Showing posts with label எந்திரன். Show all posts
Showing posts with label எந்திரன். Show all posts

Tuesday, October 05, 2010

எந்திரனும் சாரு ஸாரும் - 2

குரு§க்ஷத்திரப் போர் துவங்குமுன் தருமன் கௌரவ சேனைத் தலைவர்கள், மூத்தவர்கள் அனைவரிடமும் போய் 'போரில் வெற்றி பெற எனக்கு ஆசி வழங்குங்கள்!' என்றானாம்! அதே போல, சாரு ஸார் கருத்துக்களை முதன் முறையாக மறுக்கத் துவங்கி எழுதுவதற்கு அவரிடமே ஆசி கேட்டு 'ஏகலைவன்' போலத் துவங்குகிறேன்!


கோபமான இரண்டு பேர் என்கிற தலைப்பில் 'எந்திரன்' விமர்சனத்தைத் துவக்கியிருக்கும் சாரு ஸார், 'மீதியை வெண்திரையில் காண்க' ஸ்டைலில், விமர்சனத்தை முழுமையாக வாசிக்க 'உயிர்மை, நவம்பர் 2010' இதழைப் பார்க்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். நிச்சயம் வாங்கிப் பார்ப்போம், படிப்போம் ஸார்!


முதல் பாரா இப்படிப் போகிறது...

..இப்போது தமிழ்நாட்டிலேயே அதிக கோபத்துடன் இருக்கும் இரண்டு நபர்களை நீங்கள் சுலபமாகக் கண்டு பிடித்து விடலாம். ஒருவர், கமல்ஹாசன். காரணம், தன் போட்டியாளரான ரஜினியின் ஆக மோசமான ஒரு படத்திற்குக் கிடைத்திருக்கும் வானளாவிய புகழ். இரண்டாவது, சாரு நிவேதிதா.

'சக போட்டியாளரான' என்கிற வார்த்தைகளின் மூலம் என்ன சொல்கிறார்?

கமல்/ரஜினி நடுவில் போட்டி இருப்பதையா? எந்தக் காலத்தில்?

சிவாஜி/எம் ஜி ஆர் காலத்தில் 'கேம்ப்' என்று நடிகர்களையும், ரசிகர்களையும் பிரித்து வைத்து 'சிலர்' குளிர் காய்ந்தது எல்லோருக்கும் தெரியும். இதைத் தெரிந்து தெளிந்த, கமல் ரஜினி என்றோ ஒன்றாகிவிட்டனர். கமல் படம் வரும்போது ரஜினி காணாமல் போவதும், ரஜினியின் படம் ரிலீஸாகும்போது கமல் கமுக்கமாய் இருப்பதும் இதனால்தான்!

இரண்டு பேர் என்கிறதில் தன்னையும், கமலையும் இணைத்துக் கொள்கிறார். எதற்கு? எந்திரனையும், ரஜினியையும் விமர்சிப்பதில்! இல்லையென்றால், கமலைப் பிரித்துப் பிரித்து மேய்ந்து எழுதுவது வழக்கம்தானே?!

உயிர்மை படித்தபின் மீண்டும் எழுதுகிறேன்.

எந்திரனும் சாரு ஸாரும் - 1

எந்திரன்: இது போன்ற குப்பையை தமிழ் சினிமா சரித்திரத்திலேயே பார்த்ததில்லை. தமிழ் சினிமாவின் நிரந்தர அவமானம்.

-திரு சாரு நிவேதிதா, ட்விட்டரில்

இதை என் கஸினிடம் சொன்னபோது கிடைத்த ஒற்றை வரி பதில் அல்லது கேள்வி 'Who cares?!'

Sunday, October 03, 2010

எந்திரன் - முகப்புத்தகக் குறிப்புகள்!

மறைந்த எழுத்தாளர் சுஜாதா நினைத்ததை, எழுதியதை, 'பார்த்த' எந்திரனை இயக்குனர் ஷங்கர் அழகாகத் திரையில் உருவகப் படுத்தியிருப்பதைக் கண்ட போது, சுஜாதா இருந்திருக்கலாமே என்று தோன்றியது! சுஜாதா-வை ரசித்த யாராலும் எந்திரன் முதல் பாதியைக் கொண்டாட முடியும், ஷங்கரைப் பாராட்டவும் முடியும்!

‎'வில்லத்தனம் பண்ணுற எந்திர ரஜினிய ஏம்பா சைண்டிஸ்ட் ரஜினி அடிச்சே கொல்லாம விடுறாரு?!' - படம் பார்த்த அப்பாவி ரசிகனின் கேள்வி...அவனால் நல்ல ரஜினி 'அடிக்காமல்' இருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை:-) ஆனால், அந்த அசுரனை, சைண்டிஸ்ட் அறிவு ரீதியாக 4 வழிகளில், 'எதிர் கொள்வதை' அதே ரசிகனுக்குப் புரியும்படி எடுத்த இயக்குனருக்கு ஒரு சபாஷ்!

