Showing posts with label திரும்பிப் பார். Show all posts
Showing posts with label திரும்பிப் பார். Show all posts

Monday, May 23, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு -2

சமீபத்தில் நான் பார்த்த இரு படங்களைப் பற்றி....

மனக்கணக்கு (1986)

விஜயகாந்த்/கமலஹாசன் இணைந்து நடித்த படம் என்பதால் பார்த்த படம். ஆனால், ரெண்டு பேருமே இண்டர்வெல்லுக்கு அப்பாலதான் எண்ட்ரி!

ஆர் சி சக்தி இயக்கத்தில் உருவான படத்தின் முதல் பாதி 'ஆஹா'! பின் பாதியின் முதல் அரை மணி 'ஓஹோ'! அப்புறம் 'சொத்தைக் கடலையை'ச் சாப்பிட்ட ஃபீலிங்! இருந்தும், கதை நம் பக்கத்து வீட்டில் நடப்பதைப் போலத்தான் இருக்கிறது.

படிப்பு / காதல் / விவாகரத்து/ விட்டுக்கொடுத்தல் / கணவன் - மனைவி உறவு என காட்சிகள் எல்லாமே இயல்பு எனப் பாராட்ட நினைத்தால்...ஸாரி! கடைசி அரை மணி நேரத்தில் எல்லாமே தலைகீழ். இயக்குநருக்கு யார் மேல் என்ன கோபமோ, இப்படி எடுத்தால் எடுபடாதோ என்கிற சந்தேகமோ, சத்தியமாகத் தெரியவில்லை...! அந்த அரைமணியில் படம் பப்படம்!

முதல் பாதியில் நம் மனதை அள்ளி எடுப்பவர்கள் ராஜேஷ்/ராதா/செந்தாமரைதான். ராதா என்கிற கதாநாயகி படம் முழுதும் உடுத்தும் உடை/முகபாவனை/நடிப்பு அசத்தல். கூடவே ராஜேஷ். கூடவே அம்பிகா. கூடவே விஜயகாந்த் (அட நம்புங்க, பாஸ”!). கமல்ஹாசனின் காமெடி படத்தின் ஹைலைட். ஒரு இயக்குநர் படும் அவஸ்தையை அட்டஹாசமாய் ஹைலைட் செய்திருப்பது கமல் 'பெசல்'!

மொத்தத்தில், முதல் பாதியில் இயக்குநர் 'bold', பின் பாதியிலோ 'clean bowled'!


அடுக்குமல்லி (1979)

கே எஸ் ஜி என்கிற குடும்ப இயக்குநர் எடுத்த படம்.

நாடகம் பார்க்கிற உணர்வு படம் நெடுகத் தெரிந்தாலும், platonic relationship என்கிற உறவை மிக மேன்மையாகக் காட்டியிருப்பது வியப்பைத் தருகிறது.

குடும்பத் தலைவியாக, மனைவியாக, விதவையாக என அடித்தது சான்ஸ் சுஜாதாவிற்கு! விடுவாரா, அதகளம் செய்திருக்கிறார். அதுவும் விதவையாக மனதில் மட்டும் துக்கத்தை வைத்துக்கொண்டு, இயல்பாய் நடமாடுகிறாரே, அது டாப் க்ளாஸ்! (எப்படியெல்லாம் பெண்களுக்குத் திரைப்படங்களில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள், அந்தக் காலத்தில்! நிம்பவே ஆச்சரியம்!).

குடும்ப நண்பராக வந்து, குடும்பத்தில் ஒருவராய் மாறி, தலைவன் மறைந்த பின் தாங்குவதாய் அமைந்த தேங்காய் žனிவாசன் பாத்திரம் படத்தின் ஹைலைட். நகைச்சுவை நடிகரை, குணச்சித்திரமாக்கி உலா வைத்திருப்பது சில இடங்களில் 'ரிஸ்க்' பல இடங்களில் 'ரஸ்க்'! (டேங்ஸ”, வடிவேலு!) விஜயகுமார்/மகேந்திரன் நடிப்பிலும் முதிர்ச்சி தெரிகிறது.

வெற்றிடத்தை நிரப்ப பல பாடல்கள் இருந்தாலும் வாணி ஜெயராமின் தேன் குரலில் ஒலிக்கும் 'ஆயிரம் ஆண்டுகள்' பாடல் க்ளாஸ்! அண்ணா! பாட்டு எழுதியது யாருங்கோ?!

