Wednesday, October 05, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 26

விஜயதசமி பெசல்....

தனியார் தொலைக்காட்சி மாதிரி நம்மால 'உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக'னு போட முடியாது!! இருந்தாலும், 'நச்'னு நாலு சீன போட்டா நல்ல இருக்குமேன்னு யோசிச்சேன்... அதால இதோ வருகுது....

ரஜினி சாரோட 'நடிப்பு' சமாசாரம் 1976-ல ஆரம்பிச்சு 1983-ல முடிஞ்சிருச்சுன்னே சொல்லலாம். வித விதமான characters-ல மின்னின அவரு 'கமர்ஷியல்' ஹீரோ ஆனது தமிழ் சினிமாவின் துரதிர்ஷ்டம். அவரும், ஸ்ரீதேவியும் காதலைப் பகிர்ந்துகிறதை நீங்களும் பார்த்து ரசியுங்களேன்...


நம்ம சாதி சனம் என்ன சொல்லும்...நம்ம சாதில இதெல்லாம் வேணாய்யா...நம்ம சாதில பொறந்துபுட்டு இப்டில்லாம் செய்யலாமா...என இன்றும் புலம்பும் மனிதர்கள் நம்மோட இருக்கிறாங்கன்னு நினைக்குறப்போ வேதனையாத்தான் இருக்குது...பொறப்ப தாண்டி இப்போ 'சாதி' வேலைக்குள்ளையும் வந்திருச்சு...'நீ ஐ.டி-யா, பினான்ஸ்-ஆ, மார்கெடிங்-ஆ, பேங்க் மேனேஜர்-ஆ, கன்னடமா, தமிழா, தெலுகு-ஆ, பெங்காலி-ஆ' எனக் கேள்வி போட்டு, ஸ்டேடஸ் பாத்து வெச்சு ஜாயின் ஆகுறதப் பாக்குறப்போ வேதனையாத்தான் இருக்குது...இந்த நல்ல நாள்ல நம்மோட வேத்துமை சுவத்தை உடைச்சிப் போட்டு ஒத்துமையா நின்னு தேர் இழுப்போம் வாங்களேன்...


இது நெசம்மாவே சூப்பர் சீன்...அப்பாவுக்கும், பையனுக்கும் நடக்குற வாக்குவாதம்... அதுவும் எந்த ரேஞ்சுல நடக்குது பாருங்க...இதுக்கு மேல ஏதும் 'பேய'த் தேவையே இல்ல...!


எவ்ளோ இன்டர்வியு பாத்தாலும் இத்தை மறக்க முடியுமா...? நெசம்மாலுமே இப்டி ஒரு பேட்டிய நம்ம சி எம், பி எம் கிட்ட எடுக்க முடியுமா...? அட்லீஸ்ட் ப சி-கிட்ட...?!! அட போப்பா...சிதம்பரம் சாரு வரச் சொல்லிபோட்டு மறந்துருவாரு! எங்க அண்ணாத்தை சொன்னா போல 'மெமோரியே இல்லாத PC-ப்பா அவரு!'



விஜயதசமி வாழ்த்துக்கள்!

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

விஜயதசமி வாழ்த்துக்கள்!