Monday, June 28, 2010

நமக்கு ஏன் பொல்லாப்பூ? - 3

ஜே கே அவர்கள் நமக்கு ஏன் பொல்லாப்பூ? - 2 -விற்கு அளித்த பதில்.

குதிரை சிலையைப்பற்றி எனக்கறிந்த கூற்றுகள்.

உலகில் பல வதந்திகள் உண்டு பல நூற்றாண்டுகளாய் இவை நடைமுறையில் வந்துக்கொண்டு இருக்கிறது இதில் உண்மை எது என்று யாருக்கும் தெரியாது, நகர இதிகாசமாய் இதை கொள்ளலாம்.

குதிரை சிலையில் குதிரை ஒரே ஒரு முன்னங்காலை தூக்கி கொண்டிருந்தால் அதிலிருக்கும் வீரன் போரில் அடிப்பட்டு பின் மீண்டார் எனவும் இரு முன்னங்காலையும் தூக்கிக்கொண்டிருக்கிற மாதிரி சிலை இருந்தால் அவ்வீரர் போரில் வீர மரணம் அடைந்தார் எனவும், நாலு காலும் தரையில் இருந்தால் அந்த வீரன் போர் அல்லாத இயற்கை காரணங்களால் மரணமுற்றார் எனவும் சொல்லப்படுகிறது.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் சிலை மரணமுற்ற வீரர்களுக்கு மட்டுமே என பொருளில் உள்ளது மேலே கொடுக்கப்பட்டுள்ள மேற்கோள்கள் …

எனக்கு தெரிந்ததை சொல்லி நானும் உங்களை குழ்ப்பியதில் மகிழ்வடைகிறேன்.
நன்றி!
ஜேகே

No comments: