Saturday, December 19, 2009

நட்பு

நட்பு என்பது நம்பிக்கைக்குரியதா? நம்பிக்கை தருவதுதான், ஓரளவுக்கு. பால்ய நட்பு, பள்ளி நட்பு, கல்லூரி நட்பு, உத்யோக நட்பு, அக்கம் பக்கம் வசிப்பதால் வரும் நட்பு, என்று எத்தனையோ தினுசு இருந்தாலும், எதை எந்த அளவுக்கு நம்பலாம் என்று ஆராய்ந்தால், ஒவ்வொன்றுக்கும் ஒரு பார்டர், ஓர் எல்லைக்கோடு வந்து விடுகிறது.

இயற்கை எப்படி என்றால், எது ஒன்று ரொம்ப உச்சமாயிருக்கிறதோ, அது மாறினால், படு மோசமாகிவிடும். நல்ல பழம் அழுகிவிட்டால் சகிக்க முடியாமல் நாற்றமெடுக்கிறது. சுத்தமான நெய் கெட்டுப் போனால் வயிற்றைப் புரட்டுகிறது. கள்ளிச் சொட்டு மாதிரியான பால், துளி அந்நிய வஸ்து சேர்ந்து போனால், கட்டி கட்டியாகத் திரிந்து எதற்குமே பயன்படாமல் போய்விடுகிறது.

இப்படித்தான் அத்யந்த சிநேகிதத்தில் கொஞ்சம் எங்கேயாவது விரிசல் ஏற்பட்டுப் போனால், அது பரம விரோதமாகிவிடுகிறது. அதிப்ரியம், அதிலே அடைகிற இன்பம், கொஞ்சம் பங்கப்பட்டாலும் பரம த்வேஷம், கோபம், துக்கம் என்றாகி விடுகிறது. தலைகீழாகி விடுகிறது. கவி காளிதாஸனுக்கும் போஜ ராஜனுக்கும் இருந்த நட்பு, பின்பு விரோதமாகிவிட்டதைப் போல, கம்பன் கதையும் இப்படித்தான். திருமலை நாயக்க மன்னனுக்கும் நீலகண்ட தீக்ஷ¢தருக்கும் இருந்த நட்பும் அதே தான்.

ஆக, நட்பு என்பதும் வாழ்க்கையில் நம்பக் கூடியதுதான். ஆனால் ஒரு ஸ்திதியோடு, தானே நின்று கொண்டு வளர்க்கலாமேயொழிய, ரொம்பவும் நெருங்கிப் போய் உரிமை கொண்டாடலாகாது.

-காஞ்சி பெரியவர்

4 comments:

கல்யாணி சுரேஷ் said...

//அதிப்ரியம், அதிலே அடைகிற இன்பம், கொஞ்சம் பங்கப்பட்டாலும் பரம த்வேஷம், கோபம், துக்கம் என்றாகி விடுகிறது. தலைகீழாகி விடுகிறது.//

உண்மைதான். அருமையான பதிவு. நன்றி.

அன்புடன் அருணா said...

ரொம்ப சரி!

aazhimazhai said...

arumai !!! unmaiyum kooda en aubavathil ithai naane anubaviththen !!!!

Sumi said...

All that i can say is thank you so much for posting MahaPeriyava's, it is amazing how He manages to convey even complex wordly stuff in simpler terms that even a layman like me can understand. Guru Krupayo Namaha. absolutely touched and moved.