Monday, August 29, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 16

நான் உறங்கும் நாள் வேண்டும்...
சாய்ந்து கொள்ள தோள் வேண்டும்...
என் கண்ணில் நீர் வேண்டும்...
சுகமாக அழ வேண்டும்...!

நன்றி கவிப்பேரரசு அவர்களே....!நன்றி.. ஒவ்வொரு முறை கேட்கும்போதும் இவை அனைத்தும் நம் கூட இருப்பது போல எழுதியமைக்கு! சோகத்தைக் கண்களை தேக்கி வைத்திருக்கும் மாதவி - அனுசரணையாய் சூப்பர் ஸ்டார் - இதமான ஒளிப்பதிவு/இசை...போதாதா? பார்த்துக்கொண்டே இருக்கலாமே!


மெட்டமைத்த-தென்னவோ எண்பதுகளில்...அன்றும் என்றும் இளமையாய் இருப்பது எப்படி?! இசை 'இளைய'ராஜா - இளமைக்கு என்ன குறைச்சல்...?! அதுவும் ஆர்யா, த்ரிஷா இருக்கும்போது 'சர்வம்'-ம் இளமைதானே...காதலை கதையாகவும் சொல்லலாம்...இது போல கவிதையாகவும் சொல்லலாமே?!


மேன்மையான இசை, வளமான பின்னணிக் குரல்கள், நெஞ்சை அள்ளும் வரிகள்...இருந்தும்...'டிப்பிகல் எண்பது' படமாக்கப் பாடல்களில் ஒன்றாய்ப் போனது துரதிர்ஷ்டம்....ஜானகி அம்மாவின் ஹம்மிங்-ஐ ரசிக்காதவர்கள் உண்டோ இங்கு?!

No comments: