Thursday, December 16, 2010

ரஜினியின் அறிமுகப் பாடல்கள் - 2

தர வரிசை# 09
பாடல்# 'மனிதன்..மனிதன்..இவன்தான் மனிதன்...'
படம்# மனிதன்
இசை# சந்திரபோஸ்
பாடல்# வைரமுத்து
பாடியவர்# மலேஷியா வாசுதேவன்

இந்தப் பாடலுக்குப் பின்னால் சின்ன சுவாரஸ்ய குட்டிக் கதை.

'வானத்தைப் பார்த்தேன்' என்கிற மற்றுமொரு தத்துவப் பாடல் இருப்பதால், பாடலைச் சேர்க்க வழியில்லாமல் அப்படியே வைத்திருந்ந்தாகவும், ரஜினிகாந்த் தலையீட்டால் 'டைட்டில் ஸாங்' என்றழைக்கப்படும் 'தலைப்பு பாடல்'-ல் ரஜினியின் வாயசைப்போடு வெளிவந்ததாகவும் ஏவி எம் சரவணன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார் (ஏவி எம் 60 சினிமா, ஏ வி எம் சரவணன், ராஜராஜன் பதிப்பகம்).

வாழும்போது செத்துச் செத்துப் பிழைப்பவன் மனிதனா...
வாழ்ந்தபின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா...
என்கிற வைரமுத்து வரிகள் வீர்யம் மிக்கவை, எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவையும் கூட.

அதென்னமோ தெரியவில்லை, சந்திரபோஸ்/வைரமுத்து கூட்டமைப்பில் உருவான பாடல்களில் வரிகளும், இசையும் இழைந்தோடுவது நிச்சயமான உண்மை.

No comments: