Saturday, March 20, 2010

ந-ன !

'ந-ன இரண்டும் ஒரே சப்தமாகத்தானே இருக்கு? எதற்கு இப்படி இரண்டு எழுத்து?' என்று ரொம்ப பேருக்குத் தெரியவில்லை. வாஸ்தவத்தில் அவை வித்யாஸமான சப்தங்கள்தான்.

'ந' என்கிறபோது நாக்கு நுனி பல்லும் மேலண்ணமும் சேர்கிற இடத்துக்குக் கிட்டே பல், அண்ணம் இரண்டையும் தொடணும். 'ன' என்கிறபோது நாக்கு நுனி இன்னும் வளைந்து அண்ணத்தின் உள்பக்கமாக மட்டும் தொடணும்.

'அந்த' என்று சொல்லிப் பாருங்கள். அப்போது 'ந்'-னில் நாக்கு எங்கே தொடுகிறதோ அங்கேதான் 'ந' வரிசை பூராவிலும் தொடணும். 'அவன்' என்கிறபோது 'ன்'-னில் நாக்கு தொடுகிற இடத்திலேயே 'ன' வரிசை பூரா தொடணும். இது தமிழுக்கே உரியதான சப்தம்...

'ந' பல்லை நாக்கு தொடுகிற dental; 'ண' அண்ணத்தைத் தொடுகிற cerebral. தமிழில் மட்டும் உள்ள 'ன'வும் cerebral மாதிரிதான். 'ந'வுக்கும் 'ண'வுக்கும் நடுவிலுள்ள இடத்தைத் தொட்டால் உண்டாகும் சப்தம்.

-காஞ்சி மஹாபெரியவர், தெய்வத்தின் குரல்

No comments: