Monday, December 20, 2010

ரஜினியின் அறிமுகப் பாடல்கள் - 3

இடம்# 08
பாடல்# 'ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்..'
படம்# முள்ளும் மலரும்
இசை# இளையராஜா
பாடல்# கண்ணதாசன்
பாடியவர்# எஸ் பி பி



இயக்குனரின் நடிகர் என்கிற காலகட்டத்தில் ரஜினி நடித்த படம் 'முள்ளும் மலரும்'. தண்ணியடித்து விட்டு ரஜினி பாடுவதாய் அமைந்திருந்த இப்பாடலை

'ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே...
நாந்தாண்டா என் மனசுக்கு ராஜா, வாங்குங்கடா வெள்ளி கூஜா'

எனத் துவங்கி, முழுதும் 'பிதற்றலாக'வே எழுதியிருந்தார் கவியரசு! ('பட்டு' திருந்தியவராயிற்றே, கேட்கவா வேண்டும்?!) அப்படியிருந்தாலும் கடைசியில்...

'நீ கேட்டா கேட்டத கொடுக்குற சாமியைப் பாத்து கேளுங்கடா!'

என்று முடித்திருப்பதை என்னவென்று சொல்வது?!நடித்திருப்பவருக்கும் 'தண்ணி' பட்ட பாடு, கேட்கவா வேண்டும்?!

கையாலாகாத கோபத்தில், கண்டபடி குடித்துவிட்டு, ஆடிப்பாடும் இந்தப் பாட்டு இயக்குனருக்காகவும், இசைக்காகவும் எட்டாவது இடத்தில்!


பாடலின் வரிகளுக்கு இங்கே சொடுக்கவும்.


No comments: