கடந்த ஆறு வருடங்களாக அலுவலகத்திலதான் எனது புத்தாண்டு துவங்கியிருக்கிறது. அதிகாலை மூன்றுக்கு விழித்துக்கொண்டு, நான்கே-கால் மணிக்குக் காரில் ஏறி, ஐந்துக்குள் அலுவலகத்தில் அடைந்துவிடும் புத்தாண்டு எனக்கு!
ஸப்போர்ட் ப்ராஜக்ட்-லிருந்து விலகியதால், இந்த வருடம் புத்தாண்டு வித்தியாசமாயிருந்தது! ஐந்திற்கு வைத்த அலாரத்தைத் தணித்துவிட்டு, மெதுவாய் ஆறரைக்கு எழுந்து, நிதானமாய்க் குளித்து, மிக நிதானமாய் சந்தியாவந்தனம், பூஜைகளை முடித்து, ராகி குட்டா ஆஞ்சநேயர் ஆலயத்துக்குச் சென்றோம்.
ஸப்போர்ட் ப்ராஜக்ட்-லிருந்து விலகியதால், இந்த வருடம் புத்தாண்டு வித்தியாசமாயிருந்தது! ஐந்திற்கு வைத்த அலாரத்தைத் தணித்துவிட்டு, மெதுவாய் ஆறரைக்கு எழுந்து, நிதானமாய்க் குளித்து, மிக நிதானமாய் சந்தியாவந்தனம், பூஜைகளை முடித்து, ராகி குட்டா ஆஞ்சநேயர் ஆலயத்துக்குச் சென்றோம்.
பத்தடிக்கு விக்னேசுவரர் இருந்தாலும், கோயிலுக்கு அனுமன் பெயர் சூட்டியிருப்பது அதிசயம். கண் கொள்ளாமலிருக்கும் விநாயகரைத் தரிசித்து, அன்னபூரணிக்கு அரிசியிட்டு (சாப்பாட்டுக்கு யாரும் கஷ்டப்படக்க்கூடாது மற்றும் நேரத்துக்குச் சாப்பாடு கிடைக்கவேண்டுமப்பா!), 40 படிகள் (சுமார்!) ஏறினால் சிவ பெருமான், ராம லக்ஷ்மணர்கள் சகித ஆஞ்சநேயரைக் கண் குளிரத் தரிசிக்கலாம்.
பசியெடுத்ததில், மெதுவாய் நடந்து எஸ் எல் வி உணவகத்துக்குச் சென்று மாடியில் அமர்ந்தோம். இரண்டு மேசைகள் மட்டுமே நிரம்பியிருந்தன. 'தோசை' சாப்பிட்டுப் போரடித்துப் போனதால், இட்லி வடையுடன், வித்தியாசமாய் 'பிஸி பேளா பாத்'! அடடா! அட்டஹாஸம்(அன்னபூரணி எ·பெக்ட்!)!! 'அடக்கி வாசிக்கும்' விஷ்ணு கூட அடம்பிடித்து 'பிஸி பேளா'வை ஒரு பிடி பிடித்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! சாப்பிட்டு, அரை கப் (1 by 2) கா·பியைச் சுவைத்தபோது 'இதை விட வேற என்னடா வேணும் ரங்கநாதா உனக்கு?!' என்றது மனது.


விஷ்ணுவிற்கு ஒரு ஆட்டோ, ஒரு லாரி, ஆரஞ்ச் புக் (ஜயநகர் பிள்ளையார் நோட்டீஸ் கம் மினி புக்-ஐக் காட்டி ஏமாற்றி விட்டேன்!), எனக்கு சக்தியுடன் பக்தி + தினகரன் + துக்ளக், அம்மாவுடன் மீண்டும் ஒரு மினி கா·பி (அதிகமில்லை ஜெண்டில்மேன், ஐந்தே ரூபாய்தான்!, விஷ்ணு இதிலும் பங்கு, ஆச்சரியம்!) என என்னுடைய புத்தாண்டின் முதல் நாள் முதல் பாதி 'நிம்பவே' வித்தியாசம்தான்.
No comments:
Post a Comment