Thursday, December 15, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 33

நேற்று என் அப்பாவின் பதினாறாவது ஆண்டு நினைவு தினம்.

பத்து வருடங்கள் கழித்து பிறந்ததால் என்னவோ என் மீது படு பாசமாய் இருந்தார் என் அப்பா. இன்று வரை என் தம்பிக்கும், தங்கைக்கும் அதனால் என் மேல் கொஞ்சம் 'காண்டு'!

அவரை மாதிரி இருக்க முயற்சி செய்கிறேன் என்றெல்லாம் பொய் சொல்லப் போவதில்லை. அது முடியாது, நடக்காது என்பதை ஒப்புக் கொள்ளும் துணிச்சல், வெட்கம் இல்லாமல் வந்து விட்டது.

யாருக்கும் தாய் / தந்தையை அகாலத்தில் இழக்கும் துர்பாக்கியம் வரவே கூடாது. அதனால் இந்த நாளில் அப்பாவிடம் யாசிப்பது ஒன்றுதான் 'எல்லா அப்பாக்களையும், அம்மாக்களையும் அவா புள்ளைங்களோட ரொம்ப நாள் நோய் நொடி இல்லாம வாழ வைப்பா !'

'லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து' - என் அப்பாவுக்கு பிடிச்ச வரிகளைத்தான் நான் யாசிக்கிறேன். யோசிக்காமல் என் அப்பா ஆசீர்வதிப்பார்!

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து'

அன்புடன் அருணா said...

பூங்கொத்து அப்பாவுக்கும் புள்ளைக்கும்!!