சைண்டிஸ்ட் 'குறுந்தாடி'யும், எந்திர வில்லனின் 'கிருதா'வும் இனி தமிழ் நாட்டில் எங்கும் காண முடியும்! - எல்லாம் ரஜினி இஷ்டைலு மற்றும் இளமை!


‎'சிவாஜி' பார்த்த பின் - வெள்ளை ரஜினி, மொட்டை ரஜினி என்று சிகரத்தைத் தொட்ட ரஜினி இனிமேல் என்னதான் செய்ய முடியும்?! 'எந்திரன்' பார்த்த பின் - 'சிவாஜி' வேஸ்டுப்பா!

இன்ட்ரோ ஸாங் கிடையாது, பஞ்ச வசனங்கள் இல்லை, சைண்டிஸ்ட் சண்டை கூடப் போடாமல் ஓடிப் போகிறார்! - இப்படி எல்லாம் இருந்தாலும் ரஜினி என்கிற நடிகரின் இமேஜ் படம் முழுவதும் காக்கபட்டிருப்பதைக் காணும்போது ஜாலி-யாய் இருக்கிறது!

அந்த காலத்துல சிவாஜி, கே ஆர் விஜயா 'என்னோடு பாடுங்கள்'-னு டூயட் பாடும்போது பாத்தா 'வயசு' நல்லாவே தெரியும்! ஆனா இப்ப? ரஜினி (60), ஐஸு(40) 'காதல் அணுக்கள்'-இல் இளமையோ, இளமை:-) எல்லாம் டெக்னாலாஜியாம், அப்டிங்களா?!!

Monday, August 09, 2010

Come September 24!

சென்ற சனி, ஞாயிறு மாலையை 'எந்திரன்-இசை வெளியீட்டு விழா' தின்று விட்டது!


ரஜினி உரை-யோடு எனக்குப் பிடித்தவை...

-'ஷங்கர் ஸார்! நடிப்பையே பொழைப்பா வெச்சிகிட்டு இருக்கறவங்களுக்கு சான்ஸ் குடுங்க; பொழுதுபோக்கா நெனச்சு வந்து நடிச்சிட்டு போறவங்களுக்கு குடுக்காதீங்க!' - தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் திரு ராதாரவி அவர்களின் பஞ்ச்!

-ரஜினி பாடல்களுக்கு சிம்பு ஆடியது; அச்சு அசலாய் அந்தந்த பாடல்களுக்கு ரஜினியின் மூவ்மெண்ட் எப்படியோ அப்படியே ஆடியது ஆச்சரியம். நமது சென்னை வாசகர் திரு சௌமி அவர்கள், 'விண்ணைத் தாண்டி வருவாயா' பார்த்தபின் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது 'சிம்பு-விற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது; முயன்றால் கமல் அவர்களின் இடத்தைத் தொட முடியும்!' - (வசூலைக் குவித்த டி.ஆர் அவர்களின் இன்றைய நிலை?!)

-இயக்குநர் ஷங்கர் அவர்கள் காகிதத்தில் எழுதி வைத்துக்கொண்டு ஒருவர் பெயரையும் விடாது உச்சரித்து, நன்றி கூறியது.

-இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் ஹைலைட் காமெடி 'என்னை எதுக்காக கூப்டாங்கன்னு தெரிலை; ஒருவேளை விஜய்யோட அப்பாங்கறதாலேயோ?!'

-shaolin monk-களின் சாகஸ நடனம்!

-நடிகை ஐஸ் அவர்களின் ஆங்கிலப் புலமை கலந்த பேச்சு; மொழியின் ஆளுமை மற்றும் விஷய ஞானம் அடேங்கம்மா! உடுத்தியிருந்த உடையும் 'அடடே'ங்கம்மா! (ஏனோ 'அச்சுபிச்சு' ஸ்ரேயா பேச்சு அடிக்கடி நினைவுக்கு வந்து தொலைத்தது!)

-முத்தாய்ப்பாக ரஜினி...! 'உச்சியிலிருந்து இறங்கி வந்தாதான் நிம்மதி...சந்தோஷம்' என்கிற ஒரே வரியில் ஓராயிரம் அர்த்தங்கள்!

ஒரு முக்கிய பின் குறிப்பு!

'எந்திரன்' ரிஸல்டை விட ஷங்கர் அடுத்துச் செய்யப்போவது என்ன?!

இந்தியனின் துவங்கி (ஜீன்ஸ் நீங்கலாக) எந்திரன் வரை ஷங்கரின் கதை/திரைக்கதை மறைந்த எழுத்தாளர் திரு சுஜாதா அவர்களைச் சார்ந்தே இருந்தன. எந்திரனின் கதை வசனம் கூட 90 சதவீதம் சுஜாதா எழுதிவிட்டதாகத் தகவல். 3 idiots என்கிற காவியத்தைத் தமிழில் தழுவி, இயக்கப்போவதாகத் தகவல் கசிந்தாலும், ஷங்கரின் இனி வரும் படங்களில் சவால்கள் காத்திருக்கின்றன. சுஜாதா இல்லாத ஷங்கரைப் பார்க்கப்போவதும் நிறையவே சுவாரஸ்யம்.