Saturday, June 02, 2012

இளையராஜா!

இளையராஜா பிறந்த நாளை எல்லோரும் கொண்டாடி ‘ஆஞ்சு, ஓஞ்சாச்சு’!



வித்தியாசமான கோணத்தில் இளையராஜாவை ஆராயும் முயற்சி இது….திரை வடிவம் வராமலேயே முடங்கிப் போன பாடல்கள் இரண்டை முன் வைக்கிறேன் (கமல், ரஜினி படமாய் அமைந்தது தற்செயல்!)


சிப்பிக்குள் ஒரு முத்து வளர்ந்தது… (விக்ரம்,1986)


கே ஜே யேசுதாஸ்/ஜானகி துள்ளல் குரல்களில் கவிப்பேரரசு எழுதியது.  டிம்பிள் கபாடியா டூயட்டை நெருங்கி அமைந்ததால் நீக்கப்பட்டது.

மென்மை என்றில்லாமல், டப்பாங்குத்து என்று சொல்ல முடியாமல் இசைஞானி அமைத்த ஜோடிப் பாடல் எவ்வளவு பேருக்கு நினைவிருக்கும்?

பாட்டு அமைந்த ராகம் என்னங்ணா?


புத்தம் புது பூப் பூத்ததோ… (தளபதி, 1991)


கே ஜே யேசுதாஸ், எஸ் ஜானகி குரல்களில் நெகிழ வைக்கும் - கவிஞர் வாலி எழுதியது..  படத்தின் நீளம் கருதி குறைக்கப்பட்டது.

படத்தின் சூழலுக்குப் ஏற்ற வகையில் பூபாள ராகத்தில் (ரஜினி-பானுப்ரியா திருமணத்திற்குப் பின், ரஜினியின் வாழ்வை மாற்றிப் போடும், விடியலைத் தரும்) இசைஞானி பொருத்தியதை எப்படிப் புகழ்வது?

பாட்டின் விசேஷம்..இரவில் விளக்கணைத்து கேட்டுப் பாருங்கள்.  பூபாள ராகம் தரும் தாலாட்டில் சுகமாய் உறக்கம் வரும்!

இது போன்ற சூழல்களில் இசையமைப்பாளரின் மனநிலை என்னாவாயிருந்திருக்கும்?


இளையராஜாவின் பாடல்களை அருவியாய்ப் பொழிந்து குளிர்ச்சியாய் தந்த ஆர் வி எஸ் ஐயாவிற்கு என்னால் முடிந்த காணிக்கை…

1 comment:

Aravindh said...

Good one.. You can check in my blog also regarding these kinda songs..

http://sivigai.blogspot.com/2011/04/blog-post.html