Showing posts with label டி எம் எஸ். Show all posts
Showing posts with label டி எம் எஸ். Show all posts

Sunday, November 13, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 33

டி ஆர் காதல் சோகப் பாடல்களைப் பற்றி....


காதலின் சோகத்தை இப்படியும் சொல்ல முடியுமா? தோல்வியை இப்படியும் விவரிக்க இயலுமா? அதுவும் முதல் படத்தில்? எஸ் பி பி அவர்களின் குரல் அழுத்தத்தில் 'குழந்தை பாடும் தாலாட்டு' ; 'இரக்கமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்' - காதலுக்குப் பொருத்தமான வரி எழுதிய டி ஆர், இன்று தொலைந்து போனது ரொம்பவே அநியாயம்.



'சாந்தி' என்கிற வார்த்தையை வைத்து பல விதமாய் அர்த்தம் வரும்படி எழுத முடியுமா...? டி எம் எஸ் அவர்கள் குரலில் 'அமைதிக்கு மறு பெயர் சாந்தி' என்கிற டி ஆர் வரிகள் 'காதலின் ஆழத்தையும், அர்த்தத்தையும், தோல்வியையும்' சொல்லுவது நெறைய பேருக்குத் தெரிந்திருக்காது.



டி ஆர் அவர்களின் பலம் பாடகர்களைத் தெரிவு செய்வது. 'வைகைக் கரை காற்றே நில்லு' பாடலுக்கு யேசுதாஸ் அவர்களின் குரல் கனப் பொருத்தம். 'காற்றே பூங்காற்றே, என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்' வரிகளில் இசையும், குரலும் இழையோடும் அற்புதம், 'காதலில் வாழ்ந்த கன்னி மனம், காவலின் வாடையில் கன்னி விடும்' எனும்போது நம் மனதை என்னென்னவோ செய்கிறது.



'பூக்களைத்தான் பறிக்காதீங்க, காதலைத்தான் முறிக்காதீங்க' என அறவுரையுடன் துவங்கும் பாடல் 'மனசுக்குள் காதலை வெச்சான், மனுசந்தான் அதனை பிரிச்சான்' எனத் தெளிவாகச் சொல்லும் 'சங்கர் கணேஷ்' பாடும் பாடல் இதோ...



'பொன்னான மனசே...பூவான மனசே...வெக்காத பொண்ணு மேல ஆசை...' எனத் துவங்கும் காதல் சோகப் பாடலில் முழுக்க முழுக்க யதார்த்தம். 'காதல் என் காதல், அது காதல் இல்ல' என மயக்கம் என்ன படத்தில் வரும் பாடலுக்கு வித்து இந்தப் பாடல் எனத் 'தெகிரியமாய்'ச் சொல்லலாம். டி ஆர் பாடியிருப்பது அழகு...மெல்லிய சோகத்தில் 'அன்று கையதானே கழுவு என்றாள், இன்று காதல் இல்லை அழுவு என்றாள்' எனப் பாடும்போது நமக்கும் வலிக்கத்தான் செய்கிறது.



Tuesday, June 28, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 7

யார் அந்த நிலவு?

பாட்டிற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு (ஆதாரம்: மெல்லிசை மன்னர் அளித்த பேட்டி)

மெல்லிசை மன்னர் போட்ட மெட்டுக்கு, நிமிடங்களில் பாடல் வந்து விட்டது கவியரசுவிடமிருந்து! உடனே, திரு டி எம் எஸ் அவர்களைப் பாட வைத்து விட்டார். இனி, சிவாஜி ஸார் அவர்கள் கேட்க வேண்டியதுதான் பாக்கி...

சிவாஜியைப் பாடல் கேட்க வைத்திருக்கிறார்கள் - முடிந்தபின் சிவாஜியிடமிருந்து நோ ரியாக்ஷன். 'என்ன பாட்டு பிடிக்கவில்லையோ?' என்கிற கவலை...கொஞ்ச நேரம் மௌனத்தில் கரைந்த பின் சிவாஜி 'நீங்க போட்டிருக்கிற மெட்டு, கண்ணதாசன் அவர்கள் எழுதிய வரிகள், இதுக்கு மேலே டி எம் எஸ் பாடின விதம் - இதை மேட்ச் பண்றாப்பல நான் நடிக்கணுமே? அதைத்தான் யோசிச்சுகிட்டிருக்கேன். ஒரு நாள் டைம் கொடுங்க...என்னால முடிஞ்சதைப் பண்ணிடறேன்' என்றாராம்! ஒரு நாள் கழித்து, பாடல் எடுக்கப்பட்டதாம்!

அப்படி வந்த பாட்டுதான் இது...படம் ரிலீஸானப்புறம் ஸ்க்ரீன்ல ரசிகனுக்குத் தெரிஞ்சது சிவாஜி மேனரிஸம் மட்டும் ஸ்டைல் மட்டும்தான்...அப்புறமென்ன ஒரே ரகளைதான் போங்க!



ஆகாய Ganges (நன்றி: Hello FM!)

இந்தப் பாடலைக் கேட்டவுடன் எனக்கு நினைவுக்கு வந்தவர் இருவர்....

முதல்வர்....திரு மலேசியா வாசுதேவன் அவர்கள் (என்ன ஒரு ஓபனிங்!)

இரண்டாமவர்...திரு ரஜினிகாந்த் அவர்கள் (மனநிலை பிறழ்ந்து, சரியான பின் நடித்த முதல் படம் இது)

திரு மலேசியா அவர்கள் பாடிய 'அருமை' வெகு ஜனப் பாடல்களின் 'மைல்கல்' பாடல்..கூட எஸ் ஜானகி...கேட்பதற்கு இனிமையோ இனிமை....!

இந்தப் பாடலை எடுக்கும்போது ஸ்ரீதேவி அவர்களுக்கு காலில் அடிபட்டு நடக்க முடியாத சூழல்...உன்னிப்பா கவனித்தால் ஸ்ரீதேவி நடமாட்டம் மட்டுப் பட்டிருப்பது தெரியும்...'உன்னிப்பா' கவனித்தால்தான் தெரியும்...இயக்குனரைப் பாராட்டிவிட்டு, அதற்காகவும் பாட்டைப் பாருங்கள்!

மலேசியா நம்முடன் இல்லை எனும்போது மனம் கனத்துப் போகிறது...அவரது பாடல்களில் அவர் உயிர் இன்றும் உலவிக் கொண்டிருக்கிறது.

பின்குறிப்பு - 'முதல்வர்' - ரஜினிக்குப் பிடிக்காததால், அவர் பெயர் இரண்டாமிடம்!