Sunday, June 27, 2010

May THE ALMIGHTY illuminate!

சென்னை வாசகர் திரு ஜி ஆர் ஷங்கர் அவர்கள் எழுதியது.

நன்றி பருப்பு ஆசிரியர் அவர்களுக்கு, எனக்கும் கணினி தமிழ் கொடுத்ததற்காக....

PC உதவியுடன் நேரடியாகவே தமிழ் முதலில் எழுதுவதால் பக்தி ரசம்..... (இது எழுத எனக்கு Maturity காணாது...Just try அவ்வளவுதான்....)

சந்தியா வந்தனம் பற்றி ஹிந்து சாஸ்த்திரங்கள்ல நெறைய சொல்றாங்க... நான் இதை ஒழுங்கா பண்றது இல்ல... நம்மில் பலரும்....ஏன்னு கேட்டா, ஆயிரம் காரணங்கள் சொல்வோம்..... எதுவுமே இங்க compulsion இல்ல.. அதான்...

ஆனா, சந்தியா வந்தனம் - காயத்ரி மந்தரம் - சூர்ய நமஸ்காரம் -இப்படியே போயி...பல்வேறு மதங்கள்ல உள்ள அடிப்படை கோட்பாடுகளின் origin என்னானு பாத்தா....(or End of the thread) னு சொல்லலாம்.... அது உருவம் உள்ளதோ... அற்றதோ....பரம்பொருள்...ஆதி பகவன்...

உளன் எனில் உளன் அவன் உருவம் - இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன்


என்ன ok yaa...

இதுக்கும் விளக்கம் வேணுமா என்ன..."இருக்கார்னா அவர் உருவத்தோட...இல்லனா...உருவம் இல்லாம..." (Thanks to அமரர் சுஜாதா)

ஒம்: என்னும் ஒங்காரத்திலிருந்து துவங்கிய உலகம்.. னு சொல்றாங்க....(கொஞ்சம் colloquial-ஆ சொன்னா அண்ட வெளில உள்ள சப்தமான சத்தம்... ; அறிவியல் ரீதியா னா - அண்ட வெளியில உண்டான வெடிப்பு - பால் வீதி - சூரியன் - சிதரிய தீக் கோளங்கள்....னு.. போலாம்...)

இதுக்கு எல்லாம் காரணம் யார் னா?...அதுக்கு விடை என்னவா இருக்குமோ....அது...The obvious and The omnipresent...



என்னோட பக்தி எல்லாம் ரொம்ப சின்னது. எப்போதாவது தோணிணா கோவில். Exams, Interviews or Accounts not tallied in MIS னா கண்டிப்பா "விடல்" உண்டு. (நம்ம "Big street" - "முத்தவர்" க்கு). கொஞ்சம் ஜாஸ்தி பிரச்சனைனா போகுமிடம், ஏற்கனவே "பார்த்த"பெருமாள் கோவிலில் உள்ள அழகிய "சிங்கரை".

Just a simple management lesson தான். We feel that we switched our burden to him, our mind is free from worries and we think we may able to concentrate our regular activities during the course of "Time".

Time is a best medicine தான். Really.

எனது பள்ளி காலங்களில், தமிழ் பாட திட்டத்தின் செய்யுட் பகுதி - கடவுள் வாழ்த்தில் தொடங்கி திருக்குறள், நாலடியார், கம்பர், சீவக, சிலம்பு, வளை, மணி, குண்டலம், குறவஞ்சியர், பிள்ளை தமிழ், பாரதி, பாவேந்தர் என நீளும். (திரு.வி.க, மு.வரதர்... போன்றவர்களே கடைசில தான் வருவாங்க...). இப்போ எப்படின்னு தெரியல. (அரசியல் வாரிசுகளுக்கும், சினிமா காரங்களுக்கும் காலமல்லவா...)

எங்க School Assembly / இலக்கிய மன்றங்கள் - ல, கடவுள் வாழ்த்துனு அறிவிச்ச உடன் கிட்டத்தட்ட 1200 மாணாக்கர்களும் சேர்ந்து ஒண்ணா கத்துவோம். என்ன கத்தினோம்னு அப்போ தெரியாது. உலகம்னு ஆரம்பிச்சு வைகை எக்ஸ்பிரஸ் (அப்போ எல்லாம் இந்த train தான் ரொம்ப fast. அதான்..) மாதிரி போய் சரண் நாங்களேனு முடிப்போம்.

இந்த உலகங்கள் எல்லாத்தையும் படைச்சு, காத்து, அழிக்கற வேலைகளை - just like that - ஒரு முடிவில்லா விளையாட்டு மாதிரி செய்யற பரம்பொருளை வணங்கறேன்னு கம்பர் தன் ராமாயணத்துல முதல் பாடலா சொல்றாரு. அந்த பாட்டுதான் எங்க School ல கடவுள் வாழ்த்து.

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.


"டேய், ரொம்ப ஓவர்டா". "காயத்ரி மந்திரம்னு ஆரம்பிச்சு எதையோ எழுதிருக்கே!" -ன்னார் பருப்பு ஆசிரியர்.
"சார், இருங்க. அது என்னனா... காயத்ரி மந்திரத்தை இயற்றியவர் யார்?"
பருப்பு ஆசிரியர் "???"

Google search பண்ணாம, யார் கிட்டேயும் தொடர்பு கொள்ளாம நீங்க பருப்பு ஆசிரியர்-க்கு mail பண்ணுங்க. 1st right answer யாரோ அவரே IK -ன் FANTASTICAT ஆவார்!!

No comments: