Monday, June 14, 2010

நிலவு!

புனே வாசகர் திரு சேகர் எழுதியது

வழக்கம் போல் கடந்த வாரமும் Sunday மாலை வீட்டிற்கு அருகில் உள்ள SOS VILLAGE-க்கு நண்பர்கள் சாய்ராம், பாலாஜி, அஜய் பரத், பாலாஜி-II அவர்களுடன் சென்றோம். Carrom, football விளையாடியது போக, சிறுவர்களுடன் garden-ல் அமர்ந்து பேசினோம். மிக்க அறிவாளிகள்.. sports, cinema பற்றி பேசி.. பத்தாம் வகுப்பு செல்ல இருக்கும் இரண்டு மாணவர்களுடன் மேற்கொண்டு என்ன செய்ய போகிறிர்கள்.... எல்லாம் மார்க் வருவதை பொறுத்து....என்று சொல்ல ..நண்பர்கள் 10 - 12 வகுப்பில் பெற்ற 95 - 98 % பற்றி சொல்ல.. சிறுவர்கள் முகத்தில் ஒரு உற்சாகம்.. அவ்வளவு மார்க் கிடைக்குமா என்றார்கள். முயற்சி செய்தால் நிச்சயம் என்றோம். Science group எடுத்து Engineering படித்து MBA செய்தால் வாழ்கையில் உயரலாம்.. நல்ல வேலை கிடைக்கும்.. .. வருமானம் என்ன வரும் என்று சொல்ல வாய் பிளந்தார்கள்..


நேரம் செல்ல, கடந்த 30 வருடங்களாக இயங்கி வரும் காப்பகத்தை சுற்றி காட்ட சிறுவர்கள் தயாரானார்கள். பலவிதமான பழ மரங்களை பார்த்தோம். நெல்லி மரத்தை உலுக்கி நெல்லிக்காய்களை தந்தார்கள். பாலாஜி, பலா மரத்தை முதன் முறையாக (சென்னையில் பிறந்து வளர்ந்தவர்) பார்த்து செல் போனில் படம் பிடித்து பலா சுளை விழுமா என்று மரத்தை ஒரு கை பார்த்தார். நகர் புறத்தில் வளர்ந்தவர்களுக்கு மாடு பால் தரும் என்று தெரியாது.. ஆரோக்யா பாக்கெட் மட்டுமே தெரியும்.

காப்பகத்தின் மதில் சுவருக்கு அப்பால் உள்ள எட்டு மாடி கட்டிடத்தை காட்டி தான் அங்கு பணிபுரிவதாக சாய்ராம் சொல்ல... சிறுவன், அங்கிள்.. நாளைக்கு அந்த ஆறாவது மாடி ஜன்னலை திறந்து எனக்கு கை காட்டுங்கள் ... நான் ஒரு ஜம்ப் செய்து இரண்டு நிமிடத்தில் அங்கு வந்துவிடுவேன் ... சரியா என்றான். அந்த சிறுவனை அணைத்து... இரண்டு நிமிடம் அல்ல ..... நீ அங்கு செல்ல குறைந்த பக்ஷம் ஒரு ஆறு வருடம் ஆகும்....அதற்க்கு பிறகு நீயும் சாய்ராம் அங்கிள் கூட சேர்ந்து அந்த ஆறாவது மாடியில் இருந்து இங்கு உள்ளவர்களுக்கு கை காட்டலாம் என்றேன். சிறுவனுக்கு புரிந்தது...நிலவை பார்ப்பது போல் அந்த கட்டிடத்தை பார்த்தான்.. ஆனால் முகத்தில் ஒரு வெறி... ஒரு உற்சாகம்... ஒரு சாதிப்போம்.... என்ற உணர்வு ஏற்பட்டதை கண்டோம். சூர்யா சொல்வது போல் கற்ப்போம்..கற்பிப்போம்...ஒரு பழ மரத்திற்கு விதை விதைத்த உணர்வுடன் வெளியே வந்தோம்.... நிலவு தெரிந்தது... பல வருடம் கழித்து பாலாஜி சாய்ராம் கூட பழங்கதை பேசுவோம்....!

1 comment:

இன்றைய கவிதை said...

கண்ணில் நீர் வரவழைத்து விட்டீர்கள், அந்த சிறு சிறார்களில் ஒருவர் வளர்ந்தால் கூட நீங்கள் பெருமை கொள்ளலாம்.

தொடருங்கள், வாழ்த்துக்கள்

நன்றி
ஜேகே