Showing posts with label யேசுதாஸ். Show all posts
Showing posts with label யேசுதாஸ். Show all posts

Saturday, June 02, 2012

இளையராஜா!

இளையராஜா பிறந்த நாளை எல்லோரும் கொண்டாடி ‘ஆஞ்சு, ஓஞ்சாச்சு’!



வித்தியாசமான கோணத்தில் இளையராஜாவை ஆராயும் முயற்சி இது….திரை வடிவம் வராமலேயே முடங்கிப் போன பாடல்கள் இரண்டை முன் வைக்கிறேன் (கமல், ரஜினி படமாய் அமைந்தது தற்செயல்!)


சிப்பிக்குள் ஒரு முத்து வளர்ந்தது… (விக்ரம்,1986)


கே ஜே யேசுதாஸ்/ஜானகி துள்ளல் குரல்களில் கவிப்பேரரசு எழுதியது.  டிம்பிள் கபாடியா டூயட்டை நெருங்கி அமைந்ததால் நீக்கப்பட்டது.

மென்மை என்றில்லாமல், டப்பாங்குத்து என்று சொல்ல முடியாமல் இசைஞானி அமைத்த ஜோடிப் பாடல் எவ்வளவு பேருக்கு நினைவிருக்கும்?

பாட்டு அமைந்த ராகம் என்னங்ணா?


புத்தம் புது பூப் பூத்ததோ… (தளபதி, 1991)


கே ஜே யேசுதாஸ், எஸ் ஜானகி குரல்களில் நெகிழ வைக்கும் - கவிஞர் வாலி எழுதியது..  படத்தின் நீளம் கருதி குறைக்கப்பட்டது.

படத்தின் சூழலுக்குப் ஏற்ற வகையில் பூபாள ராகத்தில் (ரஜினி-பானுப்ரியா திருமணத்திற்குப் பின், ரஜினியின் வாழ்வை மாற்றிப் போடும், விடியலைத் தரும்) இசைஞானி பொருத்தியதை எப்படிப் புகழ்வது?

பாட்டின் விசேஷம்..இரவில் விளக்கணைத்து கேட்டுப் பாருங்கள்.  பூபாள ராகம் தரும் தாலாட்டில் சுகமாய் உறக்கம் வரும்!

இது போன்ற சூழல்களில் இசையமைப்பாளரின் மனநிலை என்னாவாயிருந்திருக்கும்?


இளையராஜாவின் பாடல்களை அருவியாய்ப் பொழிந்து குளிர்ச்சியாய் தந்த ஆர் வி எஸ் ஐயாவிற்கு என்னால் முடிந்த காணிக்கை…

Sunday, December 11, 2011

ரஜினி டூயட்ஸ் - IV


ரஜினி டூயட்ஸ் - 10

காஷ்மீரப் பின்னணியில் ரஜினி பாடிய ஒரு டூயட் நமக்கெல்லாம் தெரியும். இன்னொண்ணு? அதாம்பா இது-னு சொல்லி நான் ஏமாத்த மாட்டேன்...ரஜினி / ஸ்ரீப்ரியா ஜோடி, மெல்லிசை மன்னர் இசை, கண்ணதாசன் பாட்டு, எஸ் பி பி, வாணி ஜெயராம் பாடிய பொல்லாதவன் படம், 'அதோ வாராண்டி, வாராண்டி வில்லேந்தி ஒருத்தன்'....பாடலில் காடு, மலை, நதி, ரோடு, குதிரை என எல்லாவற்றிலும் முத்திரை பதிக்கும், லெதர் ஜாகெட்/பான்ட் போட்டு அசத்தும், ரஜினி சாரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்....!


ரஜினி டூயட்ஸ் - 11

புதிதாய்க் கல்யாணம் ஆகி, தேனிலவு கொண்டாடும் தம்பதியினரை நம் முன்னே நிறுத்தும் பாடல். இசைஞானி(ஒரு மாறுதலுக்காக) / ஜானகியம்மா குரல்களில், பஞ்சு சார் எழுத்தில், கழுகு படத்தில் 'பொன் ஓவியம்' பாடல்...ரஜினி/ரதி அப்படி ஒரு ஜோடிப் பொருத்தம் பாட்டில் தெரியும்...தலைவர் முதலிரவைக் கூட 'இஷ்டைல்'-ஆ கொண்டாடுவார் போல...! அத்தனை இளமை!! பேருந்தில் எடுக்கப்பட்ட பொன் ஓவியம் எங்காத்து மாமிக்கு கூட புடிச்ச பாட்டாக்கும்...!


ரஜினி டூயட்ஸ் - 12

வரும் பாட்டுக்கு அறிமுகம் தேவைதானா? இசைஞானி, யேசுதாஸ், ஜானகியம்மா, கண்ணதாசன், ரஜினி, மேனகை என எல்லோருமே மென்மையாய் அடக்கி வாசித்தாலும், பாட்டு இன்றும் பட்டைய கெளப்புது! 'ராமனின் மோகனம்' பாட்டு, ரஜினி சார் எட்ட நின்று காதல் யாசிக்கும் பாட்டு, 'நெற்றிக்கண்' பெசல் பாட்டு!


-தொடரும்

Tuesday, November 15, 2011

பரதேசி டைரிக் குறிப்பு - 34

மென்மைக் குரலோன் யேசுதாஸ் அவர்கள் பாடத் துவங்கி ஐம்பது ஆண்டுகள் ஆகி விட்டன. என்னால் முடிந்த காணிக்கை இது.


யேசுதாஸ் அவர்களின் குரல் தனித்துவம் வாய்ந்தது. இன்றும் இளமையுடன், பொலிவுடன் திகழ்வதற்குக் காரணம் முறையான சங்கீதப் பயிற்சி என்பதை மறக்கவும் முடியாது; மறுக்கவும் இயலாது. ஆக்ரோஷத்துடன் அவருடைய 'தர்பார்' துவங்குகிறது!



எம் எஸ் வி இசையில், யேசுதாஸ் மெல்லிய மெட்டுடன் துவங்கி, அற்புதமான கருத்துகளை எளிமைத் தமிழில் போகிற போக்கில் சொல்லி, கண்ணதாசனின் வரிகளைச் சிந்திக்கவைத்து...அம்மாடி! இன்றும் பசுமையாய் நம் நினைவில் 'தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு!'



இளையராஜா இசை, பாலு மகேந்திரா ஒளிப்பதிவு, யேசுதாஸ் அவர்களின் 'பொன் நிலாவே' பாட்டு - இப்படிப் பாட எஸ் பி பி வேண்டாம், என்னாலும் முடியும் என் உரக்க உரைத்த - ஆர்ப்பாட்ட மெலடி பாடல்! எழுதியது வைரமுத்து என்று நினைத்தால் ... தப்பு .. கங்கை அமரன்!



பாடல் 'ரீச்' என்றளவில், இன்றும் எல்லோராலும் ரசிக்கப்பட்டு வரும், 'அம்மா' பாடலை பாடியது அட நம்ம யேசுதாஸ் - என்றுமே 'மேன்மை குரலுக்கு' மன்னன்தானே...!




ஏ ஆர் ஆர் இசை, வைரமுத்து வரிகளில் 'பச்சைக் கிளிகள்' யேசுதாஸ் அவர்களின் அற்புதக் குரலில் எப்போது கேட்டாலும் 'ஆனந்த'ம்தானே!



கடோசி - 1

மொழியுடன் ஒன்றிப் போய், இப்படியும் பாட முடியுமா என என்னை வியக்க வைத்த பாடல். சிட்சோர் படத்தில், இயற்கையாய் அமைத்த சூழலில், ரவீந்திர ஜெயின் எழுத்தில், இசையில் யேசுதாஸ் 'என்றும் பசுமை'ப் பாடல் இதோ!




யேசுதாஸ் அவர்கள் நீடு வாழ இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்!

Sunday, November 13, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 33

டி ஆர் காதல் சோகப் பாடல்களைப் பற்றி....


காதலின் சோகத்தை இப்படியும் சொல்ல முடியுமா? தோல்வியை இப்படியும் விவரிக்க இயலுமா? அதுவும் முதல் படத்தில்? எஸ் பி பி அவர்களின் குரல் அழுத்தத்தில் 'குழந்தை பாடும் தாலாட்டு' ; 'இரக்கமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்' - காதலுக்குப் பொருத்தமான வரி எழுதிய டி ஆர், இன்று தொலைந்து போனது ரொம்பவே அநியாயம்.



'சாந்தி' என்கிற வார்த்தையை வைத்து பல விதமாய் அர்த்தம் வரும்படி எழுத முடியுமா...? டி எம் எஸ் அவர்கள் குரலில் 'அமைதிக்கு மறு பெயர் சாந்தி' என்கிற டி ஆர் வரிகள் 'காதலின் ஆழத்தையும், அர்த்தத்தையும், தோல்வியையும்' சொல்லுவது நெறைய பேருக்குத் தெரிந்திருக்காது.



டி ஆர் அவர்களின் பலம் பாடகர்களைத் தெரிவு செய்வது. 'வைகைக் கரை காற்றே நில்லு' பாடலுக்கு யேசுதாஸ் அவர்களின் குரல் கனப் பொருத்தம். 'காற்றே பூங்காற்றே, என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்' வரிகளில் இசையும், குரலும் இழையோடும் அற்புதம், 'காதலில் வாழ்ந்த கன்னி மனம், காவலின் வாடையில் கன்னி விடும்' எனும்போது நம் மனதை என்னென்னவோ செய்கிறது.



'பூக்களைத்தான் பறிக்காதீங்க, காதலைத்தான் முறிக்காதீங்க' என அறவுரையுடன் துவங்கும் பாடல் 'மனசுக்குள் காதலை வெச்சான், மனுசந்தான் அதனை பிரிச்சான்' எனத் தெளிவாகச் சொல்லும் 'சங்கர் கணேஷ்' பாடும் பாடல் இதோ...



'பொன்னான மனசே...பூவான மனசே...வெக்காத பொண்ணு மேல ஆசை...' எனத் துவங்கும் காதல் சோகப் பாடலில் முழுக்க முழுக்க யதார்த்தம். 'காதல் என் காதல், அது காதல் இல்ல' என மயக்கம் என்ன படத்தில் வரும் பாடலுக்கு வித்து இந்தப் பாடல் எனத் 'தெகிரியமாய்'ச் சொல்லலாம். டி ஆர் பாடியிருப்பது அழகு...மெல்லிய சோகத்தில் 'அன்று கையதானே கழுவு என்றாள், இன்று காதல் இல்லை அழுவு என்றாள்' எனப் பாடும்போது நமக்கும் வலிக்கத்தான் செய்கிறது.



Sunday, August 21, 2011

என்றும் சுஜாதா - 1

படிக்குமுன், சில வார்த்தைகள்...எனக்கும் இசைக்கும் 'அவ்வளவாக' சம்பந்தம் இல்லை. படத்தைப் பற்றிய 'என் பார்வை'-யில் கூட, பாடல்களைத் தொட்டு விட்டுத்தான் போவேன். பாடல்களின் வரிகளை ரசிக்கத் தெரிந்த அளவிற்கு, இசை / பாடகர்கள்-ஐப் பற்றித் தெரியாது. இந்த நேரத்தில் எனக்குத் தெம்பு கொடுத்து 'எழுதுங்க தல, உங்களால முடியும்' என்று எழுதவைத்த திரு மோகன் அவர்களுக்கு நன்றி பல. தொடர்ந்து எழுதி, இனிமையான முடிவைக் கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்தவரும் அவர்தான்.

