Showing posts with label ரஜினி. Show all posts
Showing posts with label ரஜினி. Show all posts

Tuesday, December 25, 2012

பாட்ஷாவும் நானும்!



பாட்ஷாவும் நானும்’ புத்தகத்தை சென்னை அடையாறு ஒடிசியில் பிடித்தேன்.  இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா / பத்திரிகையாளினி மாலதி ரங்கராஜன் இணைந்து எழுதிய தமிழ்ப் பதிப்பு.


அண்ணாமலை / வீரா / பாட்ஷா / பாபா படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா, ரஜினியுடனான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.  பாட்ஷாவும் நானும் என்று வைத்தாலும், புத்தகம் நெடுக ‘அண்ணாமலை’ புராணம்தான்.

Thursday, December 15, 2011

ரஜினி டூயட்ஸ் - VII


ரஜினி டூயட்ஸ் - 19

'சோலோ' எஸ் பி பி-யாய்ப் போனாலும், இரணடு டூயட்கள் முத்துக்கள் அல்லவா? ஆனாலும், 'காதலின் தீபத்தில்' மங்கிப் போன 'என் வாழ்விலே வரும் அன்பே வா'-வுக்கே என் ஓட்டு. இளையராஜாவின் பசுமையான இசையில், ரஜினி மாதவி இணைப்பில் முதன் முதலாய் அமைந்த சூப்பர் காதல் பாட்டு....பஞ்சு சார் வரிகளில்...


ரஜினி டூயட்ஸ் - 20

இதை, இதை எப்படி மிஸ் பண்ணேன்??! பாட்டைக் கேட்பதில், பார்ப்பதில் அவ்வளவு சுகம். ரஜினி / சிலுக்கு ஐட்டம் நெம்பர் இல்லாத அற்புத டூயட். இளையராஜா இசையும், எஸ் பி பி / ஜானகியம்மா வாய்ஸும், சிலுக்கின் presence-ம் அடடா...மேல 'பேசக் கூடாது'!! ரஜினிக்கு 'அடுத்த வாரிசு' உண்டா என்ன?! அது சரி, பாட்டு எழுதினது யாருங்க?


ரஜினி டூயட்ஸ் - 21

மகேந்திரன் சார் இயக்கம், இளையராஜா இசை, ரேவதி நடிப்பு இவர்களோடு சேர்ந்த ரஜினி காந்தம்! பாட்டுக்கு என்னால எதுவுமே எழுத முடியாது...அதற்கும் அப்பால் அமைந்த அருமைப் பாட்டு...தலைவர் வாசம் வீசும் 'தாழம்பூ' பாட்டு...


-தொடரும்

ரஜினி டூயட்ஸ் - VI


ரஜினி டூயட்ஸ் - 16

படத்தில் மூன்று அற்புதமான டூயட் பாடல்கள். எதைத் தொடுப்பது, எதை விடுவது? ரஜினி சார்/ராதா நடித்த, எஸ் பி பி இசையமைத்து, ஜானகி அம்மாவுடன் பாடிய மூன்று பாட்டுக்களில் நான் தெரிவு செய்யும் பாட்டு 'அடடா இதுதான் சுகமோ' பாட்டில் அமைந்த இயற்கை சூழல், கேஷுவலாய் வரும் 'துடிக்கும் கரங்கள்' ரஜினி/ராதா கூடுதல் பலம். பாட்டு எழுதியது? - சொன்னால் உதவியாய் இருக்கும்.


ரஜினி டூயட்ஸ் - 17

இந்தப் படத்திலும் மூன்று சூப்பர் ஹிட் டூயட் பாடல்கள். 'பூமாலை', 'ராத்திரியில் பூத்திருக்கும் தாமரையை' விட 'அடுக்கு மல்லிகை'தான் எனக்குப் புடிக்கிது! ஆந்திர கொடுக்காய் வரும் ரஜினி, ஆந்திர ஊறுகாவாய் சில்க்...அப்புறமென்ன மஜாதானே...இளையராஜா இசையில், எஸ் பி பி/ஜானகியம்மா குரல்களில், இளமை வாலி வரிகளில் 'தங்க மகன்' ஜ்வலிக்கும் பாடல் இதோ...!



ரஜினி டூயட்ஸ் - 18

மீண்டும் ராதா/ரஜினி! இசைஞானி இசையில், எஸ் பி பி / ஜானகியம்மா குரல்களில் மற்றுமொரு மென்மையான, அருமையான பாடல். வாலி அய்யா 'புகுந்து விளையாடியிருக்கும் பாடல் இது. ரஜினி / ராதா உடைகள், ஜோடிப் பொருத்தம் கச்சிதம். ஊட்டி/கொடை-யில் எடுக்கப்பட்ட சூழலின் ஒளிப்பதிவு உயர் தரம்.


-தொடரும்

Wednesday, December 14, 2011

ரஜினி டூயட்ஸ் - V


ரஜினி டூயட்ஸ் - 13

ஏ வி எம் செட். எம் எஸ் வி இசை. கண்ணதாசன் பாடல். எஸ் பி பி / சுசீலாம்மா குரல்கள். இளமை சொட்டும் ஸ்ரீதேவி. 'விடிய விடிய சொல்லித் தருவேன்' என்கிறார் போக்கிரி ராஜா! கூடை அழகு பக்கத்தில் இருந்தாலும் கண்ணியமாய்க் காதல் செய்யும் ரஜினி சார், உங்களைப் பாராட்ட வார்த்தை இல்லை. என்றும் இளமை ததும்பும் பாடல்...இதற்கு மேல் என்ன சொல்ல?!


ரஜினி டூயட்ஸ் - 14

இளமை சொட்டும் ஸ்ரீதேவி. ஆனால், இந்த முறை அவுட்டோர், இளையராஜா இசை. வாலி வரிகள். எஸ் பி பி, எஸ் ஜானகி கொஞ்சும் குரல்கள். 'தனிக்காட்டு ராஜா'வாய் ஸ்ரீதேவியை ஆளும் ரஜினி சார்! இசை நம்மை தாலாட்டும், ரஜினி / ஸ்ரீதேவி நெருக்கத்தில் வீசும் 'சந்தனக் காற்று'...சூப்பர் சந்தோஷப் பாட்டு!


ரஜினி டூயட்ஸ் - 15

மென்மையா இதுவரைக்கும் பாத்த ரஜினி டூயட்ஸ் இப்போ சடார்னு லேன் மாறி 'குத்துப் பாட்டு'க்குப் போவுது...! ரஜினி சார், ராதாவோட போட்ட 'குத்து' பலருக்கும் தெரியாத பாட்டு. 'உரிமைக்குரல் எம் ஜி ஆர்' கட்டு போல 'வேட்டி கட்டி' ராதாவோட வரிந்து கட்டி தலைவர் ஆடும், வாலி அய்யா லைன்ஸ்-க்கு 'ஒரே மீனிங்'தான்!


-தொடரும்

Sunday, December 11, 2011

ரஜினி டூயட்ஸ் - IV


ரஜினி டூயட்ஸ் - 10

காஷ்மீரப் பின்னணியில் ரஜினி பாடிய ஒரு டூயட் நமக்கெல்லாம் தெரியும். இன்னொண்ணு? அதாம்பா இது-னு சொல்லி நான் ஏமாத்த மாட்டேன்...ரஜினி / ஸ்ரீப்ரியா ஜோடி, மெல்லிசை மன்னர் இசை, கண்ணதாசன் பாட்டு, எஸ் பி பி, வாணி ஜெயராம் பாடிய பொல்லாதவன் படம், 'அதோ வாராண்டி, வாராண்டி வில்லேந்தி ஒருத்தன்'....பாடலில் காடு, மலை, நதி, ரோடு, குதிரை என எல்லாவற்றிலும் முத்திரை பதிக்கும், லெதர் ஜாகெட்/பான்ட் போட்டு அசத்தும், ரஜினி சாரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்....!


ரஜினி டூயட்ஸ் - 11

புதிதாய்க் கல்யாணம் ஆகி, தேனிலவு கொண்டாடும் தம்பதியினரை நம் முன்னே நிறுத்தும் பாடல். இசைஞானி(ஒரு மாறுதலுக்காக) / ஜானகியம்மா குரல்களில், பஞ்சு சார் எழுத்தில், கழுகு படத்தில் 'பொன் ஓவியம்' பாடல்...ரஜினி/ரதி அப்படி ஒரு ஜோடிப் பொருத்தம் பாட்டில் தெரியும்...தலைவர் முதலிரவைக் கூட 'இஷ்டைல்'-ஆ கொண்டாடுவார் போல...! அத்தனை இளமை!! பேருந்தில் எடுக்கப்பட்ட பொன் ஓவியம் எங்காத்து மாமிக்கு கூட புடிச்ச பாட்டாக்கும்...!


ரஜினி டூயட்ஸ் - 12

வரும் பாட்டுக்கு அறிமுகம் தேவைதானா? இசைஞானி, யேசுதாஸ், ஜானகியம்மா, கண்ணதாசன், ரஜினி, மேனகை என எல்லோருமே மென்மையாய் அடக்கி வாசித்தாலும், பாட்டு இன்றும் பட்டைய கெளப்புது! 'ராமனின் மோகனம்' பாட்டு, ரஜினி சார் எட்ட நின்று காதல் யாசிக்கும் பாட்டு, 'நெற்றிக்கண்' பெசல் பாட்டு!


-தொடரும்

ரஜினி டூயட்ஸ் - III


ரஜினி டூயட்ஸ் - 7

இந்தப் பாட்டும் பசுமையான பாட்டுதான். ஆறிலிருந்து அறுபது வரை ரசிக்கும் பாட்டுதான். இளையராஜா / கண்ணதாசன் / எஸ் பி பி/ஜானகி இணைப்பில் ரஜினி/சங்கீதா பாடும் காதல் பாட்டுதான். செட், ஜிகினா, பள பள உடைகள் கூடிய டிப்பிகல் எஸ் பி எம் பாட்டு. ரஜினி சார் 'கொஞ்சம்' வித்யாசம் காட்டிருப்பார் இந்த பாட்டுல, என்னவா? கண்டுபிடிங்களேன்...!


ரஜினி டூயட்ஸ் - 8

ரஜினி / ஸ்ரீப்ரியா ஜோடி போட்டு நடித்த 'நதியோரம்' பாட்டு உங்களுக்குத் தெரியுமா? இசைஞானியின் மெலடிகளில் நிச்சயம் வந்து விழும் பாட்டு 'நதியோரம்'. ரஜினி 'இஷ்டைல் / டிரஸ்' எல்லாமே பிரமாதமாய் இருக்கும். கொஞ்சம் நெருக்கமாய், கதாநாயகியை இறுக்கமாய்க் கட்டிப் பிடிக்கும் பாடல்! அன்னை ஒரு ஆலயம் படத்தில், வாலி வரிகளில், நடுவே வரும் 'லு லு லு'வில் ..'நதியோரம்'...அபாரம்!


ரஜினி டூயட்ஸ் - 9

உரசினாலே இன்பம்தானே...! அதுவும் மனதிற்குப் பிடித்தவளோடு உரசுவது என்றால்? இன்பத்திற்குக் கேட்கவா வேண்டும்...தலைவர் / ரதி இருவரும் 'உரசி'கொண்ட பாடலை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா...? ஓரக்கண்ணால் பார்ப்பது, தலையைக் கோதிக்கொள்வது, ஆடுவது என எல்லாவற்றிலும் ரஜினி சாரின் மானரிசம் அதிகம் கொண்ட பாடல்! 'அன்புக்கு நான் அடிமை' படத்தில், எஸ் பி பி / சுசீலாம்மா குரல்களில், இசைஞானி இசையில், வாலி வரிகளில், 'ரஜினி சார் டூயட்டை இன்னிக்கெல்லாம் கேட்டுண்டே இருக்கலாமே?!'


-தொடரும்

Saturday, December 10, 2011

ரஜினி டூயட்ஸ் - II


ரஜினி டூயட்ஸ் - 4

'நேரம் வந்தாச்சு, நல்ல யோகம் வந்தாச்சு' - இல்லையா பின்னே? எம் ஜி ஆருக்கு திருப்பு முனை கொடுத்த தேவரின் பார்வை ரஜினி பக்கம் திரும்பியாச்சு...! 'தாய் மீது சத்தியம்' படத்தில், வித்தியாச ஹேர் ஸ்டைல்-ல், ரஜினி சார் பட்டிக்காட்டு உடையில் (ஆரஞ்சு வண்ணம்!), ஸ்ரீப்ரியாவுடன் பாடி ஆடும் சூப்பர் ஹிட் பாடல். பாமரருக்கும் புரியும்படியான எளிமையான வரிகளில் மா ரா பரணி எழுதியிருக்கும் பாடல். சங்கர் கணேஷ் இசையமைத்து, டி எம் எஸ் அய்யா/ சுசீலாம்மா பாடிய 'ட்ரியோ' பாடல் இதோ!



ரஜினி டூயட்ஸ் - 5

வெளிநாட்டில் எடுக்கப்பட்ட ரஜினி டூயட் பாடல்களில் நிச்சயம் 'ப்ரியா'வுக்கு இடம் உண்டு. 'என் உயிர் நீதானே' பாடலில்', யேசுதாஸ், ஜெஸ்ஸி, பஞ்சு ஸார் வரிகள், இழையோடும் இசை ஞானியின் இசை, படமாக்கப்பட்ட சூழல் என மென்மைக்கு முதலிடம். ரஜினி நடை, உடை, பாவனை - ஆண்மை, கம்பீரம் - தெரியும். பாட்டைப் பார்த்தபின் 'என் உயிர் நீதானே' என ரஜினி சாரைப் பார்த்து நாமும் பாடத் துவங்கி விடுவோம்!


ரஜினி டூயட்ஸ் - 6

இந்தப் பாடலைக் கேட்டவுடன் எனக்கு நினைவுக்கு வந்தவர் இருவர்.... முதல்வர்....திரு மலேசியா வாசுதேவன் அவர்கள் (என்ன ஒரு ஓபனிங்!) இரண்டாமவர்...திரு ரஜினிகாந்த் அவர்கள் (மனநிலை பிறழ்ந்து, சரியான பின் நடித்த முதல் படம் இது).
திரு மலேசியா அவர்கள் பாடிய 'அருமை' வெகு ஜனப் பாடல்களின் 'மைல்கல்' பாடல்..கூட எஸ் ஜானகி...கேட்பதற்கு இனிமையோ இனிமை....! ரஜினி, ஸ்ரீதேவி கலக்கல் டூயட்ஸ்-ல் 'ஆகாய ganges'-க்கு நிச்சயம் இடமுண்டு!


-தொடரும்

ரஜினி டூயட்ஸ் - I

ரஜினி சாரோட பொறந்த நாளை முன்னிட்டு...starting today, till monday...அவரோட டூயட் சாங்ஸ் பாப்போமா?!

Picture Courtesy: http://vijayart.blogspot.com

ரஜினி டூயட்ஸ் - 1

எஸ் பி பி பாடிய இந்த பாட்டு பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தலைவர்-க்கு அவர் பாஷையில் சொல்லப்போனால் 'ட்ட்டர்னிங் பாய்ன்ட்' கொடுத்த படம். ரஜினி அரிதாக வேட்டி கட்டிக் கொண்டு, தூரத்தில் நாயகி இருக்க பாடும் சில பாடல்களில் முதன்மையானது. கடோசியில் ஒன்றாகக் குளித்தாலும் ரஜினி காதலில் கூட கண்ணியம் காட்டி, முதுகு மட்டும் தேய்த்து விட்டு, கன்னத்தோடு கன்னம் வைத்து, நாயகியைத் தூக்கிக்கொள்வார்! 'புவனா ஒரு கேள்விக்குறி' படத்தில், இசைஞானி இசையில், பஞ்சு ஸார் வரிகளில் வரும் 'விழியிலே கலந்தது' பாட்டு, பாருங்களேன்... உங்களுக்கு சட்டெனப் பிடித்து போகும்!


ரஜினி டூயட்ஸ் - 2

மியுசிகல் ஃபிலிம். படத்தில் பாட்டுக்கள் நெறைய இருந்தாலும் ரஜினி சாருக்கு ஒதுக்கப்பட்டது ஒண்ணு சோலோ, ஒண்ணு டூயட் - ரெண்டு பாட்டுகள் என்றாலும் 'தலைவர்' பின்னி பெடலெடுத்தார். எஸ் பி பி வாய்ஸ்ல, ரஜினி சாரோட / கீதாவோட இளம் வயசுல, கவியரசு எழுதி, மெல்லிசை மன்னர் இசையமைத்த பாட்டு 'நம்ம ஊரு சிங்காரி'யை 'நினைத்தாலே இனிக்காதா?!

பி.கு - தலைவரால நகைச்சுவை பண்ண முடியும்னு காட்டின மொத படம் இதான்!


ரஜினி டூயட்ஸ் - 3

எஸ் பி பி, எஸ் ஜானகி அவர்கள் பாடின பாட்டு இது. ரஜினி ஸார் ரொம்பவே முயற்சி எடுத்துக்கிட்டு பண்ண பாட்டுன்னும் சொல்லலாம். மூவ்மெண்ட்ஸ் ரொம்பவே வித்தியாசமா இருக்கும், ஸாரோட 'இஷ்டைல்' ரொம்பவே அதிகமா இருக்கும், அப்பப்போ ஃபரீஸ் ஆகி அப்டியே நிற்பதும் சூப்பர்! இளமை ததும்பும் ரஜினியோட நாயகி பிரமீளா. வி குமார் அவர்கள் இசையில், வாலி அய்யா எழுதிய பாடல் 'மதனோத்சவம் ரதியோடுதான்' ரொம்பவே அட்டஹாசம்.




-தொடரும்

Wednesday, October 05, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 26

விஜயதசமி பெசல்....

தனியார் தொலைக்காட்சி மாதிரி நம்மால 'உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக'னு போட முடியாது!! இருந்தாலும், 'நச்'னு நாலு சீன போட்டா நல்ல இருக்குமேன்னு யோசிச்சேன்... அதால இதோ வருகுது....

ரஜினி சாரோட 'நடிப்பு' சமாசாரம் 1976-ல ஆரம்பிச்சு 1983-ல முடிஞ்சிருச்சுன்னே சொல்லலாம். வித விதமான characters-ல மின்னின அவரு 'கமர்ஷியல்' ஹீரோ ஆனது தமிழ் சினிமாவின் துரதிர்ஷ்டம். அவரும், ஸ்ரீதேவியும் காதலைப் பகிர்ந்துகிறதை நீங்களும் பார்த்து ரசியுங்களேன்...


நம்ம சாதி சனம் என்ன சொல்லும்...நம்ம சாதில இதெல்லாம் வேணாய்யா...நம்ம சாதில பொறந்துபுட்டு இப்டில்லாம் செய்யலாமா...என இன்றும் புலம்பும் மனிதர்கள் நம்மோட இருக்கிறாங்கன்னு நினைக்குறப்போ வேதனையாத்தான் இருக்குது...பொறப்ப தாண்டி இப்போ 'சாதி' வேலைக்குள்ளையும் வந்திருச்சு...'நீ ஐ.டி-யா, பினான்ஸ்-ஆ, மார்கெடிங்-ஆ, பேங்க் மேனேஜர்-ஆ, கன்னடமா, தமிழா, தெலுகு-ஆ, பெங்காலி-ஆ' எனக் கேள்வி போட்டு, ஸ்டேடஸ் பாத்து வெச்சு ஜாயின் ஆகுறதப் பாக்குறப்போ வேதனையாத்தான் இருக்குது...இந்த நல்ல நாள்ல நம்மோட வேத்துமை சுவத்தை உடைச்சிப் போட்டு ஒத்துமையா நின்னு தேர் இழுப்போம் வாங்களேன்...


இது நெசம்மாவே சூப்பர் சீன்...அப்பாவுக்கும், பையனுக்கும் நடக்குற வாக்குவாதம்... அதுவும் எந்த ரேஞ்சுல நடக்குது பாருங்க...இதுக்கு மேல ஏதும் 'பேய'த் தேவையே இல்ல...!


எவ்ளோ இன்டர்வியு பாத்தாலும் இத்தை மறக்க முடியுமா...? நெசம்மாலுமே இப்டி ஒரு பேட்டிய நம்ம சி எம், பி எம் கிட்ட எடுக்க முடியுமா...? அட்லீஸ்ட் ப சி-கிட்ட...?!! அட போப்பா...சிதம்பரம் சாரு வரச் சொல்லிபோட்டு மறந்துருவாரு! எங்க அண்ணாத்தை சொன்னா போல 'மெமோரியே இல்லாத PC-ப்பா அவரு!'



விஜயதசமி வாழ்த்துக்கள்!

Monday, September 26, 2011

கமலஹாசன் அவர்களின் 'சப்பக்' (அ) 'பச்சக்' பாடல்கள் - 3

கமல் 'சப்பக்/பச்சக்' பாடல்களுக்கு எவ்வளவு கண்டனங்கள் இருந்தனவோ அந்த அளவுக்கு வாசகர்கள் அந்தப் 'பக்க'த்தை வாசித்துத் தீர்த்தனர்:-) 'தல' படப் பார்வைக்குப் பின் அதிக 'தட்டு'க்கள் 'சப்பக்/பச்சக்' பக்கங்களுக்குத்தான்!

கமல் ஸார் பாடல்களுக்குப் பின் அபரிமிதமான உழைப்பு இருந்திருக்கிறது. ஒரு 'நாயகன்'-ஆக உருவாவதற்கு முன்னால் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார். உதவி நடனக் கலைஞனின் பணி அவ்வளவு சுளுவானதல்ல ('நான் ஏன் பிறந்தேன்?' என்கிற எம் ஜி ஆர் படத்தில் அவர் பெயரை (உதவி நடனம்) பார்த்து வியந்து போனேன்!). 'என்றும் கமல்' என்கிற கிழக்குப் புத்தக வெளியீட்டுப் புத்தகத்தைப் படித்து பாருங்கள். கமலின் கடந்த பாதையும், சிந்திய வியர்வையும், உழைத்த உழைப்பும் புரியும்.

1983-ல் கமலின் மூன்று படங்கள் ஓடிய ஓட்டங்கள் சொல்லி மாளாது..... 'கசினோ'வில் 'வாழ்வே மாயம்', 'அலங்கார்'-ல் 'சகலகலா வல்லவன்', 'சுப'த்தில் 'மூன்றாம் பிறை' எனத் தொடர் வெள்ளி விழா படங்கள் அவரது உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. 'ஸ்ரீதேவி'தான் நாயகி என்பதை மாற்றி 'தாமரை' நாயகன் ஆனதும் இங்குதான்.

'திரும்பிப் பார்க்கிறேன்' பேட்டியில் சாருஹாசன் 'கமலை conscious-ஆக 'playboy' image கொண்டே வளர்த்தோம்...' என்கிறார். இதனாலேயே கமல் பல படங்களில் 'shirt/pant'-ஐக் கழட்டுவது சகஜமானது. இதனாலேயே பாடல்களில் நாயகியுடன் நெருக்கமாய் நடிப்பது இயல்பானது ('காதல் இளவரசன்'-ஐ, 'காதல் மன்னன்'-க்கு பிறகு சுமந்ததும் அசாதாரணம்). நடுவில் சாருவுக்குத் தெரியாமல் ஒத்துக்கொண்டு நடித்த '16 வயதினிலே' கோவண ஸ்டில்லைப் பார்த்துச் சத்தம் போட்டதாகவும், கமல் 'இல்ல...புது டைரக்டர்... நல்ல கதை...படத்தை பாருங்க நல்லா போகும்' என்று சொன்னதாகவும் குறிப்பிடுகிறார்.

சரி 'நாயகன்' ஆயாச்சு...! வாழ்க்கை அப்புறமாவது நன்றாயிருந்ததா? 'ரஜினி' என்கிற மாபெரும் காந்தத்துடன் என்றென்றும் போராட்டம்தானே?! தீபாவளிப் பண்டிகையின் விசேஷங்களில் 'கமல்-ரஜினி' படங்கள் நிச்சயம் உண்டு.

வறுமையின் நிறம் சிவப்பு - பொல்லாதவன் (1980)
தூங்காதே தம்பி தூங்காதே - தங்க மகன் (1983)
எனக்குள் ஒருவன் - நல்லவனுக்கு நல்லவன் (1984)
ஜப்பானில் கல்யாணராமன் - படிக்காதவன் (1985)
புன்னகை மன்னன் - மாவீரன் (1986)
நாயகன் - மனிதன் (1987)
வெற்றி விழா - மாப்பிள்ளை (1989)
குணா - தளபதி (1991)
தேவர் மகன் - பாண்டியன் (1992)
குருதிப் புனல் - முத்து (1995)


கொஞ்சம் யோசித்து, உற்று நோக்கினால்...திட்டமிடுதலும், கூட்டு முயற்சியும், போட்டி மனப்பான்மையைத் தூண்டுதலும், உள்ளில் அடங்கி இருக்கும் வியாபாரத் தந்திரமும் புரியும்.

கமலின் மற்றுமொரு பலம். முயற்சி...இது பலவீனமும் கூட....எப்படி?

ராஜ பார்வை (1981) - பார்வை இல்லாத ஒரு இளைஞனின் காதல் கதை. இன்றைக்கும் கூட நிகழக்கூடிய கதையை கமல் எடுத்தபோது அவருக்கு வயது இருபத்தி ஏழு. Playboy இமேஜால் படம் காணாமல் போனது.

நாயகன் (1987) - 24 வருடங்களுக்கு முன் 'இளைஞன் / நடுத்தரம் / முதிர்ந்தவர்' வேடம் கட்டிய போது கமலுக்கு வயது முப்பது மூன்று!! 'மீசை'யைக் கமல் எடுக்கவே மாட்டார், எடுக்க முடியாது என்கிற பேச்சு பரவி இருந்த கால கட்டத்தில் சட்டென வழித்து பன்முகம் காட்டியதை மறக்க முடியுமா? காப்பி / டீ என்று பேசப்பட்டாலும் நாயகன் இன்றைக்கும் ஒரு trend செட்டர் என்பதை மறுக்க இயலாது. இவ்வளவு உழைப்பிருந்தும், மனிதன் படத்தின் வசூல் முன் நாயகன் அடிபட்டுப் போனது சரித்திரம்.


அபூர்வ சகோதரர்கள் (1989) - நாயகன் படத்திற்குப் பின் இப்படி ஒரு தேக்கம் 'பேர் சொல்லும் பிள்ளை'க்கு வருமா? வந்ததே...! அனைத்தையும் தூக்கிச் சாப்பிட்டது 'அபூர்வ சகோதரர்கள்'. இதன் உழைப்பு இன்றும் ரகசியமாய்...!!

குணா (1991) - மனம் பிறழ்ந்த பாத்திரம், சரியாகச் செதுக்கப்படாமை, படத்தைச் சுற்றிய சில சர்ச்சைகள்...'அபிராமி..அபிராமி' யார் என்கிற கேள்வி இன்றும் உண்டு! அறையும் வன்முறை...அடங்கா வெறி கொண்ட 'குணா' அகப்பட்டுக் கொண்டான் 'தளபதி'-டம்!

இந்தியன் (1996) - 'அன்னா ஹசாரே'வைக் கொண்டாடுபவர்கள் 'இந்தியன்' தாத்தாவை மறந்திருக்க முடியாது. ஷங்கர் இயக்கத்தில் 'அடக்கி' வாசித்த கமலுக்கு வயது நாற்பது!! இன்றைய சூழலில் இந்தப் படத்தின் 'promos' எப்படி இருந்திருக்கும்...? கற்பனையை உங்களிடம் விடுகிறேன்...!

ஆளவந்தான் (2001) - தாயம் (1984) என்கிற கமலின் கதையின் தழுவல். முயற்சிப் படமா / மசாலாப் படமா என்கிற குழப்பத்தில் எல்லோராலும் 'செமத்தியா'க விமர்சனம் செய்யப்பட்ட படம். 'மொட்டை' பாத்திரம் கமலால் மட்டுமே செய்ய முடியக்கூடிய பாத்திரம்.கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், புரியும்படி சொல்ல முயற்சி செய்திருந்தால்...அருமையான படமாயிருந்திருக்கும்.!!ஒரே நேரத்தில் பல அரங்குகளில் திரையிடப்பட்டதும் இதுதான்...ஆக, இன்றைய 'பல அரங்குகள் வெளியீடு' திட்டத்தைத் துவக்கி வைத்த பெருமையும் கமலுக்கு உண்டு :-)
வயதுக்கு மீறியதை செய்ய முயன்றதின் விளைவு பெரும்பாலான நேரங்களில் தோல்வியைத் தந்திருக்கிறது..சில பாத்திரங்களை இன்று செய்திருப்பாரேயானால் சிகரங்களை நிச்சயம் தொட்டிருக்க முடியும். தசாவதாரத்தில் செய்திருந்த பத்தில் ஒன்பதை ஏற்கனவே பல படங்களில் செய்து விட்டார் என்பதை நான் எழுதியிருக்கிறேன்.

கமலின் நகைச்சுவை நம்மை விலா நோகச் சிரிக்க வைத்திருக்கிறது. மீண்டும் கோகிலா, சிம்லா ஸ்பெஷல், எல்லாம் இன்பமயம், மைகேல் மதன காம ராஜன், சிங்காரவேலன், அவ்வை சண்முகி, தெனாலி...என்கிற நீண்ட பட்டியல் கமலின் நகைச்சுவை உணர்வுக்கு ஒரு சான்று.

கமலின் படங்கள் ஆங்கிலப் படங்களின் தழுவல் என்கிற குற்றச்சாட்டு இன்றும் உண்டு. இருந்துவிட்டுப் போகட்டுமே? ஒரு நல்ல படம்தான் நம் தேவை. அதன் மூலம் பற்றிய கவலை நமக்கு வேண்டாம் என்பதே என் கருத்து.

ஆக, 'சப்பக் / பச்சக்' பாடல்கள் கமலுக்கு மட்டுமே உரித்தானவை. அவரால் மட்டுமே செய்ய முடியும், செயல் பட முடியும்...!

கடோசி - 1

" 'சப்பக் / பச்சக்' பாடல் இல்லையா?" என வருந்தும் பிரியர்களுக்காக ஒரு பாடல்!

'சூர சம்ஹாரம்' படத்தில் 'நிரோஷா'வுடன் கொஞ்சிய கமலை அநேகம் பேர் பார்த்திருக்க முடியாது.... கமல் படுத்தும் பாடு...நிரோஷா படும் பாடு....leaving to you...!

Tuesday, June 28, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 7

யார் அந்த நிலவு?

பாட்டிற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு (ஆதாரம்: மெல்லிசை மன்னர் அளித்த பேட்டி)

மெல்லிசை மன்னர் போட்ட மெட்டுக்கு, நிமிடங்களில் பாடல் வந்து விட்டது கவியரசுவிடமிருந்து! உடனே, திரு டி எம் எஸ் அவர்களைப் பாட வைத்து விட்டார். இனி, சிவாஜி ஸார் அவர்கள் கேட்க வேண்டியதுதான் பாக்கி...

சிவாஜியைப் பாடல் கேட்க வைத்திருக்கிறார்கள் - முடிந்தபின் சிவாஜியிடமிருந்து நோ ரியாக்ஷன். 'என்ன பாட்டு பிடிக்கவில்லையோ?' என்கிற கவலை...கொஞ்ச நேரம் மௌனத்தில் கரைந்த பின் சிவாஜி 'நீங்க போட்டிருக்கிற மெட்டு, கண்ணதாசன் அவர்கள் எழுதிய வரிகள், இதுக்கு மேலே டி எம் எஸ் பாடின விதம் - இதை மேட்ச் பண்றாப்பல நான் நடிக்கணுமே? அதைத்தான் யோசிச்சுகிட்டிருக்கேன். ஒரு நாள் டைம் கொடுங்க...என்னால முடிஞ்சதைப் பண்ணிடறேன்' என்றாராம்! ஒரு நாள் கழித்து, பாடல் எடுக்கப்பட்டதாம்!

அப்படி வந்த பாட்டுதான் இது...படம் ரிலீஸானப்புறம் ஸ்க்ரீன்ல ரசிகனுக்குத் தெரிஞ்சது சிவாஜி மேனரிஸம் மட்டும் ஸ்டைல் மட்டும்தான்...அப்புறமென்ன ஒரே ரகளைதான் போங்க!



ஆகாய Ganges (நன்றி: Hello FM!)

இந்தப் பாடலைக் கேட்டவுடன் எனக்கு நினைவுக்கு வந்தவர் இருவர்....

முதல்வர்....திரு மலேசியா வாசுதேவன் அவர்கள் (என்ன ஒரு ஓபனிங்!)

இரண்டாமவர்...திரு ரஜினிகாந்த் அவர்கள் (மனநிலை பிறழ்ந்து, சரியான பின் நடித்த முதல் படம் இது)

திரு மலேசியா அவர்கள் பாடிய 'அருமை' வெகு ஜனப் பாடல்களின் 'மைல்கல்' பாடல்..கூட எஸ் ஜானகி...கேட்பதற்கு இனிமையோ இனிமை....!

இந்தப் பாடலை எடுக்கும்போது ஸ்ரீதேவி அவர்களுக்கு காலில் அடிபட்டு நடக்க முடியாத சூழல்...உன்னிப்பா கவனித்தால் ஸ்ரீதேவி நடமாட்டம் மட்டுப் பட்டிருப்பது தெரியும்...'உன்னிப்பா' கவனித்தால்தான் தெரியும்...இயக்குனரைப் பாராட்டிவிட்டு, அதற்காகவும் பாட்டைப் பாருங்கள்!

மலேசியா நம்முடன் இல்லை எனும்போது மனம் கனத்துப் போகிறது...அவரது பாடல்களில் அவர் உயிர் இன்றும் உலவிக் கொண்டிருக்கிறது.

பின்குறிப்பு - 'முதல்வர்' - ரஜினிக்குப் பிடிக்காததால், அவர் பெயர் இரண்டாமிடம்!

Wednesday, February 02, 2011

ரஜினியின் அறிமுகப் பாடல்கள் - 5

இடம்# 06
பாடல்# 'ஆட்டோக்காரன்..ஆட்டோக்காரன்..'
படம்# பாட்ஷா
இசை# தேவா
பாடல்# வைரமுத்து
பாடியவர்# எஸ் பி பி

என்ன ஒரு பாட்டு இது?

பாடலுக்கு முன்னால் கொடுக்கப்படும் 'பில்ட்-அப்' என்ன, ஜனகராஜ் வாய்ஸில் 'இன்னிக்கு ஆயுத பூஜை இல்ல, அண்ணன் ஆட்டோ ஸ்டாண்டில் பட்டை கெளப்பிகிட்டு இருப்பாரு!' என்று முடித்தவுடன் துவங்கும் 'ராப்' வகைப்பாடல் இசையமைப்பின் மேன்மைக்கு ஒரு சான்று.



'இரக்கமுள்ள மனசுக்காரண்டா, நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா' என்று எஸ் பி பி, ரஜினிக்காக முழங்கும்போது வெகுஜனக் கதாநாயகனின் முத்திரையின் / கவிப்பேரரசு வரிகளின் ஆளுமையும் தெரியும்.

பாடல் வரிகளுக்கு இங்கே சொடுக்கவும்.

Sunday, January 30, 2011

ரஜினியின் அறிமுகப் பாடல்கள் - 4

சிறிய இடைவேளைக்குப் பின் மீண்டும் ரஜினியின் அறிமுகப் பாடல்கள் தொடர்கின்றன...

முந்தைய பதிவுகளுக்கு இங்கே சொடுக்கவும்

ரஜினியின் அறிமுகப் பாடல்கள் - 1
ரஜினியின் அறிமுகப் பாடல்கள் - 2
ரஜினியின் அறிமுகப் பாடல்கள் - 3

இடம்# 07
பாடல்# 'பொதுவாக என் மனசு தங்கம்..'
படம்# முரட்டுக் காளை
இசை# இளையராஜா
பாடல்# பஞ்சு அருணாசலம்
பாடியவர்# 'மலேசியா' வாசுதேவன்

எந்த ஒரு கதாநாயகனுக்கும் தான் ஒரு வெகுஜன கதாநாயகனாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்கிற ஆசை நிச்சயமாக இருக்கும். அது, மிகச் சிலருக்கே பொருந்தி வருகிறது. பொருந்துவதோடு நில்லாமல், தொடர்ந்து கொண்டே இருப்பது ரஜினிகாந்த் அவர்களுக்கு மட்டும்தான். அதிலும், கமர்ஷியல் ஹீரோவுக்கான அறிமுகப்பாடல் மிக மிக முக்கியம்!

ரஜினி வெகுஜன கதாநாயகனாக முத்திரை பதித்த படம் 'முரட்டுக் காளை'. 'விக்' அணிந்து ரஜினி நடித்த வெகு சில படங்களில் ஒன்று. அதில் வரும் அறிமுகப் பாடல், அட்டஹாசமான பாடல்...

'பொதுவாக என் மனசு தங்கம்
ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்!'

என்று துவங்கி, 'நெஞ்சுக்குள்ள அச்சமில்லை, யாருக்கும் பயமுமில்லை, வாராதோ வெற்றி என்னிடம்!', 'பொறந்த ஊருக்குப் புகழைச்சேரு, வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு', 'எந்நாளும் உழைச்சதுக்குப் பொன்னாக பலனிருக்கு' என்கிற வரிகளில் பஞ்சு அருணாசலம் மின்னியிருந்தார்.

அந்த வகையில் இந்தப் பாடல் 7-வது இடம்!

Monday, January 24, 2011

ரஜினியின் பன்ச் தந்திரம்!


தனது முயற்சியில் முற்றும் தளராத விக்கிரமாதித்தன் மயானத்திற்குள் பயப்படாது சென்று மரத்திலிருக்கும் உடலை வீழ்த்தி, தோளில் போட்டுக்கொண்டு நடந்தான்.

உடலிலுள் இருக்கும் வேதாளம் மெல்ல நகைத்துப் பேசத் துவங்கிற்று 'என்ன விக்கிரமாதித்தரே? நீர்தான் ரஜினி ரசிகராயிற்றே? ரஜினியைப் பற்றிய லேட்டஸ்ட் புத்தகத்தைப் படித்துவிட்டீரா?!' என்று எக்காளத்துடன் கேட்டது வேதாளம்.

'நண்பரிடமிருந்து கடன் வாங்கிப் படித்தேன் என்றால் கடித்துவிட்டு, ஓடிப் போய்விடுவாய் - பேசாமல் இருப்பதே சுகம்' என்று மௌனம் காத்தான் விக்கிரமாதித்தன்.

ரஜினிகாந்த் பேசிய பன்ச் வசனங்களில் 30ஐ எடுத்து, பிஸினஸிற்கும், வாழ்க்கைக்கும் எத்துணை பொருத்தமாயிருக்கிறது என்று அடிக்கோடிட்டு, திரு பி.சி. பாலசுப்ரமணியன் / ராஜா கிருஷ்ணமூர்த்தி (கிட்டி) ஆங்கிலத்தில் எழுதியதைத் தமிழில் மொழிபெயர்த்து 'ரஜினியின் பன்ச் தந்திரம்' என்கிற பெயரில் கிழக்குப் பதிப்பக வெளியீடாக சென்ற திஸம்பர் 2010-ல் வந்திருக்கிறது.

பாட்ஷா 7, பாபா / அருணாச்சலம் / முத்து / சிவாஜி தலா 3, படையப்பா / அண்ணாமலை தலா 2, ஜானி / 16 வயதினிலே / சந்திரமுகி / எஜமான் / தர்மத்தின் தலைவன் / எங்கேயோ கேட்ட குரல் / மனிதன் தலா 1 என ரஜினி படங்களிலிருந்து எடுத்து கையாண்டிருப்பது வித்தியாசமாயிருக்கிறது.

சந்திரமுகி திரைப்படத்தின் ஆடியோ விழாவில் பேசிய 'நான் யானை இல்ல..குதிரை...டக்குனு எழுந்திருப்பேன்!' என்றதை 'சுதாரிப்பு' உணர்வோடு ஒப்பிட்டு பிஸினஸையும், வாழ்க்கைக்கும் எத்துணை பொருத்தமான பன்ச் இது எனச் சுட்டிக் காட்டியிருப்பது வியப்பைத் தருகிறது.

வேலைக்குதவாத 'பரட்டை' அடிக்கடி எக்காளத்துடன் 'இது எப்டி இருக்கு?'ஐக் 'கருத்துக்களைக் கேட்டு வாங்கப்பட வேண்டும்' (இதுதான் 'போட்டு வாங்க'றதோ?!) , 'மௌனமாயிருக்கக்கூடாது' என்பதோடு இணைத்திருப்பதும் நன்றாயிருக்கிறது.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் விக்கிரமாதித்தரே?!

இதெல்லாம் போகட்டும். உமக்கு எது அல்லது யாரைப் பிடித்திருக்கிறது? ரஜினியின் பன்ச் டயலாக்ஸா, இதை எழுதியிருக்கும் எழுத்தாளர்களா, ஆங்கிலத்திலும், தமிழிலும் வெளியிட்டிருக்கும் பதிப்பாளர்களா?, இல்லை படிக்கும், படிக்கப்போகும் வாசகர்களா? சொல்லாவிட்டால் தலை சுக்கு இருநூறாகி விடும்!' என்று சொல்லி விக்கிரமாதித்தனுக்குக் கொக்கி போட்டது.

ரஜினி போல் அமைதி காத்து வந்த விக்கிரமாதித்தன், இனியும் 'தலை' தப்பாது எனத் தெளிந்து 'ரஜினியின் பன்ச் 'மந்திரமா'யிருந்த காலம் போய் இப்போது 'தந்திரமா'கிவிட்டது. அதற்கேற்றாற்போல தலைப்பு வைத்தது புத்திசாலித்தனம்.

பன்ச் டயலாக் ஒரு பக்கம், ரஜினி படம் ஒரு பக்கம், மேட்டர் 'திருக்குறள்' சைஸில் ஒண்ணரை பக்கம் எனப் பக்கங்களை வளர்த்து, சாதா பக்கங்களை, டைரக்டர் ஷங்கர் போல மெகா பக்கங்களாக்கிய கிழக்குப் பதிப்பகத்தார் புத்திசாலிகள்.

எழுதிய திரு பாலசுப்ரமணியன் / திரு ராஜா தேசிங்கு மெத்தப் படித்தவரென்றாலும், ரஜினி என்கிற காந்தத்தின் வசீகரத்தில் விழுந்தது ரஜினி அவர்களின் புத்திசாலித்தனம்!

தெரிந்த விஷயங்களையே, ரஜினி அவர்களின் பன்ச் டயலாக்ஸ் ஜிகினா காகிதத்தில் சுற்றி வாசகர்கள் காதில் பூமாலை வைத்தது அதி புத்திசாலித்தனம். காசு கொடுத்து வாங்கிப் படித்த உன்னை விட கடன் வாங்க்ப் படித்த நான் புத்திசாலிதானே?!' என்று விக்கிரமாதித்தன் கேட்ட எதிர்க்கேள்விக்குப் பதில் சொல்ல விரும்பாத வேதாளம் சட்டென மீண்டும் முருங்கை மரம் போய்விட்டது!

'வேதாளம் கேட்டான்..விக்கிரமாதித்தன் கெட்டான்!' என்று நொந்துகொண்டான் விக்கிரமாதித்தன்!

Monday, December 20, 2010

ரஜினியின் அறிமுகப் பாடல்கள் - 3

இடம்# 08
பாடல்# 'ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்..'
படம்# முள்ளும் மலரும்
இசை# இளையராஜா
பாடல்# கண்ணதாசன்
பாடியவர்# எஸ் பி பி



இயக்குனரின் நடிகர் என்கிற காலகட்டத்தில் ரஜினி நடித்த படம் 'முள்ளும் மலரும்'. தண்ணியடித்து விட்டு ரஜினி பாடுவதாய் அமைந்திருந்த இப்பாடலை

'ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே...
நாந்தாண்டா என் மனசுக்கு ராஜா, வாங்குங்கடா வெள்ளி கூஜா'

எனத் துவங்கி, முழுதும் 'பிதற்றலாக'வே எழுதியிருந்தார் கவியரசு! ('பட்டு' திருந்தியவராயிற்றே, கேட்கவா வேண்டும்?!) அப்படியிருந்தாலும் கடைசியில்...

'நீ கேட்டா கேட்டத கொடுக்குற சாமியைப் பாத்து கேளுங்கடா!'

என்று முடித்திருப்பதை என்னவென்று சொல்வது?!நடித்திருப்பவருக்கும் 'தண்ணி' பட்ட பாடு, கேட்கவா வேண்டும்?!

கையாலாகாத கோபத்தில், கண்டபடி குடித்துவிட்டு, ஆடிப்பாடும் இந்தப் பாட்டு இயக்குனருக்காகவும், இசைக்காகவும் எட்டாவது இடத்தில்!


பாடலின் வரிகளுக்கு இங்கே சொடுக்கவும்.


Thursday, December 16, 2010

ரஜினியின் அறிமுகப் பாடல்கள் - 2

தர வரிசை# 09
பாடல்# 'மனிதன்..மனிதன்..இவன்தான் மனிதன்...'
படம்# மனிதன்
இசை# சந்திரபோஸ்
பாடல்# வைரமுத்து
பாடியவர்# மலேஷியா வாசுதேவன்

இந்தப் பாடலுக்குப் பின்னால் சின்ன சுவாரஸ்ய குட்டிக் கதை.

'வானத்தைப் பார்த்தேன்' என்கிற மற்றுமொரு தத்துவப் பாடல் இருப்பதால், பாடலைச் சேர்க்க வழியில்லாமல் அப்படியே வைத்திருந்ந்தாகவும், ரஜினிகாந்த் தலையீட்டால் 'டைட்டில் ஸாங்' என்றழைக்கப்படும் 'தலைப்பு பாடல்'-ல் ரஜினியின் வாயசைப்போடு வெளிவந்ததாகவும் ஏவி எம் சரவணன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார் (ஏவி எம் 60 சினிமா, ஏ வி எம் சரவணன், ராஜராஜன் பதிப்பகம்).

வாழும்போது செத்துச் செத்துப் பிழைப்பவன் மனிதனா...
வாழ்ந்தபின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா...
என்கிற வைரமுத்து வரிகள் வீர்யம் மிக்கவை, எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவையும் கூட.

அதென்னமோ தெரியவில்லை, சந்திரபோஸ்/வைரமுத்து கூட்டமைப்பில் உருவான பாடல்களில் வரிகளும், இசையும் இழைந்தோடுவது நிச்சயமான உண்மை.

Wednesday, December 15, 2010

ரஜினியின் அறிமுகப் பாடல்கள் - 1

திரு ரஜினிகாந்த் அவர்கள் நடித்த திரைப்படங்களில் அவர் பாடிய முதல் அல்லது அறிமுகப் பாட்டுக்களின் தொகுப்பு இது. நிறைய பாடல்கள் இருந்தாலும் 'முதல் பத்து' மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டு, உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

தர வரிசை# 10
பாடல்# 'ஒரு மைனா, மைனா குருவி...'
படம்# உழைப்பாளி
இசை# இளையராஜா
பாடல்# வாலி
பாடியவர்கள்# மனோ, சித்ரா



மனோவிற்கும், ரஜினிக்கும் ஒரு ராசி. மனோ பாடிய பாடல்கள் ரஜினியின் குரலுக்குப் பொருந்துவதால், பாடல்கள் வெகு எளிதில் பிரபலமாகிவிடுவதுண்டு. அந்த வகையில் 'ஒரு மைனாக்குருவி', வாலியின் வரிகளுடன், இளையராஜாவின் துள்ளல் இசையில் பத்தாவது இடத்தில்.

'பாவாடை கட்டிக் கொண்ட பாலாடை போலிருக்க,
போராடும் இந்த மனது, இது பொல்லாத காளை வயது!'
-ல் வாலியின் இளமை தெரிகிறது!

பாடலை எடுத்த விதம் அவ்வளவாக திருப்தியில்லாவிட்டாலும் (இயக்குநர், வாசு!), ரஜினியின் ஆட்டம்தான் ஒரே ஆறுதல்!

பாடலின் வரிகளுக்கு இங்கே சொடுக்கவும்.
பாடலைத் திரை வடிவில் காண்பதற்கு இங்கே சொடுக்கவும்.

Sunday, November 07, 2010

மைக்கேல் டிஸோஸா!

மஜ்பூர் என்கிற இந்திப் படத்தின் மோசமான தழுவல் அந்தப் படம்.

jaded சிவாஜி, bell bottom மாமி கே ஆர் விஜயா, மேஜர், உரக்கச் சிரித்துக் கொல்லும் வி கே ராமசாமி, இளமையான ஜெய்கணேஷ் - மொத்த சிவாஜி கேம்ப்-ஐ வைத்து திரு யோகானந்த் அவர்கள் இயக்கிய படம் படு தோல்வியைச் சந்தித்திருக்கக் கூடும். கடைசி இருபது நிமிடங்களில் 'அதிரடியாய்' ஸ்கிரிப்டை இழுத்துப் போகும் அந்த நடிகர் மட்டும் இல்லாமல் போயிருந்தால்.

இளமையான அமிதாப், பர்வீன் பாபி, ஸீஸன் நடிகர் ப்ரான் என்கிற பட்டாளத்தை வைத்து, சலீம்-ஜாவேத் கதையைப் பின்னியிருந்தாலும் மஜ்பூர் கல்லாப் பெட்டியை அவ்வளவாக அசைக்கவில்லை. இருந்தாலும், தமிழில் சிவாஜி-கே ஆர் விஜயாவை வைத்து எடுத்தார் யோகானந்த். அது சரி, ப்ரான் அவர்கள் மிகத் திறம்படச் செய்திருந்த 'மைக்கேல்' பாத்திரத்தை யார் செய்வது? அப்போதுதான் உயர்ந்து கொண்டிருந்த 'அவரை'ப் போடலாமா? சிவாஜியைக் கேட்டதற்கு 'நீங்க பார்த்து செய்ங்க' என்கிற பதில் வந்தது!


'ஆகாயம் மேலே, பாதாளம் கீழே' என்கிற பாடலில் அறிமுகமாகி, படத்தை இறுதிவரை தாங்கிச் செல்லும் பாத்திரமாய் வந்து போகும் 'மைக்கேல் டிஸோஸா' ரஜினியின் நடிப்பு மற்றும் ஸ்டைல் 'ஒண்ணாங்'கிளாஸ் என்று ரசிகர்களால் அமோகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது! இளையராஜாவின் இசையும் சேர்ந்து கொள்ள, படம் நூறு நாட்கள் ஓடியது!

இளையராஜாவின் இசை பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். எஸ் பி பி அவர்களின் heavy voice-ல் சிவாஜி வாயசைத்த 'திருத்தேரில் வரும்', 'என்னோடு பாடுங்கள்' மற்றும் மென்குரலோன் யேசுதாஸ் அவர்களின் 'ஆகாயம் மேலே, பாதாளம் கீழே' டப்பாங்குத்து, என பாடகர்களை மாற்றியமைத்த இளையராஜாவின் யுக்தி அபாரம். அதுவும் ரஜினி காட்சிகளின் BGM உயர்தரம்!

இளமை அமிதாப் செய்திருந்ததை நடிகர் திலகம் ஏற்று நடிக்க, ஸீனியர் ப்ரானின் ரோலை வளர்ந்து வரும் ரஜினி ஏற்றிருந்தது இன்னுமொரு சுவாரஸ்யம்.

'நான் வாழ வைப்பேன்' படம் தயாரிப்பாளரை வாழ வைத்தது; அன்றிலிருந்து இன்று வரை அனேகமாய் எல்லாரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் ரஜினியின் மற்றுமொரு பரிணாமத்தையும் வெளிக்கொணர்ந்தது என்பதில் துளியும் சந்தேகமில்லை.

Tuesday, October 05, 2010

எந்திரனும் சாரு ஸாரும் - 2

குரு§க்ஷத்திரப் போர் துவங்குமுன் தருமன் கௌரவ சேனைத் தலைவர்கள், மூத்தவர்கள் அனைவரிடமும் போய் 'போரில் வெற்றி பெற எனக்கு ஆசி வழங்குங்கள்!' என்றானாம்! அதே போல, சாரு ஸார் கருத்துக்களை முதன் முறையாக மறுக்கத் துவங்கி எழுதுவதற்கு அவரிடமே ஆசி கேட்டு 'ஏகலைவன்' போலத் துவங்குகிறேன்!


கோபமான இரண்டு பேர் என்கிற தலைப்பில் 'எந்திரன்' விமர்சனத்தைத் துவக்கியிருக்கும் சாரு ஸார், 'மீதியை வெண்திரையில் காண்க' ஸ்டைலில், விமர்சனத்தை முழுமையாக வாசிக்க 'உயிர்மை, நவம்பர் 2010' இதழைப் பார்க்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். நிச்சயம் வாங்கிப் பார்ப்போம், படிப்போம் ஸார்!


முதல் பாரா இப்படிப் போகிறது...

..இப்போது தமிழ்நாட்டிலேயே அதிக கோபத்துடன் இருக்கும் இரண்டு நபர்களை நீங்கள் சுலபமாகக் கண்டு பிடித்து விடலாம். ஒருவர், கமல்ஹாசன். காரணம், தன் போட்டியாளரான ரஜினியின் ஆக மோசமான ஒரு படத்திற்குக் கிடைத்திருக்கும் வானளாவிய புகழ். இரண்டாவது, சாரு நிவேதிதா.

'சக போட்டியாளரான' என்கிற வார்த்தைகளின் மூலம் என்ன சொல்கிறார்?

கமல்/ரஜினி நடுவில் போட்டி இருப்பதையா? எந்தக் காலத்தில்?

சிவாஜி/எம் ஜி ஆர் காலத்தில் 'கேம்ப்' என்று நடிகர்களையும், ரசிகர்களையும் பிரித்து வைத்து 'சிலர்' குளிர் காய்ந்தது எல்லோருக்கும் தெரியும். இதைத் தெரிந்து தெளிந்த, கமல் ரஜினி என்றோ ஒன்றாகிவிட்டனர். கமல் படம் வரும்போது ரஜினி காணாமல் போவதும், ரஜினியின் படம் ரிலீஸாகும்போது கமல் கமுக்கமாய் இருப்பதும் இதனால்தான்!

இரண்டு பேர் என்கிறதில் தன்னையும், கமலையும் இணைத்துக் கொள்கிறார். எதற்கு? எந்திரனையும், ரஜினியையும் விமர்சிப்பதில்! இல்லையென்றால், கமலைப் பிரித்துப் பிரித்து மேய்ந்து எழுதுவது வழக்கம்தானே?!

உயிர்மை படித்தபின் மீண்டும் எழுதுகிறேன்.