சில காட்சிகள் செயற்கையாய் அமைந்திருந்தாலும், ஒரு நல்ல குடும்பத்தைப் பார்த்த திருப்தி, இந்தப் படத்தைப் பார்த்தால் வரும்!

Sunday, November 07, 2010

மைக்கேல் டிஸோஸா!

மஜ்பூர் என்கிற இந்திப் படத்தின் மோசமான தழுவல் அந்தப் படம்.

jaded சிவாஜி, bell bottom மாமி கே ஆர் விஜயா, மேஜர், உரக்கச் சிரித்துக் கொல்லும் வி கே ராமசாமி, இளமையான ஜெய்கணேஷ் - மொத்த சிவாஜி கேம்ப்-ஐ வைத்து திரு யோகானந்த் அவர்கள் இயக்கிய படம் படு தோல்வியைச் சந்தித்திருக்கக் கூடும். கடைசி இருபது நிமிடங்களில் 'அதிரடியாய்' ஸ்கிரிப்டை இழுத்துப் போகும் அந்த நடிகர் மட்டும் இல்லாமல் போயிருந்தால்.

இளமையான அமிதாப், பர்வீன் பாபி, ஸீஸன் நடிகர் ப்ரான் என்கிற பட்டாளத்தை வைத்து, சலீம்-ஜாவேத் கதையைப் பின்னியிருந்தாலும் மஜ்பூர் கல்லாப் பெட்டியை அவ்வளவாக அசைக்கவில்லை. இருந்தாலும், தமிழில் சிவாஜி-கே ஆர் விஜயாவை வைத்து எடுத்தார் யோகானந்த். அது சரி, ப்ரான் அவர்கள் மிகத் திறம்படச் செய்திருந்த 'மைக்கேல்' பாத்திரத்தை யார் செய்வது? அப்போதுதான் உயர்ந்து கொண்டிருந்த 'அவரை'ப் போடலாமா? சிவாஜியைக் கேட்டதற்கு 'நீங்க பார்த்து செய்ங்க' என்கிற பதில் வந்தது!


'ஆகாயம் மேலே, பாதாளம் கீழே' என்கிற பாடலில் அறிமுகமாகி, படத்தை இறுதிவரை தாங்கிச் செல்லும் பாத்திரமாய் வந்து போகும் 'மைக்கேல் டிஸோஸா' ரஜினியின் நடிப்பு மற்றும் ஸ்டைல் 'ஒண்ணாங்'கிளாஸ் என்று ரசிகர்களால் அமோகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது! இளையராஜாவின் இசையும் சேர்ந்து கொள்ள, படம் நூறு நாட்கள் ஓடியது!

இளையராஜாவின் இசை பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். எஸ் பி பி அவர்களின் heavy voice-ல் சிவாஜி வாயசைத்த 'திருத்தேரில் வரும்', 'என்னோடு பாடுங்கள்' மற்றும் மென்குரலோன் யேசுதாஸ் அவர்களின் 'ஆகாயம் மேலே, பாதாளம் கீழே' டப்பாங்குத்து, என பாடகர்களை மாற்றியமைத்த இளையராஜாவின் யுக்தி அபாரம். அதுவும் ரஜினி காட்சிகளின் BGM உயர்தரம்!

இளமை அமிதாப் செய்திருந்ததை நடிகர் திலகம் ஏற்று நடிக்க, ஸீனியர் ப்ரானின் ரோலை வளர்ந்து வரும் ரஜினி ஏற்றிருந்தது இன்னுமொரு சுவாரஸ்யம்.

'நான் வாழ வைப்பேன்' படம் தயாரிப்பாளரை வாழ வைத்தது; அன்றிலிருந்து இன்று வரை அனேகமாய் எல்லாரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் ரஜினியின் மற்றுமொரு பரிணாமத்தையும் வெளிக்கொணர்ந்தது என்பதில் துளியும் சந்தேகமில்லை.

Saturday, November 06, 2010

'உரிமைக் குரல்' - ஸ்ரீதர்!


இயக்குநர் ஸ்ரீதர் அவர்கள் இயக்கிய படங்கள் மக்களைச் சென்றடையாததால் சித்ராலயா நிறுவனம் நொடித்துப் போயிருந்த நேரம் அது.

