ்ணமணி-யில் 'பி.வி.ஆர்' சாயல் தெரிந்தாலும், முத்திரையாய் விழும் எழுத்துக்களால் நம்மை அயர வைக்கிறார். வெங்கடேசன், முத்துசாமி, பேங்கர் சீனு, வித்யாதரன், சியாமளி, பாட்டி, சதீஷ் என வெவ்வேறு பாத்திரங்கள் தங்கள் தனித்தன்மையோடு வலம் வருவதுதான் நாவலின் பலம். ஓரிரு அத்தியாயங்களில் எல்லோரையும் அறிமுகப்படுத்திவிட்டு, அழகாய் உலாவவிட்டு, கச்சிதமாய் முடித்திருப்பது அழகு.

தொடர்கதையை 'பைண்ட்' செய்து படிப்பது வழக்கொழிந்து போன இந்நாளில், கையில் கிட்டிய 'பைண்ட்' புத்தகம் இது! 'மாருதி' ஓவியங்களால் மெருகேறி களை கட்டுகிறது.

வேர்கள், கிருஷ்ணமணி, ஆனந்த விகடன்
(கொசுறு: ஆனந்த விகடனின் விலை 1981-ல் 75 பைசா!)

No comments: