Showing posts with label எஸ் பி பி. Show all posts
Showing posts with label எஸ் பி பி. Show all posts

Thursday, December 15, 2011

ரஜினி டூயட்ஸ் - VII


ரஜினி டூயட்ஸ் - 19

'சோலோ' எஸ் பி பி-யாய்ப் போனாலும், இரணடு டூயட்கள் முத்துக்கள் அல்லவா? ஆனாலும், 'காதலின் தீபத்தில்' மங்கிப் போன 'என் வாழ்விலே வரும் அன்பே வா'-வுக்கே என் ஓட்டு. இளையராஜாவின் பசுமையான இசையில், ரஜினி மாதவி இணைப்பில் முதன் முதலாய் அமைந்த சூப்பர் காதல் பாட்டு....பஞ்சு சார் வரிகளில்...


ரஜினி டூயட்ஸ் - 20

இதை, இதை எப்படி மிஸ் பண்ணேன்??! பாட்டைக் கேட்பதில், பார்ப்பதில் அவ்வளவு சுகம். ரஜினி / சிலுக்கு ஐட்டம் நெம்பர் இல்லாத அற்புத டூயட். இளையராஜா இசையும், எஸ் பி பி / ஜானகியம்மா வாய்ஸும், சிலுக்கின் presence-ம் அடடா...மேல 'பேசக் கூடாது'!! ரஜினிக்கு 'அடுத்த வாரிசு' உண்டா என்ன?! அது சரி, பாட்டு எழுதினது யாருங்க?


ரஜினி டூயட்ஸ் - 21

மகேந்திரன் சார் இயக்கம், இளையராஜா இசை, ரேவதி நடிப்பு இவர்களோடு சேர்ந்த ரஜினி காந்தம்! பாட்டுக்கு என்னால எதுவுமே எழுத முடியாது...அதற்கும் அப்பால் அமைந்த அருமைப் பாட்டு...தலைவர் வாசம் வீசும் 'தாழம்பூ' பாட்டு...


-தொடரும்

ரஜினி டூயட்ஸ் - VI


ரஜினி டூயட்ஸ் - 16

படத்தில் மூன்று அற்புதமான டூயட் பாடல்கள். எதைத் தொடுப்பது, எதை விடுவது? ரஜினி சார்/ராதா நடித்த, எஸ் பி பி இசையமைத்து, ஜானகி அம்மாவுடன் பாடிய மூன்று பாட்டுக்களில் நான் தெரிவு செய்யும் பாட்டு 'அடடா இதுதான் சுகமோ' பாட்டில் அமைந்த இயற்கை சூழல், கேஷுவலாய் வரும் 'துடிக்கும் கரங்கள்' ரஜினி/ராதா கூடுதல் பலம். பாட்டு எழுதியது? - சொன்னால் உதவியாய் இருக்கும்.


ரஜினி டூயட்ஸ் - 17

இந்தப் படத்திலும் மூன்று சூப்பர் ஹிட் டூயட் பாடல்கள். 'பூமாலை', 'ராத்திரியில் பூத்திருக்கும் தாமரையை' விட 'அடுக்கு மல்லிகை'தான் எனக்குப் புடிக்கிது! ஆந்திர கொடுக்காய் வரும் ரஜினி, ஆந்திர ஊறுகாவாய் சில்க்...அப்புறமென்ன மஜாதானே...இளையராஜா இசையில், எஸ் பி பி/ஜானகியம்மா குரல்களில், இளமை வாலி வரிகளில் 'தங்க மகன்' ஜ்வலிக்கும் பாடல் இதோ...!



ரஜினி டூயட்ஸ் - 18

மீண்டும் ராதா/ரஜினி! இசைஞானி இசையில், எஸ் பி பி / ஜானகியம்மா குரல்களில் மற்றுமொரு மென்மையான, அருமையான பாடல். வாலி அய்யா 'புகுந்து விளையாடியிருக்கும் பாடல் இது. ரஜினி / ராதா உடைகள், ஜோடிப் பொருத்தம் கச்சிதம். ஊட்டி/கொடை-யில் எடுக்கப்பட்ட சூழலின் ஒளிப்பதிவு உயர் தரம்.


-தொடரும்

Wednesday, December 14, 2011

ரஜினி டூயட்ஸ் - V


ரஜினி டூயட்ஸ் - 13

ஏ வி எம் செட். எம் எஸ் வி இசை. கண்ணதாசன் பாடல். எஸ் பி பி / சுசீலாம்மா குரல்கள். இளமை சொட்டும் ஸ்ரீதேவி. 'விடிய விடிய சொல்லித் தருவேன்' என்கிறார் போக்கிரி ராஜா! கூடை அழகு பக்கத்தில் இருந்தாலும் கண்ணியமாய்க் காதல் செய்யும் ரஜினி சார், உங்களைப் பாராட்ட வார்த்தை இல்லை. என்றும் இளமை ததும்பும் பாடல்...இதற்கு மேல் என்ன சொல்ல?!


ரஜினி டூயட்ஸ் - 14

இளமை சொட்டும் ஸ்ரீதேவி. ஆனால், இந்த முறை அவுட்டோர், இளையராஜா இசை. வாலி வரிகள். எஸ் பி பி, எஸ் ஜானகி கொஞ்சும் குரல்கள். 'தனிக்காட்டு ராஜா'வாய் ஸ்ரீதேவியை ஆளும் ரஜினி சார்! இசை நம்மை தாலாட்டும், ரஜினி / ஸ்ரீதேவி நெருக்கத்தில் வீசும் 'சந்தனக் காற்று'...சூப்பர் சந்தோஷப் பாட்டு!


ரஜினி டூயட்ஸ் - 15

மென்மையா இதுவரைக்கும் பாத்த ரஜினி டூயட்ஸ் இப்போ சடார்னு லேன் மாறி 'குத்துப் பாட்டு'க்குப் போவுது...! ரஜினி சார், ராதாவோட போட்ட 'குத்து' பலருக்கும் தெரியாத பாட்டு. 'உரிமைக்குரல் எம் ஜி ஆர்' கட்டு போல 'வேட்டி கட்டி' ராதாவோட வரிந்து கட்டி தலைவர் ஆடும், வாலி அய்யா லைன்ஸ்-க்கு 'ஒரே மீனிங்'தான்!


-தொடரும்

Sunday, December 11, 2011

ரஜினி டூயட்ஸ் - IV


ரஜினி டூயட்ஸ் - 10

காஷ்மீரப் பின்னணியில் ரஜினி பாடிய ஒரு டூயட் நமக்கெல்லாம் தெரியும். இன்னொண்ணு? அதாம்பா இது-னு சொல்லி நான் ஏமாத்த மாட்டேன்...ரஜினி / ஸ்ரீப்ரியா ஜோடி, மெல்லிசை மன்னர் இசை, கண்ணதாசன் பாட்டு, எஸ் பி பி, வாணி ஜெயராம் பாடிய பொல்லாதவன் படம், 'அதோ வாராண்டி, வாராண்டி வில்லேந்தி ஒருத்தன்'....பாடலில் காடு, மலை, நதி, ரோடு, குதிரை என எல்லாவற்றிலும் முத்திரை பதிக்கும், லெதர் ஜாகெட்/பான்ட் போட்டு அசத்தும், ரஜினி சாரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்....!


ரஜினி டூயட்ஸ் - 11

புதிதாய்க் கல்யாணம் ஆகி, தேனிலவு கொண்டாடும் தம்பதியினரை நம் முன்னே நிறுத்தும் பாடல். இசைஞானி(ஒரு மாறுதலுக்காக) / ஜானகியம்மா குரல்களில், பஞ்சு சார் எழுத்தில், கழுகு படத்தில் 'பொன் ஓவியம்' பாடல்...ரஜினி/ரதி அப்படி ஒரு ஜோடிப் பொருத்தம் பாட்டில் தெரியும்...தலைவர் முதலிரவைக் கூட 'இஷ்டைல்'-ஆ கொண்டாடுவார் போல...! அத்தனை இளமை!! பேருந்தில் எடுக்கப்பட்ட பொன் ஓவியம் எங்காத்து மாமிக்கு கூட புடிச்ச பாட்டாக்கும்...!


ரஜினி டூயட்ஸ் - 12

வரும் பாட்டுக்கு அறிமுகம் தேவைதானா? இசைஞானி, யேசுதாஸ், ஜானகியம்மா, கண்ணதாசன், ரஜினி, மேனகை என எல்லோருமே மென்மையாய் அடக்கி வாசித்தாலும், பாட்டு இன்றும் பட்டைய கெளப்புது! 'ராமனின் மோகனம்' பாட்டு, ரஜினி சார் எட்ட நின்று காதல் யாசிக்கும் பாட்டு, 'நெற்றிக்கண்' பெசல் பாட்டு!


-தொடரும்

ரஜினி டூயட்ஸ் - III


ரஜினி டூயட்ஸ் - 7

இந்தப் பாட்டும் பசுமையான பாட்டுதான். ஆறிலிருந்து அறுபது வரை ரசிக்கும் பாட்டுதான். இளையராஜா / கண்ணதாசன் / எஸ் பி பி/ஜானகி இணைப்பில் ரஜினி/சங்கீதா பாடும் காதல் பாட்டுதான். செட், ஜிகினா, பள பள உடைகள் கூடிய டிப்பிகல் எஸ் பி எம் பாட்டு. ரஜினி சார் 'கொஞ்சம்' வித்யாசம் காட்டிருப்பார் இந்த பாட்டுல, என்னவா? கண்டுபிடிங்களேன்...!


ரஜினி டூயட்ஸ் - 8

ரஜினி / ஸ்ரீப்ரியா ஜோடி போட்டு நடித்த 'நதியோரம்' பாட்டு உங்களுக்குத் தெரியுமா? இசைஞானியின் மெலடிகளில் நிச்சயம் வந்து விழும் பாட்டு 'நதியோரம்'. ரஜினி 'இஷ்டைல் / டிரஸ்' எல்லாமே பிரமாதமாய் இருக்கும். கொஞ்சம் நெருக்கமாய், கதாநாயகியை இறுக்கமாய்க் கட்டிப் பிடிக்கும் பாடல்! அன்னை ஒரு ஆலயம் படத்தில், வாலி வரிகளில், நடுவே வரும் 'லு லு லு'வில் ..'நதியோரம்'...அபாரம்!


ரஜினி டூயட்ஸ் - 9

உரசினாலே இன்பம்தானே...! அதுவும் மனதிற்குப் பிடித்தவளோடு உரசுவது என்றால்? இன்பத்திற்குக் கேட்கவா வேண்டும்...தலைவர் / ரதி இருவரும் 'உரசி'கொண்ட பாடலை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா...? ஓரக்கண்ணால் பார்ப்பது, தலையைக் கோதிக்கொள்வது, ஆடுவது என எல்லாவற்றிலும் ரஜினி சாரின் மானரிசம் அதிகம் கொண்ட பாடல்! 'அன்புக்கு நான் அடிமை' படத்தில், எஸ் பி பி / சுசீலாம்மா குரல்களில், இசைஞானி இசையில், வாலி வரிகளில், 'ரஜினி சார் டூயட்டை இன்னிக்கெல்லாம் கேட்டுண்டே இருக்கலாமே?!'


-தொடரும்

Saturday, December 10, 2011

ரஜினி டூயட்ஸ் - I

ரஜினி சாரோட பொறந்த நாளை முன்னிட்டு...starting today, till monday...அவரோட டூயட் சாங்ஸ் பாப்போமா?!

Picture Courtesy: http://vijayart.blogspot.com

ரஜினி டூயட்ஸ் - 1

எஸ் பி பி பாடிய இந்த பாட்டு பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தலைவர்-க்கு அவர் பாஷையில் சொல்லப்போனால் 'ட்ட்டர்னிங் பாய்ன்ட்' கொடுத்த படம். ரஜினி அரிதாக வேட்டி கட்டிக் கொண்டு, தூரத்தில் நாயகி இருக்க பாடும் சில பாடல்களில் முதன்மையானது. கடோசியில் ஒன்றாகக் குளித்தாலும் ரஜினி காதலில் கூட கண்ணியம் காட்டி, முதுகு மட்டும் தேய்த்து விட்டு, கன்னத்தோடு கன்னம் வைத்து, நாயகியைத் தூக்கிக்கொள்வார்! 'புவனா ஒரு கேள்விக்குறி' படத்தில், இசைஞானி இசையில், பஞ்சு ஸார் வரிகளில் வரும் 'விழியிலே கலந்தது' பாட்டு, பாருங்களேன்... உங்களுக்கு சட்டெனப் பிடித்து போகும்!


ரஜினி டூயட்ஸ் - 2

மியுசிகல் ஃபிலிம். படத்தில் பாட்டுக்கள் நெறைய இருந்தாலும் ரஜினி சாருக்கு ஒதுக்கப்பட்டது ஒண்ணு சோலோ, ஒண்ணு டூயட் - ரெண்டு பாட்டுகள் என்றாலும் 'தலைவர்' பின்னி பெடலெடுத்தார். எஸ் பி பி வாய்ஸ்ல, ரஜினி சாரோட / கீதாவோட இளம் வயசுல, கவியரசு எழுதி, மெல்லிசை மன்னர் இசையமைத்த பாட்டு 'நம்ம ஊரு சிங்காரி'யை 'நினைத்தாலே இனிக்காதா?!

பி.கு - தலைவரால நகைச்சுவை பண்ண முடியும்னு காட்டின மொத படம் இதான்!


ரஜினி டூயட்ஸ் - 3

எஸ் பி பி, எஸ் ஜானகி அவர்கள் பாடின பாட்டு இது. ரஜினி ஸார் ரொம்பவே முயற்சி எடுத்துக்கிட்டு பண்ண பாட்டுன்னும் சொல்லலாம். மூவ்மெண்ட்ஸ் ரொம்பவே வித்தியாசமா இருக்கும், ஸாரோட 'இஷ்டைல்' ரொம்பவே அதிகமா இருக்கும், அப்பப்போ ஃபரீஸ் ஆகி அப்டியே நிற்பதும் சூப்பர்! இளமை ததும்பும் ரஜினியோட நாயகி பிரமீளா. வி குமார் அவர்கள் இசையில், வாலி அய்யா எழுதிய பாடல் 'மதனோத்சவம் ரதியோடுதான்' ரொம்பவே அட்டஹாசம்.




-தொடரும்

Sunday, November 13, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 33

டி ஆர் காதல் சோகப் பாடல்களைப் பற்றி....


காதலின் சோகத்தை இப்படியும் சொல்ல முடியுமா? தோல்வியை இப்படியும் விவரிக்க இயலுமா? அதுவும் முதல் படத்தில்? எஸ் பி பி அவர்களின் குரல் அழுத்தத்தில் 'குழந்தை பாடும் தாலாட்டு' ; 'இரக்கமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்' - காதலுக்குப் பொருத்தமான வரி எழுதிய டி ஆர், இன்று தொலைந்து போனது ரொம்பவே அநியாயம்.



'சாந்தி' என்கிற வார்த்தையை வைத்து பல விதமாய் அர்த்தம் வரும்படி எழுத முடியுமா...? டி எம் எஸ் அவர்கள் குரலில் 'அமைதிக்கு மறு பெயர் சாந்தி' என்கிற டி ஆர் வரிகள் 'காதலின் ஆழத்தையும், அர்த்தத்தையும், தோல்வியையும்' சொல்லுவது நெறைய பேருக்குத் தெரிந்திருக்காது.



டி ஆர் அவர்களின் பலம் பாடகர்களைத் தெரிவு செய்வது. 'வைகைக் கரை காற்றே நில்லு' பாடலுக்கு யேசுதாஸ் அவர்களின் குரல் கனப் பொருத்தம். 'காற்றே பூங்காற்றே, என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்' வரிகளில் இசையும், குரலும் இழையோடும் அற்புதம், 'காதலில் வாழ்ந்த கன்னி மனம், காவலின் வாடையில் கன்னி விடும்' எனும்போது நம் மனதை என்னென்னவோ செய்கிறது.



'பூக்களைத்தான் பறிக்காதீங்க, காதலைத்தான் முறிக்காதீங்க' என அறவுரையுடன் துவங்கும் பாடல் 'மனசுக்குள் காதலை வெச்சான், மனுசந்தான் அதனை பிரிச்சான்' எனத் தெளிவாகச் சொல்லும் 'சங்கர் கணேஷ்' பாடும் பாடல் இதோ...



'பொன்னான மனசே...பூவான மனசே...வெக்காத பொண்ணு மேல ஆசை...' எனத் துவங்கும் காதல் சோகப் பாடலில் முழுக்க முழுக்க யதார்த்தம். 'காதல் என் காதல், அது காதல் இல்ல' என மயக்கம் என்ன படத்தில் வரும் பாடலுக்கு வித்து இந்தப் பாடல் எனத் 'தெகிரியமாய்'ச் சொல்லலாம். டி ஆர் பாடியிருப்பது அழகு...மெல்லிய சோகத்தில் 'அன்று கையதானே கழுவு என்றாள், இன்று காதல் இல்லை அழுவு என்றாள்' எனப் பாடும்போது நமக்கும் வலிக்கத்தான் செய்கிறது.



Friday, November 04, 2011

பரதேசி டைரிக் குறிப்பு - 31

இன்று பலரும் ஏளனமாய்ப் பார்க்கும் டி ஆர், 'அன்று' தேர்ந்த இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என்பது எத்துணை பேருக்குத் தெரியும்....? அவரும், பாலு சாரும் சேர்ந்தால்...நிச்சயம் 'ஹிட்'தான்...!

'வாசமில்லா மலரிது' என்று துவங்கும் டி ஆர் / பாலு கூட்டணி என்றும் பசுமை / இளமை / இனிமை. பாலு 'அடக்கி' வாசித்த பாடல் என்று வைத்துக்கொண்டாலும், டி ஆரின் இசை / வரிகள் நம்மை ஈர்த்து, ('மாதங்களை எண்ண பனிரெண்டு வரலாம், உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட?' ) , 'ஒன்ஸ் மோர்' கேட்கத் தூண்டும்...!


இரவில் விளக்கணைத்து, கேட்கக் கூடிய பாடல்களில் நிச்சயம் இந்தப் பாடல் உண்டு. 'மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையை தூது விட்டேன்' என்று எழுதியவனின் ரசனை எத்துணை உயர் ரகமாய் இருந்திருக்க வேண்டும்? இதை பாலுவிடம் கொடுத்தால்? 'பின்னி பெடல்' எடுத்து விட மாட்டாரா? கேளுங்கள்...இரவில் விளக்கணைத்து, முடிந்தவர்கள் உங்கள் மனதிற்கு இனியவரையும் அணைத்துக்கொண்டு கேளுங்கள்...


டி ஆர் / பாலு 'அதகளம்' செய்த பாடல் இது. துள்ளல் இசைக்கு ஈடு கொடுக்கும் வகையில் பாலு பாடியிருப்பதை வரிகளில் எழுதிவிட முடியுமா? பாட்டைக் கேட்கக் கேட்க, பார்க்கப் பார்க்க, நம்மை அறியாமல் மனது லேசாவதை உணர முடியும்...ஜானகியம்மா, சரிதா added advantage...


'தக்கத் தகதிமி' என்று பாட்டு நடுவில் வந்தாலே 'கிளாசிக்கல்'பாட்டுப்பா!' என எண்ணும் சாதாரண மனித ரகம் நான். 'சலங்கையிட்டாள் ஒரு மாது' பாடலில் பெண்ணை மிக அழகாக வர்ணித்து எழுதியதை, பாலு தமக்கே உரிய கம்பீரத்தோடு பாடியதை மறக்க முடியுமா...பாடல் வரிக்கு ஏற்றார்போல அறிமுக நாயகி 'அமலா' நாட்டியம் ஆடியதைத்தான் மறக்க முடியுமா? பிடியுங்கள், 'கிளாசிக்கல் சாங்' டி ஆர் / பாலு கூட்டணியில்...!

Thursday, September 08, 2011

கமலஹாசன் அவர்களின் 'சப்பக்' (அ) 'பச்சக்' பாடல்கள் - 2


இனி....

'போதுமா முத்தம்'? அதுவும் நம் கமலுக்கு??! புதுமுக ஷோபனாவுடன் இரவில், வெளியிலா/உள்ளிலா என யூகிக்க முடியாத தளத்தில், இளையராஜா இசையில் எஸ் பி பி, ஜானகி பாடிய பாடலில் 'போதாதே, முத்துச்சரம், நாணுமே, விதிவிலக்கு, காமம் வண்டு' எனச் சரளமான வார்த்தைகளில் வரும் 'சத்தம் போடாத முத்தம்'...அந்நாளைய தொலைக்காட்சியில் 'சென்சார்' செய்யப்பட்டாலும், 'சப்பக்' பாடல் நான்கில்....ரசம் சற்றுக் 'சப்'தான்!


சாதாரணமான கமல், 'பால் நிலா ராத்திரி, பாவை ஓர் மாதிரி' என்று அழைத்தால் 'சுஸ்த்'தாகி...'அழகு ஏராளம்...' என்று பின்னாடியே வந்துவிட மாட்டாரா...?! தர்மாவதி ராகத்தில்...இளையராஜாவின் கொஞ்சும் இசையில்...எஸ் ஜானகி, எஸ் பி பி குரல்களில்....'மீண்டும்...மீண்டும் வா' என்று டிம்பிளை அழைத்துக் 'கதாநாயகியாய்'த தொடங்கி வைத்தது...இன்று 'வடக்கு இறக்குமதி'யைச் சர்வ சாதாரணமாக்கிவிட்டது...! 'சரசக்கலையைப் பழகிப் பார்த்தால் விரசம் கிடையாது' என் வரிகள் சொன்னாலும்....'பச்சக்' ஐந்தாகிவிட்டதே ராஜசேகரய்யா..!.


'என்ன சத்தம் இந்த நேரம்?' என்கிற அதட்டலான தொனி கூட 'மன்னர்' கமலின் நடிப்பில் மென்மையாகி, நம்மைப் 'புன்னகை' க்க வைக்கிறதை நினைத்தால்....அடடா! கடலோரக் கவிதையுடன், பொங்கும் அருவியின் பின்னணியில், தாலாட்டும் இசையில், எஸ் பி பி மென்மையில்....கமலின் குரலினூடே அமைந்த இந்தப் பாடல்....'நெருக்க்க்கக்' காதலர்களுக்கு என்றும் பொருந்தும், கமல் ஸாருக்கு மட்டுமே அமையும் 'பச்சக்' பாடல் ஆறு...!



-'பச்சக்' தொடரும்!

Wednesday, August 31, 2011

கமலஹாசன் அவர்களின் 'சப்பக்' (அ) 'பச்சக்' பாடல்கள் - 1

அன்றும் இன்றும் கமலஹாசன் அவர்கள் என்றால் நினைவுக்கு வருவது 'நடிப்பு' மற்றும் 'முத்தம்' (?!). மூன்று முறை தேசிய விருது பெற்றாலும், 'சிருங்காரம்' என அழகுத் தமிழில் அழைக்கப்படுவதைத் தனது படங்களில் செருகுவதைக் குறைத்துக் கொண்டதேயில்லை. சராசரி மனிதர்களை பெருமூச்சு விட வைத்தாலும்.... பாடல்களில் ஒரு க(ம)லை நயம் இருப்பதை யாராலும் மறுக்க / மறக்க முடியாது!

அது சரி 'சப்பக்' (அ) 'பச்சக்' என்றால் என்னபா? சரியான பதிலைத் தர மூன்று பேர் மட்டுமே உண்டு...

அரபு வாசகர் எனது அருமை 'பெரியண்ணா' திரு சங்கர் அவர்கள்...
சென்னை வாசகர், அருமை நண்பர், கவிஞர் திரு ஜே கே அவர்கள்...
சென்னை வாசகர், அருமை நண்பர், திரு தியாகராஜன் அவர்கள்...

ஏனையோர்களும் முயற்சி செய்யலாம்!

கமலின் பொன்மேனி சிலுக்காய் உருகுவதைப் பார்த்து ரசிக்காதவர்கள் இங்குண்டோ? 1983-ல் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய மூன்றாம் பிறை காவியத்தின் களங்கம். கமல தனது மெல்லிய நடன அசைவில், சிலுக்கைத் தூண்டுவது போல, 'ஐஸ்' ஜானகி குரலில் அமைந்திருக்கும் பாடல்..அடடா! இளையராஜா இசையில், ஊட்டி குளிரில், ஆடை குறைந்த, அவுட்டோரின் தெகிரிய ஒளிப்பதிவில் இதோ வருகுது 'பச்சக்' பாடல் ஒன்று....


மீண்டும் நிலா...இந்த முறை முழுமையாகக் காயுது..! வேறு யாராய் இருந்தாலும் ஆபாசமாய்ப் போயிருக்கும் பாடலைக் கமல் ஆள்வதைப் பார்க்கும்போது...மனிதருக்கு 'நேரம் நல்ல நேரம்' என்றுதான் நினைக்கத் தோன்றும். களத்துமேட்டை ஸ்டுடியோவுக்குள் அடக்கி, atmosphere-ஐக் கொணர்ந்து (அந்தக் காலத்தில் அப்பிடிதான் எடுப்பார்களாம்!), நெருக்கத்தைப் படம் பிடித்திருக்கும் எஸ் பி எம் அய்யா....பிடியுங்கள் 'சப்பக்' பாடல் இரண்டை...


'காயும் நிலா'வை வீணாக்காது 'பூவெடுத்து வைக்கும்' கமல்....ஸ்ரீதர் அவர்கள் இயக்கத்தில் பல சர்ச்சைகளுக்கு பின் வெளி வந்த, வந்த வேகத்தில் உள்ளே போன படம்...இதுவும் இண்டோரில் எடுக்கப்பட்டது...இதுவும் அம்பிகாவோடு....'பூவெடுத்து' கமல் பின்னால வைத்தால் 'சொக்காமல்' இருக்க முடியுமா என்ன?! ....எஸ் பி பி குழைவில், எஸ் ஜானகி நெருக்கத்தில், மயக்கும் இசையில் அநேகருக்குத் தெரியாத 'சப்பக்' பாடல் மூன்று...


-'பச்சக்' தொடரும்!

Wednesday, February 02, 2011

ரஜினியின் அறிமுகப் பாடல்கள் - 5

இடம்# 06
பாடல்# 'ஆட்டோக்காரன்..ஆட்டோக்காரன்..'
படம்# பாட்ஷா
இசை# தேவா
பாடல்# வைரமுத்து
பாடியவர்# எஸ் பி பி

என்ன ஒரு பாட்டு இது?

பாடலுக்கு முன்னால் கொடுக்கப்படும் 'பில்ட்-அப்' என்ன, ஜனகராஜ் வாய்ஸில் 'இன்னிக்கு ஆயுத பூஜை இல்ல, அண்ணன் ஆட்டோ ஸ்டாண்டில் பட்டை கெளப்பிகிட்டு இருப்பாரு!' என்று முடித்தவுடன் துவங்கும் 'ராப்' வகைப்பாடல் இசையமைப்பின் மேன்மைக்கு ஒரு சான்று.



'இரக்கமுள்ள மனசுக்காரண்டா, நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா' என்று எஸ் பி பி, ரஜினிக்காக முழங்கும்போது வெகுஜனக் கதாநாயகனின் முத்திரையின் / கவிப்பேரரசு வரிகளின் ஆளுமையும் தெரியும்.

பாடல் வரிகளுக்கு இங்கே சொடுக்கவும்.

Monday, December 20, 2010

ரஜினியின் அறிமுகப் பாடல்கள் - 3

இடம்# 08
பாடல்# 'ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்..'
படம்# முள்ளும் மலரும்
இசை# இளையராஜா
பாடல்# கண்ணதாசன்
பாடியவர்# எஸ் பி பி



இயக்குனரின் நடிகர் என்கிற காலகட்டத்தில் ரஜினி நடித்த படம் 'முள்ளும் மலரும்'. தண்ணியடித்து விட்டு ரஜினி பாடுவதாய் அமைந்திருந்த இப்பாடலை

'ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே...
நாந்தாண்டா என் மனசுக்கு ராஜா, வாங்குங்கடா வெள்ளி கூஜா'

எனத் துவங்கி, முழுதும் 'பிதற்றலாக'வே எழுதியிருந்தார் கவியரசு! ('பட்டு' திருந்தியவராயிற்றே, கேட்கவா வேண்டும்?!) அப்படியிருந்தாலும் கடைசியில்...

'நீ கேட்டா கேட்டத கொடுக்குற சாமியைப் பாத்து கேளுங்கடா!'

என்று முடித்திருப்பதை என்னவென்று சொல்வது?!நடித்திருப்பவருக்கும் 'தண்ணி' பட்ட பாடு, கேட்கவா வேண்டும்?!

கையாலாகாத கோபத்தில், கண்டபடி குடித்துவிட்டு, ஆடிப்பாடும் இந்தப் பாட்டு இயக்குனருக்காகவும், இசைக்காகவும் எட்டாவது இடத்தில்!


பாடலின் வரிகளுக்கு இங்கே சொடுக்கவும்.


Friday, June 04, 2010

பிறந்த நாள் வாழ்த்துக்கள் எஸ் பி பி சார்!


பாடல்களுக்காக ராஜ் ம்யூசிக்ஸ்-ஐத் திருப்பிய போது தெரியவந்தது 'திரு எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாள்'!

மிகக் கடினமாய்த் தேர்ந்தெடுத்த எனக்குப் பிடித்த 'தனித்துப் பாடிய' பாடல்கள் இதோ! (இது தொடரலாம்!)

எங்கேயும் எப்போதும் - நினைத்தாலே இனிக்கும் (எம் எஸ் வி)
வான்நிலா நிலா அல்ல - பட்டினப் பிரவேசம் (எம் எஸ் வி)

படைத்தானே பிரம்மதேவன் - எல்லாரும் நல்லவரே (வி குமார்)

இளைய நிலா - பயணங்கள் முடிவதில்லை (இளையராஜா)
இது ஒரு பொன்மாலைப் பொழுது - நிழல்கள் (இளையராஜா)
மலையோரம் வீசும் காத்து - பாடு நிலாவே (இளையராஜா)
கல்யாண மாலை - புதுப் புது அர்த்தங்கள் (இளையராஜா)

ஒருவன் ஒருவன் முதலாளி - முத்து (ஏ ஆர் ஆர்)
தங்கத் தாமரை மலரே - மின்சார கனவு (ஏ ஆர் ஆர்)

உன்னைப் பார்த்தபின்பு நான் - காதல் மன்னன் (பரத்வாஜ்)