Showing posts with label கவியரசு. Show all posts
Showing posts with label கவியரசு. Show all posts

Saturday, June 29, 2013

கண்ணதாசன் பாடல்களில் கடவுள் தத்துவங்கள் - 2

அந்தப் பாடல் எடுக்கப்பட்ட விதம் ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை.

’விக்’எனப்படும் செயற்கை முடி தரிப்பு, புருவங்களில் அடங்கும் பெரீய்ய மூக்குக் கண்ணாடி, பைஜாமா, ஜிப்பா, மேலே அரைகுறையாய் அங்கவஸ்திரம் (அ) ஷால்... இல்லையில்லை ஏதோ ஒன்று.  அருகிலேயே பேரிளம் வயதில் தங்கை.  ஐம்பது வயது ‘திருமணம்’ ஆகாத அண்ணன், முப்பது வயது ‘திருமணம்’ ஆகாத தங்கையை நோக்கிப் பாடுவதாக அமைந்த பாடல்.  பார்க்க நேர்ந்தால் உடனே சேனலை மாற்றிவிடுவேன். பாசமலர் படத்தில் ‘மலர்களைப் போல்..’ பாட்டமைப்புக்கும் இதற்கும்தான் எவ்வளவு வித்தியாசம்.  சிவாஜியின் வயது உட்பட :-)

இந்தப் பாடலை ‘கண்ணதாசன் பாடல்களில் கடவுள் தத்துவங்கள்’ புத்தகத்தில் ‘பி என் பரசுராமன்’ (அல்லயன்ஸ், ரூ 90) அவர்கள் விளக்கம் அளித்தது கண்டு வியந்து போனேன்.  ‘சே! காட்சிக்காகப் பாடலை இதுவரை கேட்காமல் போனேனே!’ என வெட்கப்பட்டேன்.

கண்ணதாசன் பாடல்களில் கடவுள் தத்துவங்கள் - 1

    ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
    ஒரு மனிதன் வாழ்வைக் கொடுமை என்றான்

என்று கண்ணதாசன் அமைக்கவில்லை.


இப்படி அமைந்திருந்தாலும், அது இராகத்திற்கோ,  தாளத்திற்கோ தகராறு செய்யவில்லை; ஒத்துத்தான் போகிறது.  வேறு யாராயிருந்தாலும் இப்படித்தான் வார்த்தைகளை அமைத்திருப்பார்கள்.

Sunday, June 24, 2012

கவியரசு - 2

மெல்லிசை மன்னர் விசுவநாதன், கவியரசு பற்றி…

அவன்தான் மனிதன் படத்துக்கு கண்ணதாசன், ஐந்து பாடல்கள் எழுதினார்.

மே மாதம் சிங்கப்பூரில் நடக்கும் மலர்க்காட்சியில் பாடலைப் படமாக்கத் திட்டம்.  ஆனால், கவிஞர் ‘பிஸி’.


கவிஞரிடம் தயாரிப்பாளர்கள் அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டே வந்தார்கள்.  நானும் ‘அண்ணே..மே மாதம் நெருங்குது’ என்று இடையிடையே ஞாபகப் படுத்தினேன்.

ஒரு நாள் கவிஞர் வந்தார்.  நான் ‘மே மாதம்’ என்றேன்.  ‘என்னடா…சும்மா மே..மே..மே..ன்னு கத்துறே…இந்தா பல்லவி’ என்று பாடல் மழை பொழிந்தார்.  சொக்க வைக்கும் பல்லவி, அது!

அன்பு நடமாடும் கலைக்கூடமே…!
ஆசை மழை மேகமே!

இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் ‘மே’ என்கிற எழுத்தில் முடியும்.  மொத்தம் 27 ‘மே’ பாட்டில் வரும்!

இதே போல் இன்னொரு பாடல்.  படம் ‘பட்டினப் பிரவேசம்’.  கே பாலசந்தர் இயக்கம்.  பாடல், கவிஞர்.  என் விரல்கள் ஆர்மோனியத்தில்.  ‘நா…நன்னா..நன்னா..நன்னா..நன்னா..ந நான நா…’ என்ற மெட்டை வாய் உச்சரித்தது.

மெட்டு கவிஞருக்குப் பிடிக்கவில்லை.  ஆனால் பாலசந்தருக்கு பிடித்துவிட்டது.  ‘கவிஞரை விடாதீர்கள், அவரால் முடியாதது அல்ல’ என்று அவர் என்னை உசுப்பினார்.  நான் கவிஞரை உசுப்பினேன்!

கவிஞர்தான் அற்புதக் கவி ஆயிற்றே! கற்பூரமாகப் பற்றிக் கொண்டார்; கலக்கல் ‘மூடு’க்கு வந்துவிட்டார்.

‘விசு! ட்யூனை போடுறா’  என்றார்.  உடனே நான் ஒரு சின்ன வேலை செய்தேன்.  ஏற்கெனவே சொன்ன மெட்டுதான்.  அதில் எழுத்தை மாற்றி ‘லா…லல்லா.. லல்லா… லல்லா.. லல்லா.லால லா…’ என்று மெட்டுக் கட்டினேன்.

கவிஞர் ‘என்னடா…முதலில் ‘நா’ வந்தது, இப்போது ‘லா’ வருகிறது?’என்று கேட்பார் என நினைத்தேன்.  ஆனால், கேட்கவில்லை!  பூமழை போன்று பாமழை சொரிந்தார்.  அந்தப் பாடல்

வான் நிலா நிலா அல்ல..
உன் வாலிபம் நிலா…

நானும் ‘லா;வில் முடித்தேன்.  கவிஞரும் ஒவ்வொரு வரியையும் ‘லா’விலேயே முடித்தார்.  இதில் அவரை அவரால் மட்டுமே வெல்ல முடியும்.

நான் ‘அண்ணே! எல்லா ‘லா’வையும் சொல்லிட்டீங்க…நாலு ‘லா’தான் பாக்கி’ என்றேன்.

’என்னடா, அந்த நாலு ’லா’?’

‘பாதர் இன் லா, மதர் இன் லா, பிரதர் இன் லா, சிஸ்டர் இன் லா’ என்றேன்.

கவிஞர் என்னை இறுகக் கட்டிக்கொண்டு கலகலவென சிரித்தார்.

-கவியரசு கண்ணதாசன் கதை, கண்ணதாசன் பதிப்பகம்.

Saturday, June 23, 2012

கவியரசு - 1

கவியரசர் கண்ணதாசனுக்கு என்ன ராசியோ தெரியவில்லை! 


பெயரில் முதல் எழுத்து ‘க’ என அமைந்ததால், ‘க’ என்ற எழுத்துக்கும் அவருக்கும் பொருத்தம் அதிகம்.


முதல் பாடல் – ‘கலங்காதிரு மனமே…’
கடைசிப் பாடல் – ‘கண்ணே கலைமானே..’
கதாநாயகனாக நடித்த படம் – ‘கறுப்புப் பணம்’
கடைசிக் கவிதை – ‘கருவறை தொடங்கி…’
கௌரவப் பட்டம் – ‘கவியரசு’
நண்பர் – ‘கலைஞர் கருணாநிதி’
பிடித்த கடவுள் – ‘கண்ணன்’
பிடித்த ஹோட்டல் – ‘கவிதா’
உதவியாளர் – ‘கண்ணப்பன்’
உடல் எரியூட்டப்பட்ட இடம் – ‘கண்ணம்மா பேட்டை சுடுகாடு’


என்று ‘வணங்காமுடி’ அவர்கள் எழுதிய ‘கண்ணதாசன் கதை’யில் படித்தேன்.


இவற்றோடு ‘கை சரக்காக’…


வாழ்நாள் முழுதும் சுற்றி இருந்தது – ‘கடன்’
வாழ்வை மாற்றி அமைத்தது – ‘கறுப்புப் பணம்’, ‘கவலை இல்லாத மனிதன்’! – தயாரிப்புகளில் இறங்கி, பணத்தை இழந்து கடனில் மூழ்கியது இங்குதான்!


கவியரசு பிறந்த நாள் – சூன் 24!


-இன்னும் வரும்

Sunday, March 25, 2012

கர்ணன்!


கர்ணன் – நவீன தொழில்நுட்ப வடிவத்தில் மறு பிறவி எடுத்திருப்பதைப் பற்றி எல்லோரும் ’போற்றி’ பலவிதமாய் எழுதி, பேசித் தள்ளும் நிலையில் மற்றுமொரு பதிவு… 

படத்தின் தொழில்நுட்பத்திற்கு ஒன்றும் பெரிதாக மெனக்கிட வேண்டியிருந்திருக்காது.  ராஜ் டிவி வசம் இருந்த டிவிடி பிரிண்ட் / டிஜிட்டல் வடிவமாய் மாற்றுவது அவ்வளவு சிரமமாயிருந்திருக்காது.  Mughal-E-Azam படத்தை வண்ண வடிவமாக்குவதில் உள்ள யத்தனங்கள் நிச்சயம் இருந்திருக்க வாய்ப்பில்லை.  அதனால்தான், என்னால் கர்ணனின் புதிய வடிவத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

‘சிவாஜி’ படம் என்று படு அமர்க்களமாய் விளம்பரம்.  உண்மையிலேயே ‘சிவாஜி’ படம் மட்டும்தானா? 

-ஈஸ்ட்மென் கலர் (1964-ல் இது சாதனை)
-கிருஷ்ணராய் படம் நெடுக கம்பீரமாய் வலம் வரும் என் டி ஆர்  
-இரட்டையர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசை
-இலக்கியம், காதல், பக்தி, கொடை, வீரம் என சமூக உணர்வுகள் கொண்டு எழுதப்பட்ட கவியரசுவின் வீர்யம் மிக்க வரிகள். 

ஆக, இவற்றோடு ‘சிவாஜி’யின் மிளிரும் நடிப்பைக் கொண்டதுதான் ‘கர்ணன்’. 

கர்ணனின் பாத்திரப்படைப்பு படத்தில் குழப்பம்தான்.  நல்லவனா? கெட்டவனா?  கெட்டவனாய்க் காண்பிக்க முடியுமா? கதாநாயகன் சிவாஜியாயிற்றே?! இமேஜ் என்னவாகும்?! - (இன்று டெண்டுல்கரை ‘நீக்க’ முடியாத சிக்கல் போல!)  இதனாலேயே, கர்ணனின் புத்திரனை பாண்டவர்கள் கொல்வது போல (புராணத்தில் இல்லாத) ஒவ்வாத கற்பனைக் காட்சிகளைப் புகுத்தி, ‘கர்ண’னை  உருவாக்க வேண்டிய சூழ்நிலை. 
எனக்குத் தெரிந்தவரையில் வியாசர் கர்ணன் பாத்திரத்தைத் தீயவனாகவே சித்திரித்திருக்கிறார்.  வில்லிபுத்தூரார் பாரதம் கர்ணனை ‘கொடையிற் சிறந்தோன்’ என்று போற்றிப் பாடுகிறது. 

மிகப் பலவீனமான பாத்திரப் புனைவான ‘கர்ணன்’ படம் ‘வேட்டைக்காரன்’ முன் தாக்குப் பிடிக்க முடியாமல் போனது.  தேவரின் தாய் செண்டிமெண்ட், எம் ஜி ஆர் ஃபார்முலா, கறுப்பு வெள்ளை முன் பி ஆர் பந்துலுவின் வண்ணம் நீர்த்துப் போனது எளிய உண்மை. 

சிவாஜியின் அற்புத நடிப்பைக் கொண்ட படங்கள் எவ்வளவு இருக்கின்றன?  அதையெல்லாம் விட்டுவிட்டு, ‘கர்ணன்’ படத்தை மட்டுமே ‘தொழில்நுட்பம்’ என்கிற பம்மாத்து வேலை செய்து, சிலாகிப்பதன் காரணம் என்ன?  புரிந்து கொள்ளத்தான் முடியவில்லை. 

Wednesday, December 14, 2011

ரஜினி டூயட்ஸ் - V


ரஜினி டூயட்ஸ் - 13

ஏ வி எம் செட். எம் எஸ் வி இசை. கண்ணதாசன் பாடல். எஸ் பி பி / சுசீலாம்மா குரல்கள். இளமை சொட்டும் ஸ்ரீதேவி. 'விடிய விடிய சொல்லித் தருவேன்' என்கிறார் போக்கிரி ராஜா! கூடை அழகு பக்கத்தில் இருந்தாலும் கண்ணியமாய்க் காதல் செய்யும் ரஜினி சார், உங்களைப் பாராட்ட வார்த்தை இல்லை. என்றும் இளமை ததும்பும் பாடல்...இதற்கு மேல் என்ன சொல்ல?!


ரஜினி டூயட்ஸ் - 14

இளமை சொட்டும் ஸ்ரீதேவி. ஆனால், இந்த முறை அவுட்டோர், இளையராஜா இசை. வாலி வரிகள். எஸ் பி பி, எஸ் ஜானகி கொஞ்சும் குரல்கள். 'தனிக்காட்டு ராஜா'வாய் ஸ்ரீதேவியை ஆளும் ரஜினி சார்! இசை நம்மை தாலாட்டும், ரஜினி / ஸ்ரீதேவி நெருக்கத்தில் வீசும் 'சந்தனக் காற்று'...சூப்பர் சந்தோஷப் பாட்டு!


ரஜினி டூயட்ஸ் - 15

மென்மையா இதுவரைக்கும் பாத்த ரஜினி டூயட்ஸ் இப்போ சடார்னு லேன் மாறி 'குத்துப் பாட்டு'க்குப் போவுது...! ரஜினி சார், ராதாவோட போட்ட 'குத்து' பலருக்கும் தெரியாத பாட்டு. 'உரிமைக்குரல் எம் ஜி ஆர்' கட்டு போல 'வேட்டி கட்டி' ராதாவோட வரிந்து கட்டி தலைவர் ஆடும், வாலி அய்யா லைன்ஸ்-க்கு 'ஒரே மீனிங்'தான்!


-தொடரும்

Saturday, December 10, 2011

ரஜினி டூயட்ஸ் - I

ரஜினி சாரோட பொறந்த நாளை முன்னிட்டு...starting today, till monday...அவரோட டூயட் சாங்ஸ் பாப்போமா?!

Picture Courtesy: http://vijayart.blogspot.com

ரஜினி டூயட்ஸ் - 1

எஸ் பி பி பாடிய இந்த பாட்டு பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தலைவர்-க்கு அவர் பாஷையில் சொல்லப்போனால் 'ட்ட்டர்னிங் பாய்ன்ட்' கொடுத்த படம். ரஜினி அரிதாக வேட்டி கட்டிக் கொண்டு, தூரத்தில் நாயகி இருக்க பாடும் சில பாடல்களில் முதன்மையானது. கடோசியில் ஒன்றாகக் குளித்தாலும் ரஜினி காதலில் கூட கண்ணியம் காட்டி, முதுகு மட்டும் தேய்த்து விட்டு, கன்னத்தோடு கன்னம் வைத்து, நாயகியைத் தூக்கிக்கொள்வார்! 'புவனா ஒரு கேள்விக்குறி' படத்தில், இசைஞானி இசையில், பஞ்சு ஸார் வரிகளில் வரும் 'விழியிலே கலந்தது' பாட்டு, பாருங்களேன்... உங்களுக்கு சட்டெனப் பிடித்து போகும்!


ரஜினி டூயட்ஸ் - 2

மியுசிகல் ஃபிலிம். படத்தில் பாட்டுக்கள் நெறைய இருந்தாலும் ரஜினி சாருக்கு ஒதுக்கப்பட்டது ஒண்ணு சோலோ, ஒண்ணு டூயட் - ரெண்டு பாட்டுகள் என்றாலும் 'தலைவர்' பின்னி பெடலெடுத்தார். எஸ் பி பி வாய்ஸ்ல, ரஜினி சாரோட / கீதாவோட இளம் வயசுல, கவியரசு எழுதி, மெல்லிசை மன்னர் இசையமைத்த பாட்டு 'நம்ம ஊரு சிங்காரி'யை 'நினைத்தாலே இனிக்காதா?!

பி.கு - தலைவரால நகைச்சுவை பண்ண முடியும்னு காட்டின மொத படம் இதான்!


ரஜினி டூயட்ஸ் - 3

எஸ் பி பி, எஸ் ஜானகி அவர்கள் பாடின பாட்டு இது. ரஜினி ஸார் ரொம்பவே முயற்சி எடுத்துக்கிட்டு பண்ண பாட்டுன்னும் சொல்லலாம். மூவ்மெண்ட்ஸ் ரொம்பவே வித்தியாசமா இருக்கும், ஸாரோட 'இஷ்டைல்' ரொம்பவே அதிகமா இருக்கும், அப்பப்போ ஃபரீஸ் ஆகி அப்டியே நிற்பதும் சூப்பர்! இளமை ததும்பும் ரஜினியோட நாயகி பிரமீளா. வி குமார் அவர்கள் இசையில், வாலி அய்யா எழுதிய பாடல் 'மதனோத்சவம் ரதியோடுதான்' ரொம்பவே அட்டஹாசம்.




-தொடரும்