சுஜாதா என்கிற பெயருக்கும் தமிழ் / சினிமா-வுக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது.

சுஜாதா என்கிற பெயரில் திரு ரங்கராஜன் எழுத்தில் துவங்கி, வசனம் / திரைக்கதையில் முத்திரை பதித்தது..
சுஜாதா என்கிற பெயரில் அறிமுகமாகி, 'பெண்மை'க்குத் தனி அந்தஸ்தைத் திரையுலகத்திற்கு தந்து, கோலோச்சிய நாயகி..

எனத் 'தமிழ்' இவர்களை நிரந்திர சரித்திர / இலக்கிய / சினிமா ஏடுகளில் தக்க வைத்துக்கொண்டது.

காலன் இவர்களைத் தத்தெடுத்துக் கொண்டாலும், தமிழுக்கு 'சுஜாதா' பெயர் மீது கொண்ட மோகம் ஏனோ குறையத்தான் இல்லை. இவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில்...ஒரு படி மேலே போய் 'தமிழ்', இன்னுமொரு 'சுஜாதா'வைக் கொணர்ந்தது.

ஆம். 'சுஜாதா' என்கிற பெயர் கொண்டு, தனது தேனினிய குரலால் இன்றும் சினிமா இசைப் பிரியர்களைக் 'கட்டு'க்குள் வைத்திருக்கும் 'பின்னணிப் பாடகி' எனும் மந்திர ராணிக்கு இந்தத் தொகுப்பு ஒரு சிறிய முயற்சி, அர்ப்பணம்.

ஒரு சிறிய 'சுஜாதா' முணுமுணுப்போடு துவங்குவோமா?!

சுஜாதா வாழ்க்கையில் நெறைய ஆச்சர்யங்கள்...

-இரணடு வயதில் தந்தையைப் பறி கொடுத்தது..
-ஏழு வயதில் 'பாட்டு'-ப் பணியை துவக்கியது
-பத்து வயதில் திரு கே ஜே யேசுதாஸ் அவர்களோடு மேடையில் இணைந்து பாடியது
-பதினோராவது வயதில் மலையாள சினிமாவில் பாடகியாக அறிமுகமாகியது
-ஹிந்துஸ்தானி இசையில் தேர்ச்சி பெற்றிருப்பது
-ஃபினிக்ஸ் பறவையாய் எழுந்து, தமிழ் சினிமாவை 'ஆளுமை'ப் படுத்தியது

என சுஜாதா வாழ்க்கையில் நெறைய அதிசயங்கள் உண்டு.

கொச்சி கலபாவனில் சேர்ந்து, பயின்ற சுஜாதாவிற்கு பாடுவதென்றால் அவ்வளவு விருப்பம். ஏழு வயதில் சரளமாய்ப் பாடுவது சாமான்யமா என்ன? பாட்டுப் போட்டிக்குத் திரு யேசுதாஸ் அவர்கள் தலைமை என்றவுடன் 'குஷி' தாங்கவில்லை குழந்தைக்கு. 'பாடி'க் காட்டலாம் என்றிருந்தவளுக்குப் பேரதிர்ச்சி. கலாபவன் நடத்தும் போட்டி என்பதால், அதன் உறுப்பினர் என்கிற வகையில் 'சுஜாதா' பாட முடியாதாம்! அழுகை பொத்துக் கொண்டது...பார்த்தார் யேசுதாஸ். 'வீட்டுக்கு வரேன், பாடிக் காண்பியேன்' என்றார். வந்தார்...பின்பு என்ன?

சரித்திரம் எழுதப்பட்டது. இசைக் குழுவில் இணைத்துக் கொண்டார். திரு யேசுதாஸ் அவர்களுக்குச் சமமாய், இசைக் குழுவில், மேடையில், ஜோடிப் பாடல்களை சுஜாதா பாடிய போது...நம்புங்க அய்யா...வயது பத்துதான்!

'திரு எம் கே அர்ஜுன் அவர்கள் இசையில், 'டூரிஸ்ட் பங்களோ' (மலையாளம்) படத்தில் 'கண்ணெழுதி பொட்டுதொட்டு' தான் நான் பாடிய முதல் பாடல். அப்போது நான் ஆறாவது படித்துக் கொண்டிருந்தேன்!' என்று சுஜாதா பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். ஆக, சுஜாதா வாழ்க்கையில் மற்றுமொரு மைல்கல்.

இந்தப் பாடலை வலைத்தளத்தில் தேடித் பார்த்தும் கிடைக்கவில்லை. படிக்கும் அன்பர்களிடம் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்தது எப்படி? அதற்கும் யேசுதாஸ் அவர்கள்தான் காரணம் என்கிறார் சுஜாதா. ராஜா அவர்கள் 'பார்வை'-ல் பட்ட அடுத்த நாள் பாடுவதற்கான வாய்ப்பு....படத்தின் பெயர்...சுஜாதாவிற்குப் பொருத்தமான பெயர் 'கவிக்குயில்'! குயிலின் கானம்...இதோ துவங்கி விட்டது!
Ghazal பாணியில் அமைந்திருந்த பாடலை சுஜாதா ரொம்பவும் அருமையாகக் கையாண்டிருப்பதைக் கண்டு எனக்கு வியப்பு. ஹிந்துஸ்தானி இசையில் அப்போதே தேர்ச்சி இருந்ததா என்பதற்கான தகவல்கள் இல்லை. என்ன காரணங்களினாலோ, பாடல் படத்தில் இல்லை.

சுஜாதா அயரவில்லை. ராஜாவும் விடவில்லை. வாய்ப்பு 'காயத்ரி' வடிவத்தில் வந்தது. முதலிரவை அனுபவித்த பெண்ணின் அடுத்த நாளைய நெகிழ்வான மன நிலை அது....பாடலின் முன் 'ஹம்மிங்', கொஞ்சம் இளமை, மீதம் முதிர்ச்சி என்கிற அளவில் பாடி அசத்தினார். பதின்மூன்று வயதுச் சிறுமிக்கு மீறிய பாட்டு அது.

'இந்த ராகம்'தான், இல்லையில்லை 'ராகமே' இல்லை என ராகப் பிரியர்கள் முட்டி மோதிக்கொள்ளும் ராஜாவின் பாட்டுக்களில் ஒன்று. அதுவும் அதிகாலையில் கேட்டுப் பாருங்கள்! லயித்துப் போவீர்கள்!


இனி வரும் பாடலுக்கு அறிமுகம் வேண்டுமா என்ன? 'எஸ் ஜானகி' என்றேன்...நண்பர் மோகனோ 'தல! நான் கூட ஜெஸ்ஸி-யோன்னு நெனச்சேன்' என்றார்!

பாடலின் முன் ஹம்மிங் (மீண்டும்!), கொஞ்சமாய் மழலை தொனித்த குரலில் 'இசையை அணைத்து'ச சென்றதை யாரால் மறக்க இயலும்?!


'ஒரு இனிய மனது' -ல், இசை ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார் 'இளவரசி' சுஜாதா.

நான் ஒரு ஒற்றுமையை இந்தப் பாடல்களில் கவனித்தேன். மூன்றின் நாயகி / வாயசைப்பு ஸ்ரீதேவி. வெவ்வேறு நிலைகளைக் கொண்ட பாடல்கள் இவை. 'டீன்'களில் இருக்கும் சிறுமி, அதற்கேற்பப் பாடியிருப்பது மிகவும் ஆச்சர்யம் / வியப்பு.

மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டு, கொஞ்சம் கூட 'வாசனை' வராமல் சுஜாதா முதலில் பாடிய மூன்று தமிழ் பாட்டுக்கள் அவரை இமயத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும். அது நடந்ததா?

-பயணம் தொடரும்