Monday, January 16, 2012
நண்பன்...!
Sunday, October 03, 2010
எந்திரன் - முகப்புத்தகக் குறிப்புகள்!
'வில்லத்தனம் பண்ணுற எந்திர ரஜினிய ஏம்பா சைண்டிஸ்ட் ரஜினி அடிச்சே கொல்லாம விடுறாரு?!' - படம் பார்த்த அப்பாவி ரசிகனின் கேள்வி...அவனால் நல்ல ரஜினி 'அடிக்காமல்' இருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை:-) ஆனால், அந்த அசுரனை, சைண்டிஸ்ட் அறிவு ரீதியாக 4 வழிகளில், 'எதிர் கொள்வதை' அதே ரசிகனுக்குப் புரியும்படி எடுத்த இயக்குனருக்கு ஒரு சபாஷ்!
சைண்டிஸ்ட் 'குறுந்தாடி'யும், எந்திர வில்லனின் 'கிருதா'வும் இனி தமிழ் நாட்டில் எங்கும் காண முடியும்! - எல்லாம் ரஜினி இஷ்டைலு மற்றும் இளமை!

'சிவாஜி' பார்த்த பின் - வெள்ளை ரஜினி, மொட்டை ரஜினி என்று சிகரத்தைத் தொட்ட ரஜினி இனிமேல் என்னதான் செய்ய முடியும்?! 'எந்திரன்' பார்த்த பின் - 'சிவாஜி' வேஸ்டுப்பா!
இன்ட்ரோ ஸாங் கிடையாது, பஞ்ச வசனங்கள் இல்லை, சைண்டிஸ்ட் சண்டை கூடப் போடாமல் ஓடிப் போகிறார்! - இப்படி எல்லாம் இருந்தாலும் ரஜினி என்கிற நடிகரின் இமேஜ் படம் முழுவதும் காக்கபட்டிருப்பதைக் காணும்போது ஜாலி-யாய் இருக்கிறது!
அந்த காலத்துல சிவாஜி, கே ஆர் விஜயா 'என்னோடு பாடுங்கள்'-னு டூயட் பாடும்போது பாத்தா 'வயசு' நல்லாவே தெரியும்! ஆனா இப்ப? ரஜினி (60), ஐஸு(40) 'காதல் அணுக்கள்'-இல் இளமையோ, இளமை:-) எல்லாம் டெக்னாலாஜியாம், அப்டிங்களா?!!
எந்திரன் - ஒரு அனுபவம்!
எந்திரன் ஷங்கர் ஏனைய படங்களைப் போலச் சாதாரணமாய்த் துவங்குகிறது. வசீகரன் நேரத்தைச் செலவிட்டு, காதலைத் துறந்து, ஒரு எந்திரனைப் படைப்பது பத்து நிமிடங்களில் சொல்லப்பட்டு விட, துவங்குகிறது 'சிட்டி'யின் அப்பாவித் துடுக்குத்தனங்கள்! காவலருக்கு 'வெட்டு'வது, குப்பத்தில் சட்டென 'காளி' அவதாரம் எடுப்பது, சனாவுக்கு நவீன முறையில் 'சொல்லி'க் கொடுப்பது, ரயிலில் 'சுத்தி, சுத்தி' அடிப்பது, கருணாஸ் / சந்தானம் 'வெறுப்பேற்றுவது', கொசுவைத் தேடிச் செல்வது, பர்த்டே பார்ட்டிக்கு 'ஸ்டைலாய்'ச் செல்வது எனச் சிட்டி நம் மனதைக் கொள்ளை கொள்வது இங்குதான்! இங்குதான், சுஜாதாவையும் நம்மால் மறக்கமுடியவில்லை!
இவ்வளவு இருந்தும், சிட்டியைத் தலைமை நாயகர் போரா நிராகரிக்க, துவங்குகிறது வசீகரனுக்குச் சவால்கள்! எப்படியும் சிட்டியை 'மனித'னாக்கியே விடுவது என முயற்சித்து, வெற்றியும் பெற்றபின், மிகப் பெரிய 'சோதனை' வசீகரனுக்கு வருகிறது! சோதனையில் 'சிட்டி'யை வசீகரன் அழித்துவிட, போராவிடம் அடைக்கலமாகும் 'சிட்டி' படு சுட்டியாகி, கெட்டுப்போய், சிட்டியைக் கலக்குகிறான், வசீகரனையும் வெல வெலக்கச் செய்கிறான்! எப்படித்தான் தந்திர எந்திரனை எதிர்கொள்கிறார் வசீகரன்?
ரஜினி என்கிற காந்தம் படம் முழுவதும் மூன்று வேடங்களில் நம்மை ஈர்க்கிறது. கமல், ஷாரூக் என்கிற பிற கலைஞர்களிடம் சொல்லப்பட்ட கதையை எந்தவித பிரச்னையும் இல்லாமல் ஏற்றுக்கொண்டு, 'அரிமா'வில் சவாரி செய்திருக்கும் மகத்தான கலைஞனுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!
ஐஸ்-ரஜினி ஜோடி புதுசாகவும், இளமையாகவும் 'காதல் அணுக்கள்' பாடலில் இருப்பதை மறுக்க முடியாது. அதே போல 'அரிமா அரிமா'வின் கம்பீரமும் கூட. ஐஸ¤க்குப் பாடல்களில் வேலை அதிகம். ஏனைய நேரங்களில் குறைந்த ஆடைகள்(ஹி!ஹி!).
ஏ ஆர் ரெஹ்மான் பாடல்களை முதலில் கேட்டபோது அவ்வளவாக சுவாரஸ்யமாயில்லை தான். ஆயின், பாடல்களைத் திரை வடிவில் கொண்டு வரும்போதும், ரஜினி-ஐஸ¤டன் காணும்போதும், ஒற்றிக் கொள்ளும் ஒளிப்பதிவில் காணும்போதும் 'எங்கேயோ' போய்விடுகின்றன.
படத்தின் ஹைலைட் ரத்னவேலு. மனிதர் 'உழைத்திருப்பது' நன்றாகத் தெரிகிறது. நிசம்மாவே ரத்னவேலு இல்லையென்றால் இரு வருடங்களில் எடுத்திருக்க முடியாதுதான் போலும்! இதே போல, ஸ்டண்ட், ஹைடெக் காட்சிகள் என எல்லாவற்றிலும் நேர்மை இருப்பதைச் சொல்லியே ஆக வேண்டும்.
'சிவாஜி'க்குப் பிறகு ரஜினி என்னதான் செய்யமுடியும் என்கிற கேள்விக்குறியை, ஆச்சரியக் குறியாக்கியிருக்கும் இயக்குநரை எப்படிப் பாராட்டுவது?! 'Hats Off' ஷங்கர்! - வேறென்ன சொல்ல?!
எந்திரன் திரைப்படத்தை 'என் பார்வை'யில் அடக்கிவிட முடியாதுதான். ஏனென்றால், எந்திரன் நமக்கு, தமிழ் சினிமாவுக்கு, இந்திய சினிமாவுக்கு ஒரு அனுபவம்.
Monday, August 09, 2010
Come September 24!

ரஜினி உரை-யோடு எனக்குப் பிடித்தவை...
-'ஷங்கர் ஸார்! நடிப்பையே பொழைப்பா வெச்சிகிட்டு இருக்கறவங்களுக்கு சான்ஸ் குடுங்க; பொழுதுபோக்கா நெனச்சு வந்து நடிச்சிட்டு போறவங்களுக்கு குடுக்காதீங்க!' - தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் திரு ராதாரவி அவர்களின் பஞ்ச்!
-ரஜினி பாடல்களுக்கு சிம்பு ஆடியது; அச்சு அசலாய் அந்தந்த பாடல்களுக்கு ரஜினியின் மூவ்மெண்ட் எப்படியோ அப்படியே ஆடியது ஆச்சரியம். நமது சென்னை வாசகர் திரு சௌமி அவர்கள், 'விண்ணைத் தாண்டி வருவாயா' பார்த்தபின் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது 'சிம்பு-விற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது; முயன்றால் கமல் அவர்களின் இடத்தைத் தொட முடியும்!' - (வசூலைக் குவித்த டி.ஆர் அவர்களின் இன்றைய நிலை?!)
-இயக்குநர் ஷங்கர் அவர்கள் காகிதத்தில் எழுதி வைத்துக்கொண்டு ஒருவர் பெயரையும் விடாது உச்சரித்து, நன்றி கூறியது.
-இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் ஹைலைட் காமெடி 'என்னை எதுக்காக கூப்டாங்கன்னு தெரிலை; ஒருவேளை விஜய்யோட அப்பாங்கறதாலேயோ?!'
-shaolin monk-களின் சாகஸ நடனம்!
-நடிகை ஐஸ் அவர்களின் ஆங்கிலப் புலமை கலந்த பேச்சு; மொழியின் ஆளுமை மற்றும் விஷய ஞானம் அடேங்கம்மா! உடுத்தியிருந்த உடையும் 'அடடே'ங்கம்மா! (ஏனோ 'அச்சுபிச்சு' ஸ்ரேயா பேச்சு அடிக்கடி நினைவுக்கு வந்து தொலைத்தது!)
-முத்தாய்ப்பாக ரஜினி...! 'உச்சியிலிருந்து இறங்கி வந்தாதான் நிம்மதி...சந்தோஷம்' என்கிற ஒரே வரியில் ஓராயிரம் அர்த்தங்கள்!
ஒரு முக்கிய பின் குறிப்பு!
'எந்திரன்' ரிஸல்டை விட ஷங்கர் அடுத்துச் செய்யப்போவது என்ன?!
இந்தியனின் துவங்கி (ஜீன்ஸ் நீங்கலாக) எந்திரன் வரை ஷங்கரின் கதை/திரைக்கதை மறைந்த எழுத்தாளர் திரு சுஜாதா அவர்களைச் சார்ந்தே இருந்தன. எந்திரனின் கதை வசனம் கூட 90 சதவீதம் சுஜாதா எழுதிவிட்டதாகத் தகவல். 3 idiots என்கிற காவியத்தைத் தமிழில் தழுவி, இயக்கப்போவதாகத் தகவல் கசிந்தாலும், ஷங்கரின் இனி வரும் படங்களில் சவால்கள் காத்திருக்கின்றன. சுஜாதா இல்லாத ஷங்கரைப் பார்க்கப்போவதும் நிறையவே சுவாரஸ்யம்.
Sunday, September 13, 2009
நகர குடியிருப்பு ஒன்றில் கொலையான ரம்யா (சிந்து மேனன்) வழக்கில், முன்னாள் காதலர் என்கிற முறையில் அழைக்கப்படுகிறார் ஏஸிபி வாசுதேவன்(ஆதி). பிரிவைத் தாங்க முடியாத துயரத்தில் தகப்பன் (ராஜசேகர்), தங்கை திவ்யா (சரண்யா மோகன்), கணவன் பாலா (நந்தா); நிச்சயம் தற்கொலையாயிருக்க முடியாது என்கிற ஒரே காரணத்தில் வாசு, வழக்கை தூசி தட்டத் துவங்க, அடுக்கடுக்காய் அதே குடியிருப்பில் மரணங்கள் விழத் துவங்குகின்றன. எல்லாவற்றிலும் 'தண்ணீரும் ஈரமும்' பிரதானமாய் இருக்கிறது! யார்தான் செய்திருப்பார்கள்?!
நிச்சயம் இது ஒரு இயக்குனர் படம் என்பதை முதல் பாதியில் அவ்வப்போது பின்னோக்கிப் போகும் 'ரம்யா-வாசு' காதல் காட்சிகளும், பின் பாதியில் ஒரேடியாய்க் காண்பிக்கப்படும் 'ரம்யா-பாலா' தாம்பத்யக் காட்சிகளும் நிரூபணம் செய்கின்றன. 'சென்னையில் ஒரு மழைக்காலம்' சரி, படத்தில் 'சென்னையில் ஒரே மழைக்காலம்' எப்படி ஸார்?! எல்லாக் காட்சிகளிலும் ஈரத்துடன் தொடர்பேற்படுத்த ப்ரயத்தனப்படுவதும் சுவாரஸ்யமே.
ஆதி இயல்பான காவல் அதிகாரியாய் மனதைத் தொடுவதென்னவோ சத்தியமான நிஜம். அதே போல, 'புரியாத புதிர்' ரகுவரனுக்குப் பின், சந்தேகப்படும் கணவன் பாத்திரத்தில் பட்டையைக் கிளப்புகிறார் நந்தா!
படத்தின் ஒளிப்பதிவு கூடுதல் பலம். த்ரில்லர் படங்களில் வரும் இசையைப் போல அல்லாமல் கொஞ்சம் அடக்கி வாசித்திருப்பது ஆறுதல். எடிட்டரும் கொஞ்சம் வேலை பண்ணியிருந்தால் படத்தின் நீளத்தைக் குறைத்திருக்க முடியும்.
காதல்/வெயில்/இம்சை அரசன்/அறை எண்/கல்லூரி என்கிற 'வெற்றி' வரிசையில் 'ஈரம்' சேரும்போது நமக்கு "தன்னால் எடுக்கப்பட முடியாத படங்களை வேறு இயக்குநர்(கள்) வைத்து திரு ஷங்கர் எடுக்கிறாரோ?!" என்கிற சந்தேகம் வலுக்கத்தான் செய்கிறது!
எக்ஸ்யூஸ்மீ மிஸ்டர் கந்தசாமி! ஷங்கர் பட்டறையிலிருந்து மற்றுமொரு பட்டை தீட்டப்பட்ட வைரத்திற்கு வழி விடவும்!
Saturday, August 08, 2009
பட்டணந்தான் போகலாமடி
நன்றி: Dhoda
