Showing posts with label சிவாஜி. Show all posts
Showing posts with label சிவாஜி. Show all posts

Sunday, August 19, 2012

பரதேசி டைரிக் குறிப்பு - 38

சிவாஜி அவர்கள் தயாரிச்சு, நடிச்ச ’ஆனந்தக் கண்ணீர்’ படத்துக்குக் ‘கண்ணீர்’னு பேர் வெச்சிருக்கலாம்...







‘ஆனந்தமே’ இல்லாத படம்...ட்ராமாவை அப்டியே உருவி படமாக்கிருப்பாங்க போல... ஒரு அழுவாச்சி காவியம்...



படத்தோட ஆனந்தமே ‘கல்யாணராமன்’ காரெக்டர்ல வ...ர்ற சிவாஜி மாமாவும், மடிசார் கட்டிண்டு மனசை கவ்விண்டு போற எளமை லட்சுமி மாமிதான்.



அதுவும் சிவாஜி மாமாவோட எக்ஸ்ப்ரஷன்ஸ், உடல் அசைவுகள், வசன உச்சரிப்புகள், ஒப்பனை செம ரகளை. அப்பப்போ பஞ்சகச்சம், போரடிச்சா வேட்டிக் கட்டிக்கும் கல்யாண ராம சிவாஜி மாமா சூப்பர்!



மிடில் கிளாஸ், ஜாயிண்ட் ஃபேமலியைப் பிரிக்கும் முதல் மருமகள், ஜாதி மாறி கிறித்துவப் பெண்ணை கைபிடிக்கும் இரண்டாவது மகன், வரதட்சிணை கேட்டு நெருக்கும் சம்பந்தி (மகள்)...எனக் கதை ஏகத்துக்கும் மெலோடிராமா. எல்லாரும் கடோசியா திருந்திடறா...அடடா!



ஆனா, அந்தக்காலத்துல இப்படி நடந்திருக்க சாத்தியம் அதிகம்!





போன சனிக்கிழமை அன்னிக்கு எதுவுமே ஓடாம, நெட் ஃப்ளிக்ஸை நோண்டிண்டு இருந்தேன்.




இந்தப் படம் பாக்கலாமா, அந்தப்படம் பாக்கலாமான்னு ஓட்டம். கடோசியா பொறுமை இழந்த ரூமி ‘இதைப் பாக்கலாம்’னான்.



அப்படிப் பாத்து கட்டிப்போட்ட படம்தான் ‘டுடேஸ் ஸ்பெஷல்’.

...

நியூயார்க் நகரின் ரெஸ்டாரண்ட் ஒன்றில் வேலை பார்க்கும் ஸமீர் வேலையிலிருந்து நீக்கப்பட, தந்தையின் ஈ ஓட்டிக்கொண்டிருக்கும் ஓட்டலை நிர்வகிக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட,

அக்பருடையதான அவனது சந்திப்பு, வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிறது. நடுவில் தென்றலாய் ‘குழந்தை’யுடன் அவனுடைய ஆங்கிலேயக் காதலி கேர்ரி. ஒன்றரை மணி நேரம் மனம் ஒன்றிப் போகிறது.



அக்பராக நஸ்ருதீன் ஷா. செம ஆட்டம் போடுகிறார். மசாலா தயார் செய்யும் நேர்த்தி என்ன, மசாலாவுடன் பொருத்தும் பேர்கள் என்ன, ஸமீருடைய தாயாரிடம் பழகும் விதம் என்ன...என அவ்வளவு என்ன என்ன போடலாம்...அட்டஹாச நடிப்பு...



நாயகன் ஆஸீஃப் மாண்ட்வி நடிப்பு இயல்பு. கேர்ரியாக வரும் நாயகி ஜெஸ் வெக்ஸ்லர்..அடடா! என்ன அழகு?!



இவர்கள் தவிர படத்தில் உலாவும் ஒவ்வொரு பாத்திரத் தேர்வும், நடிப்பும் உயர்தரம்.



நியூயார்க் என மனதிற்கு ரொம்பவும் பிடித்த நகரம். நகரத்தினூடே பயணிக்கும் திரைக்கதை அபாரம்.



இந்தப் படத்தை அனைவரும் பார்க்கும்படி சிபாரிசு செய்கிறேன்.

Wednesday, April 04, 2012

பெரியசாமித் தேவர்!

கமலின் தந்தை பெரியசாமித் தேவர் கேரக்டரில் சிவாஜி கணேசனை நடிக்க வைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டன.

அக்னி நட்சத்திரம், கிழக்கு வாசல் என்று விஜயகுமார் எஸ். வி. ரங்காராவ் ரேஞ்சுக்கு கம்பீரமும் உருக்கமும் காட்டிபுதிதாகநின்றார்.  அவருக்கும் அதிக ஆதரவு இருந்தது.  எஸ் எஸ் ராஜேந்திரன் மண்ணின் மைந்தர்.  அவரும் பரிசீலிக்கப்பட்டார். 

கமல், சிவாஜியை நாடிச் சென்றார்.  அவரது மேக்-அப் பாக்ஸில் தூசி படிந்திருந்தது.  உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தினால் விலகிப் போயிருந்தார்.

பொள்ளாச்சி வரைக்கும் அப்பாவால வர முடியும்னு தோணலை.  ரெஸ்ட்ல இருக்கார்.  டாக்டர்ஸ் அட்வைஸ்படி விசிட்டர்ஸ்கூட குறைச்சிட்டேன்.  ஃபேன்ஸும் வர வேண்டாம்னு சொல்லியாச்சி’ – ராம்குமார் நிலைமையைச் சுட்டிக் காட்டினார்.  கதையைக் கூறி கணேசனை சம்மதிக்க வைத்துவிட முடியும் என்று கமலுக்கு தோன்றியது.

கமல் தேடி வந்ததில் சிவாஜிக்கு மகிழ்ச்சி.  சிவாஜி என்கிற சிங்கத்துக்கு எல்லோரும் தயிர் சாதமே வைத்து சாகடித்து விட்டார்கள்என்று சொல்லிக்கொண்டேயிருக்கும் கமல், கொண்டு வந்திருந்த மதுரை ஸ்ரீ முனியாண்டி விலாஸ் பிரியாணியைப் பரிமாறினார்.  கணேசன் கவனமாகக் கேட்டார்.

அடடா! அப்படியா கதை? ஃபஸ்ட் ஆஃப்ல விட்டுட்டு, நீ செகண்ட் ஆஃப்ல ஸ்கோர் அடிக்கப் பாக்குறியா? கெட்டிக்காரன்டா நீ! ’ செல்லமாக கமலைத் தட்டிக் கொடுத்தார் சிவாஜி.

பொள்ளாச்சியில் தேவர் மகன் ஷுட்டிங்.  திருவிழா போல நடைபெற்றது.  .வே.சிவகுமார் தேவர் மகனுக்கு உதவி இயக்குநர்.  சிவாஜியைக் கண்டு யூனிட் திகைத்ததுசிவாஜி இத்தனை சிரமப்படறாரே!’

முதல் காட்சி பஞ்சாயத்தில் நாசர், கணேசனை அவமானப் படுத்தும் கட்டம்.  கணேசன் மனம் உடைந்து கமலிடம் கோபமாகப் பேசிக்கொண்டே வேகமாக நடக்க வேண்டிய ஷாட்.

என்னமோ இதும்பாங்களேஎனக்கும் அப்படியொரு வேலை கொடு என்கிறார்ப்போல வசனம் பேசிமாவாட்டுவதுமாதிரி பாவனை காட்டிஒரே டேக்.



ஆக்ஷன்என்றதும் பெரியசாமி தேவர் பிரசன்னமாகி விட்டார்.  நடிப்பு அகராதியின் அனைத்துப் பக்கங்களும் தெரிந்தன.  .வே.சிவகுமார் கண் கலங்க நின்றார்.  சகலரும் வாயடைத்துப் போயினர்.

டேய் கமலா (கமல்ஹாசனை சிவாஜி அழைக்கும் விதம்) நான் பண்ணுனா ஓவர் ஆக்டிங் அப்படிம்பீங்க.  நாலஞ்சி விதமா செஞ்சிக் காட்டறேன்.  எது வேணுமோ எடுத்துக்க.’

நாற்காலி தேடினார்கள்.  பெரியசாமி தேவர் அமரும் சிம்மாசனம் கிடைக்க அல்லோலகல்லோலப் பட்டது சிங்காநல்லூர்.  ஏறக்குறைய முக்கால் மணி நேரப் பரபரப்பு.  பிறகே கணேசன் உட்கார்ந்தார்.  அவரைப் போன்ற கம்பீரமானதொரு நாற்காலியில்.
மொத்தம் ஏழு நாட்கள்.  கணேசன் பெரியசாமித் தேவராக உலவினார்.

தேவர் மகனுடைய வெற்றிக்கு அதனுடைய மண் வாசனையும் காரணம்.  சின்னச் சின்ன விஷயங்கள் இருக்கும்.  அப்பா, பிள்ளையோட பேசற விதம்இதெல்லாம் வேரூன்றிப் போன விஷயம்.  யார் யார் எந்தத் தொனியிலே, உச்சரிப்பிலே பேசணும்னு எனக்குத் தெரியும்.  நான்தான் முடிவு பண்ணினேன்.  ஒரு நிர்பந்தத்துல ஏழரை நாள்களில் கதையை எழுதி, வசனமும் எழுதினேன்.’ – கமல் தன் நேர்காணல்களில் கூறியவை.

-கமல், பா தீனதயாளன், கிழக்கு பதிப்பகம்

Sunday, March 25, 2012

கர்ணன்!


கர்ணன் – நவீன தொழில்நுட்ப வடிவத்தில் மறு பிறவி எடுத்திருப்பதைப் பற்றி எல்லோரும் ’போற்றி’ பலவிதமாய் எழுதி, பேசித் தள்ளும் நிலையில் மற்றுமொரு பதிவு… 

படத்தின் தொழில்நுட்பத்திற்கு ஒன்றும் பெரிதாக மெனக்கிட வேண்டியிருந்திருக்காது.  ராஜ் டிவி வசம் இருந்த டிவிடி பிரிண்ட் / டிஜிட்டல் வடிவமாய் மாற்றுவது அவ்வளவு சிரமமாயிருந்திருக்காது.  Mughal-E-Azam படத்தை வண்ண வடிவமாக்குவதில் உள்ள யத்தனங்கள் நிச்சயம் இருந்திருக்க வாய்ப்பில்லை.  அதனால்தான், என்னால் கர்ணனின் புதிய வடிவத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

‘சிவாஜி’ படம் என்று படு அமர்க்களமாய் விளம்பரம்.  உண்மையிலேயே ‘சிவாஜி’ படம் மட்டும்தானா? 

-ஈஸ்ட்மென் கலர் (1964-ல் இது சாதனை)
-கிருஷ்ணராய் படம் நெடுக கம்பீரமாய் வலம் வரும் என் டி ஆர்  
-இரட்டையர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசை
-இலக்கியம், காதல், பக்தி, கொடை, வீரம் என சமூக உணர்வுகள் கொண்டு எழுதப்பட்ட கவியரசுவின் வீர்யம் மிக்க வரிகள். 

ஆக, இவற்றோடு ‘சிவாஜி’யின் மிளிரும் நடிப்பைக் கொண்டதுதான் ‘கர்ணன்’. 

கர்ணனின் பாத்திரப்படைப்பு படத்தில் குழப்பம்தான்.  நல்லவனா? கெட்டவனா?  கெட்டவனாய்க் காண்பிக்க முடியுமா? கதாநாயகன் சிவாஜியாயிற்றே?! இமேஜ் என்னவாகும்?! - (இன்று டெண்டுல்கரை ‘நீக்க’ முடியாத சிக்கல் போல!)  இதனாலேயே, கர்ணனின் புத்திரனை பாண்டவர்கள் கொல்வது போல (புராணத்தில் இல்லாத) ஒவ்வாத கற்பனைக் காட்சிகளைப் புகுத்தி, ‘கர்ண’னை  உருவாக்க வேண்டிய சூழ்நிலை. 
எனக்குத் தெரிந்தவரையில் வியாசர் கர்ணன் பாத்திரத்தைத் தீயவனாகவே சித்திரித்திருக்கிறார்.  வில்லிபுத்தூரார் பாரதம் கர்ணனை ‘கொடையிற் சிறந்தோன்’ என்று போற்றிப் பாடுகிறது. 

மிகப் பலவீனமான பாத்திரப் புனைவான ‘கர்ணன்’ படம் ‘வேட்டைக்காரன்’ முன் தாக்குப் பிடிக்க முடியாமல் போனது.  தேவரின் தாய் செண்டிமெண்ட், எம் ஜி ஆர் ஃபார்முலா, கறுப்பு வெள்ளை முன் பி ஆர் பந்துலுவின் வண்ணம் நீர்த்துப் போனது எளிய உண்மை. 

சிவாஜியின் அற்புத நடிப்பைக் கொண்ட படங்கள் எவ்வளவு இருக்கின்றன?  அதையெல்லாம் விட்டுவிட்டு, ‘கர்ணன்’ படத்தை மட்டுமே ‘தொழில்நுட்பம்’ என்கிற பம்மாத்து வேலை செய்து, சிலாகிப்பதன் காரணம் என்ன?  புரிந்து கொள்ளத்தான் முடியவில்லை. 

Wednesday, October 05, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 26

விஜயதசமி பெசல்....

தனியார் தொலைக்காட்சி மாதிரி நம்மால 'உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக'னு போட முடியாது!! இருந்தாலும், 'நச்'னு நாலு சீன போட்டா நல்ல இருக்குமேன்னு யோசிச்சேன்... அதால இதோ வருகுது....

ரஜினி சாரோட 'நடிப்பு' சமாசாரம் 1976-ல ஆரம்பிச்சு 1983-ல முடிஞ்சிருச்சுன்னே சொல்லலாம். வித விதமான characters-ல மின்னின அவரு 'கமர்ஷியல்' ஹீரோ ஆனது தமிழ் சினிமாவின் துரதிர்ஷ்டம். அவரும், ஸ்ரீதேவியும் காதலைப் பகிர்ந்துகிறதை நீங்களும் பார்த்து ரசியுங்களேன்...


நம்ம சாதி சனம் என்ன சொல்லும்...நம்ம சாதில இதெல்லாம் வேணாய்யா...நம்ம சாதில பொறந்துபுட்டு இப்டில்லாம் செய்யலாமா...என இன்றும் புலம்பும் மனிதர்கள் நம்மோட இருக்கிறாங்கன்னு நினைக்குறப்போ வேதனையாத்தான் இருக்குது...பொறப்ப தாண்டி இப்போ 'சாதி' வேலைக்குள்ளையும் வந்திருச்சு...'நீ ஐ.டி-யா, பினான்ஸ்-ஆ, மார்கெடிங்-ஆ, பேங்க் மேனேஜர்-ஆ, கன்னடமா, தமிழா, தெலுகு-ஆ, பெங்காலி-ஆ' எனக் கேள்வி போட்டு, ஸ்டேடஸ் பாத்து வெச்சு ஜாயின் ஆகுறதப் பாக்குறப்போ வேதனையாத்தான் இருக்குது...இந்த நல்ல நாள்ல நம்மோட வேத்துமை சுவத்தை உடைச்சிப் போட்டு ஒத்துமையா நின்னு தேர் இழுப்போம் வாங்களேன்...


இது நெசம்மாவே சூப்பர் சீன்...அப்பாவுக்கும், பையனுக்கும் நடக்குற வாக்குவாதம்... அதுவும் எந்த ரேஞ்சுல நடக்குது பாருங்க...இதுக்கு மேல ஏதும் 'பேய'த் தேவையே இல்ல...!


எவ்ளோ இன்டர்வியு பாத்தாலும் இத்தை மறக்க முடியுமா...? நெசம்மாலுமே இப்டி ஒரு பேட்டிய நம்ம சி எம், பி எம் கிட்ட எடுக்க முடியுமா...? அட்லீஸ்ட் ப சி-கிட்ட...?!! அட போப்பா...சிதம்பரம் சாரு வரச் சொல்லிபோட்டு மறந்துருவாரு! எங்க அண்ணாத்தை சொன்னா போல 'மெமோரியே இல்லாத PC-ப்பா அவரு!'



விஜயதசமி வாழ்த்துக்கள்!

Tuesday, June 28, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 7

யார் அந்த நிலவு?

பாட்டிற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு (ஆதாரம்: மெல்லிசை மன்னர் அளித்த பேட்டி)

மெல்லிசை மன்னர் போட்ட மெட்டுக்கு, நிமிடங்களில் பாடல் வந்து விட்டது கவியரசுவிடமிருந்து! உடனே, திரு டி எம் எஸ் அவர்களைப் பாட வைத்து விட்டார். இனி, சிவாஜி ஸார் அவர்கள் கேட்க வேண்டியதுதான் பாக்கி...

சிவாஜியைப் பாடல் கேட்க வைத்திருக்கிறார்கள் - முடிந்தபின் சிவாஜியிடமிருந்து நோ ரியாக்ஷன். 'என்ன பாட்டு பிடிக்கவில்லையோ?' என்கிற கவலை...கொஞ்ச நேரம் மௌனத்தில் கரைந்த பின் சிவாஜி 'நீங்க போட்டிருக்கிற மெட்டு, கண்ணதாசன் அவர்கள் எழுதிய வரிகள், இதுக்கு மேலே டி எம் எஸ் பாடின விதம் - இதை மேட்ச் பண்றாப்பல நான் நடிக்கணுமே? அதைத்தான் யோசிச்சுகிட்டிருக்கேன். ஒரு நாள் டைம் கொடுங்க...என்னால முடிஞ்சதைப் பண்ணிடறேன்' என்றாராம்! ஒரு நாள் கழித்து, பாடல் எடுக்கப்பட்டதாம்!

அப்படி வந்த பாட்டுதான் இது...படம் ரிலீஸானப்புறம் ஸ்க்ரீன்ல ரசிகனுக்குத் தெரிஞ்சது சிவாஜி மேனரிஸம் மட்டும் ஸ்டைல் மட்டும்தான்...அப்புறமென்ன ஒரே ரகளைதான் போங்க!



ஆகாய Ganges (நன்றி: Hello FM!)

இந்தப் பாடலைக் கேட்டவுடன் எனக்கு நினைவுக்கு வந்தவர் இருவர்....

முதல்வர்....திரு மலேசியா வாசுதேவன் அவர்கள் (என்ன ஒரு ஓபனிங்!)

இரண்டாமவர்...திரு ரஜினிகாந்த் அவர்கள் (மனநிலை பிறழ்ந்து, சரியான பின் நடித்த முதல் படம் இது)

திரு மலேசியா அவர்கள் பாடிய 'அருமை' வெகு ஜனப் பாடல்களின் 'மைல்கல்' பாடல்..கூட எஸ் ஜானகி...கேட்பதற்கு இனிமையோ இனிமை....!

இந்தப் பாடலை எடுக்கும்போது ஸ்ரீதேவி அவர்களுக்கு காலில் அடிபட்டு நடக்க முடியாத சூழல்...உன்னிப்பா கவனித்தால் ஸ்ரீதேவி நடமாட்டம் மட்டுப் பட்டிருப்பது தெரியும்...'உன்னிப்பா' கவனித்தால்தான் தெரியும்...இயக்குனரைப் பாராட்டிவிட்டு, அதற்காகவும் பாட்டைப் பாருங்கள்!

மலேசியா நம்முடன் இல்லை எனும்போது மனம் கனத்துப் போகிறது...அவரது பாடல்களில் அவர் உயிர் இன்றும் உலவிக் கொண்டிருக்கிறது.

பின்குறிப்பு - 'முதல்வர்' - ரஜினிக்குப் பிடிக்காததால், அவர் பெயர் இரண்டாமிடம்!

Friday, June 24, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 6

இன்று 'கவியரசர்' பிறந்த தினம் என எத்துணை பேருக்குத் தெரியும்?!



'வலை'-லிருந்து பின்னப்பட்ட தொகுப்பு இதோ!


கவியரசர் பற்றி மெல்லிசை மன்னர்

The movie was ‘pOlice kAran magaL’. MSV arrived first for Sridhar to present him with the ‘song situation’. The melody tuned was ‘ponnenbEn siru poovenbEn’. Kannadasan was his usual nonchalant self when asked to do his bit for the song. ‘kAthal duet-a? athAn athhAn pothhAn mayiru mattai ezhuthiyAchhE. innumA ?’. Sridhar’s response ‘ithu different situation aNNE….’ seemed to satisfy the kavignar. He continued with ‘ennadA ViswanathA …thathhagAram thariyA illai nAn sollattumA?’. MSV it seems sang the tune for the kavignar only for the audience to get bamboozled as words incessantly flowed for the meters dished out, at times even taking the lead. The tune was modified a wee bit to accommodate the words that ‘happened’.

Now, back to the conversation, ‘azhagiya thamizh magaL ivaL……tune mothalla pOttathu’. Much against the relentlessly stubborn MGR’s wishes had the song been squeezed in . The resultant ‘hit’ status of the song was used by MSV in his future assignments to have his way with MGR. An instance where Sivaji did a MGR!! The song was ‘ponmagaL vanthAL’ except the reason for the rejection was different… ‘The charanams sound like thiruppugazh to me’. How glad now are we that the composer and the director looked past the imposing presence of Sivaji !!!!


கவியரசர் பற்றி இளையராஜா



Get this widget | Track details | eSnips Social DNA


நடிகர் திலகமும், கவியரசரும்

Kanmani Subbu narrated an interesting situation. When 'Paalum Pazhamum' (1961) was being made Director Bhimsingh invited kaviarasar to pen the songs. Bhimsingh believed that with the roaring success of 'Bhaga Pirivinai' (1960) songs earlier kaviarasar can lend a magic touch.

Upon completion of nearly all the songs there was only one song to go. As usual, Bhimsingh along with Viswanathan Ramamurthy were seated when kaviarasar was penning the songs. When the last situation song was being written (at that time it was kaviarasar himself who wrote the songs) Shivaji suddenly walked in. It seemed Shivaji was staring hard at him which made our our kaviarasar uncomfortable since they were not on talking terms and he quickly handed over the letter-pad of the last song and bolted from the scene. Shivaji grabbed the letter-pad from Viswanathan out of curiosity and burst out laughing aloud. The song was was 'Ennai Yaar Endru...' Shivaji thought kaviarasar wrote about him for staring but the truth was kaviarasar was reminiscing his old flame in this song.

கர்ம வீரர் காமராஜ் அவர்கள் பற்றி கவியரசர்...

சொத்து சுகம் நாடார் , சொந்தந்தனை நாடார்
பொன்னென்றும் நாடார் , பொருள் நாடார், தான்பிறந்த
அன்னையையும் நாடார் , ஆசைதனை நாடார் ,
நாடொன்றே நாடித்தன் நலமொன்றும் நாடாத
நாடாரை நாடென்றார்.

Sunday, November 07, 2010

மைக்கேல் டிஸோஸா!

மஜ்பூர் என்கிற இந்திப் படத்தின் மோசமான தழுவல் அந்தப் படம்.

jaded சிவாஜி, bell bottom மாமி கே ஆர் விஜயா, மேஜர், உரக்கச் சிரித்துக் கொல்லும் வி கே ராமசாமி, இளமையான ஜெய்கணேஷ் - மொத்த சிவாஜி கேம்ப்-ஐ வைத்து திரு யோகானந்த் அவர்கள் இயக்கிய படம் படு தோல்வியைச் சந்தித்திருக்கக் கூடும். கடைசி இருபது நிமிடங்களில் 'அதிரடியாய்' ஸ்கிரிப்டை இழுத்துப் போகும் அந்த நடிகர் மட்டும் இல்லாமல் போயிருந்தால்.

இளமையான அமிதாப், பர்வீன் பாபி, ஸீஸன் நடிகர் ப்ரான் என்கிற பட்டாளத்தை வைத்து, சலீம்-ஜாவேத் கதையைப் பின்னியிருந்தாலும் மஜ்பூர் கல்லாப் பெட்டியை அவ்வளவாக அசைக்கவில்லை. இருந்தாலும், தமிழில் சிவாஜி-கே ஆர் விஜயாவை வைத்து எடுத்தார் யோகானந்த். அது சரி, ப்ரான் அவர்கள் மிகத் திறம்படச் செய்திருந்த 'மைக்கேல்' பாத்திரத்தை யார் செய்வது? அப்போதுதான் உயர்ந்து கொண்டிருந்த 'அவரை'ப் போடலாமா? சிவாஜியைக் கேட்டதற்கு 'நீங்க பார்த்து செய்ங்க' என்கிற பதில் வந்தது!


'ஆகாயம் மேலே, பாதாளம் கீழே' என்கிற பாடலில் அறிமுகமாகி, படத்தை இறுதிவரை தாங்கிச் செல்லும் பாத்திரமாய் வந்து போகும் 'மைக்கேல் டிஸோஸா' ரஜினியின் நடிப்பு மற்றும் ஸ்டைல் 'ஒண்ணாங்'கிளாஸ் என்று ரசிகர்களால் அமோகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது! இளையராஜாவின் இசையும் சேர்ந்து கொள்ள, படம் நூறு நாட்கள் ஓடியது!

இளையராஜாவின் இசை பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். எஸ் பி பி அவர்களின் heavy voice-ல் சிவாஜி வாயசைத்த 'திருத்தேரில் வரும்', 'என்னோடு பாடுங்கள்' மற்றும் மென்குரலோன் யேசுதாஸ் அவர்களின் 'ஆகாயம் மேலே, பாதாளம் கீழே' டப்பாங்குத்து, என பாடகர்களை மாற்றியமைத்த இளையராஜாவின் யுக்தி அபாரம். அதுவும் ரஜினி காட்சிகளின் BGM உயர்தரம்!

இளமை அமிதாப் செய்திருந்ததை நடிகர் திலகம் ஏற்று நடிக்க, ஸீனியர் ப்ரானின் ரோலை வளர்ந்து வரும் ரஜினி ஏற்றிருந்தது இன்னுமொரு சுவாரஸ்யம்.

'நான் வாழ வைப்பேன்' படம் தயாரிப்பாளரை வாழ வைத்தது; அன்றிலிருந்து இன்று வரை அனேகமாய் எல்லாரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் ரஜினியின் மற்றுமொரு பரிணாமத்தையும் வெளிக்கொணர்ந்தது என்பதில் துளியும் சந்தேகமில்லை.

Saturday, November 06, 2010

'உரிமைக் குரல்' - ஸ்ரீதர்!


இயக்குநர் ஸ்ரீதர் அவர்கள் இயக்கிய படங்கள் மக்களைச் சென்றடையாததால் சித்ராலயா நிறுவனம் நொடித்துப் போயிருந்த நேரம் அது.

ஸ்ரீதர் யோசித்தார். உடனடித்தேவை 'சித்ராலயா'வை நிமிர்த்துவது. ஒருவரால் மட்டுமே அது முடியும். தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்தவுடன், 'வாருங்கள்' என்ற பதில் வந்தது. சென்றார். சந்தித்தார். மனம் விட்டுப் பேசினார். 'உங்களுக்குப் படம் பண்ணுவதாக முடிவு செய்தாகிவிட்டது. ஆகவேண்டியதைப் பாருங்கள்' என்றவுடன் ஸ்ரீதருக்கு மகிழ்ச்சி.

தினத்தந்தியில் வந்திருந்த விளம்பரம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 'சிவாஜி' கேம்ப் இயக்குநர் 'எம் ஜி ஆர்'-ஐ இயக்குவதா, என்ன கொடுமை இது?! எம் ஜி ஆருக்காக எவ்வளவு விட்டுக் கொடுக்க வேண்டும்? ஸ்ரீதருக்குப் புத்தி கெட்டுவிட்டதா?! இப்படி காலில் விழுந்தால் 'எம் ஜி ஆர்'தான் மதிப்பாரா? அந்நாளில் எம் ஜி ஆர் ஷ¤ட்டிங்கில் பண்ணும் அலம்பல் மிகப் பிரசித்தம்! ஸ்ரீதர் இதையெல்லாம் தாங்குவாரா?! இருந்தாலும் விநியோகஸ்தர்களிடமிருந்து பணம் கொட்டியது!

பல விமர்சனங்களுக்கு நடுவில் எம் ஜி ஆரைப் போட்டாயிற்று. அட்வான்ஸ் பணமும் வந்தாகிவிட்டது. இனி என்ன படம் எடுக்க வேண்டியதுதானே?! அதில்தான் சிக்கல்.

ஸ்ரீதருக்கு கவியரசர் இல்லையென்றால் சரிப்பட்டு வராது. எம் ஜி ஆருக்கோ கவியரசர் சரிப்பட்டு வராது! என்ன செய்வது?!

சங்கடத்திற்கு எம் ஜி ஆரே முற்றுப் புள்ளி வைத்தார். 'கவிஞர் எழுதட்டும். ஏனென்றால் இது ஸ்ரீதர் படம்!' அந்த ஒரு பாடல் இன்றும் பேசப்படுகிற, அழியாக் கவிதை, பசுமைக் கனவுப் பாடல் 'விழியே கதை எழுது!'

'உரிமைக்குரல்' பட விளம்பரத்தில் எம் ஜி ஆர் வேட்டியை உடுத்தியிருந்த விதம் 'ஆந்திரா கட்டை'ச் சார்ந்திருந்தது. 'ஸ்ரீதர் எதற்காக இப்படியெல்லாம் எடுக்க வேண்டும்?' என்று அவரைப் போற்றும் ரசிகர்கள் வேறு மண்டை காய்ந்திருந்தனர். ஆனால், எம் ஜி ஆரின் ரசிகர்களுக்கு உற்சாகம் தாளவில்லை. 'வாத்யார் கட்டு சூப்பர்மா!' என்று சான்றிதழ் கொடுத்தனர்!

எம் ஜி ஆர் எந்தவித பந்தாவும் செய்யாமல், மிக விரைவில் முடித்துக் கொடுத்த படங்களில் ஒன்றான 'உரிமைக்குரல்'-ன் வெற்றி ஸ்ரீதரை வாழவைத்தது; சித்ராலயாவின் பணப் பிரச்னையையும் தீர்த்து வைத்தது.

உரிமைக்குரல் வெற்றிக்குப் பின் வெளியான ஸ்ரீதர் படங்களில் 'இயக்குநர்' முத்திரை இல்லாவிட்டாலும், வெவ்வேறு கோணங்களில் ரசிக்கும்படியாய் அமைந்தன. காரணம் நிச்சயம் 'உரிமைக்குரல்'தான்!

Sunday, October 03, 2010

எந்திரன் - முகப்புத்தகக் குறிப்புகள்!

மறைந்த எழுத்தாளர் சுஜாதா நினைத்ததை, எழுதியதை, 'பார்த்த' எந்திரனை இயக்குனர் ஷங்கர் அழகாகத் திரையில் உருவகப் படுத்தியிருப்பதைக் கண்ட போது, சுஜாதா இருந்திருக்கலாமே என்று தோன்றியது! சுஜாதா-வை ரசித்த யாராலும் எந்திரன் முதல் பாதியைக் கொண்டாட முடியும், ஷங்கரைப் பாராட்டவும் முடியும்!

‎'வில்லத்தனம் பண்ணுற எந்திர ரஜினிய ஏம்பா சைண்டிஸ்ட் ரஜினி அடிச்சே கொல்லாம விடுறாரு?!' - படம் பார்த்த அப்பாவி ரசிகனின் கேள்வி...அவனால் நல்ல ரஜினி 'அடிக்காமல்' இருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை:-) ஆனால், அந்த அசுரனை, சைண்டிஸ்ட் அறிவு ரீதியாக 4 வழிகளில், 'எதிர் கொள்வதை' அதே ரசிகனுக்குப் புரியும்படி எடுத்த இயக்குனருக்கு ஒரு சபாஷ்!

சைண்டிஸ்ட் 'குறுந்தாடி'யும், எந்திர வில்லனின் 'கிருதா'வும் இனி தமிழ் நாட்டில் எங்கும் காண முடியும்! - எல்லாம் ரஜினி இஷ்டைலு மற்றும் இளமை!


‎'சிவாஜி' பார்த்த பின் - வெள்ளை ரஜினி, மொட்டை ரஜினி என்று சிகரத்தைத் தொட்ட ரஜினி இனிமேல் என்னதான் செய்ய முடியும்?! 'எந்திரன்' பார்த்த பின் - 'சிவாஜி' வேஸ்டுப்பா!

இன்ட்ரோ ஸாங் கிடையாது, பஞ்ச வசனங்கள் இல்லை, சைண்டிஸ்ட் சண்டை கூடப் போடாமல் ஓடிப் போகிறார்! - இப்படி எல்லாம் இருந்தாலும் ரஜினி என்கிற நடிகரின் இமேஜ் படம் முழுவதும் காக்கபட்டிருப்பதைக் காணும்போது ஜாலி-யாய் இருக்கிறது!

அந்த காலத்துல சிவாஜி, கே ஆர் விஜயா 'என்னோடு பாடுங்கள்'-னு டூயட் பாடும்போது பாத்தா 'வயசு' நல்லாவே தெரியும்! ஆனா இப்ப? ரஜினி (60), ஐஸு(40) 'காதல் அணுக்கள்'-இல் இளமையோ, இளமை:-) எல்லாம் டெக்னாலாஜியாம், அப்டிங்களா?!!