ஸ்ரீதர் யோசித்தார். உடனடித்தேவை 'சித்ராலயா'வை நிமிர்த்துவது. ஒருவரால் மட்டுமே அது முடியும். தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்தவுடன், 'வாருங்கள்' என்ற பதில் வந்தது. சென்றார். சந்தித்தார். மனம் விட்டுப் பேசினார். 'உங்களுக்குப் படம் பண்ணுவதாக முடிவு செய்தாகிவிட்டது. ஆகவேண்டியதைப் பாருங்கள்' என்றவுடன் ஸ்ரீதருக்கு மகிழ்ச்சி.

தினத்தந்தியில் வந்திருந்த விளம்பரம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 'சிவாஜி' கேம்ப் இயக்குநர் 'எம் ஜி ஆர்'-ஐ இயக்குவதா, என்ன கொடுமை இது?! எம் ஜி ஆருக்காக எவ்வளவு விட்டுக் கொடுக்க வேண்டும்? ஸ்ரீதருக்குப் புத்தி கெட்டுவிட்டதா?! இப்படி காலில் விழுந்தால் 'எம் ஜி ஆர்'தான் மதிப்பாரா? அந்நாளில் எம் ஜி ஆர் ஷ¤ட்டிங்கில் பண்ணும் அலம்பல் மிகப் பிரசித்தம்! ஸ்ரீதர் இதையெல்லாம் தாங்குவாரா?! இருந்தாலும் விநியோகஸ்தர்களிடமிருந்து பணம் கொட்டியது!

பல விமர்சனங்களுக்கு நடுவில் எம் ஜி ஆரைப் போட்டாயிற்று. அட்வான்ஸ் பணமும் வந்தாகிவிட்டது. இனி என்ன படம் எடுக்க வேண்டியதுதானே?! அதில்தான் சிக்கல்.

ஸ்ரீதருக்கு கவியரசர் இல்லையென்றால் சரிப்பட்டு வராது. எம் ஜி ஆருக்கோ கவியரசர் சரிப்பட்டு வராது! என்ன செய்வது?!

சங்கடத்திற்கு எம் ஜி ஆரே முற்றுப் புள்ளி வைத்தார். 'கவிஞர் எழுதட்டும். ஏனென்றால் இது ஸ்ரீதர் படம்!' அந்த ஒரு பாடல் இன்றும் பேசப்படுகிற, அழியாக் கவிதை, பசுமைக் கனவுப் பாடல் 'விழியே கதை எழுது!'

'உரிமைக்குரல்' பட விளம்பரத்தில் எம் ஜி ஆர் வேட்டியை உடுத்தியிருந்த விதம் 'ஆந்திரா கட்டை'ச் சார்ந்திருந்தது. 'ஸ்ரீதர் எதற்காக இப்படியெல்லாம் எடுக்க வேண்டும்?' என்று அவரைப் போற்றும் ரசிகர்கள் வேறு மண்டை காய்ந்திருந்தனர். ஆனால், எம் ஜி ஆரின் ரசிகர்களுக்கு உற்சாகம் தாளவில்லை. 'வாத்யார் கட்டு சூப்பர்மா!' என்று சான்றிதழ் கொடுத்தனர்!

எம் ஜி ஆர் எந்தவித பந்தாவும் செய்யாமல், மிக விரைவில் முடித்துக் கொடுத்த படங்களில் ஒன்றான 'உரிமைக்குரல்'-ன் வெற்றி ஸ்ரீதரை வாழவைத்தது; சித்ராலயாவின் பணப் பிரச்னையையும் தீர்த்து வைத்தது.

உரிமைக்குரல் வெற்றிக்குப் பின் வெளியான ஸ்ரீதர் படங்களில் 'இயக்குநர்' முத்திரை இல்லாவிட்டாலும், வெவ்வேறு கோணங்களில் ரசிக்கும்படியாய் அமைந்தன. காரணம் நிச்சயம் 'உரிமைக்குரல்'தான்!

Wednesday, September 23, 2009

பழங்காலப் படங்களைப் பார்த்து 'என் பார்வை'யில் அலசுவதே 'திரும்பிப் பார்'!! பாழாய்ப்போன தமிழ் சினிமா செண்டிமெண்டான 'வெற்றி'யோடு துவங்குகிறேன்!!!

திரைப்படம் வெற்றி

வெளியீடு 1984

தயாரிப்பு பி எஸ் வி பிக்சர்ஸ்

இசை சங்கர் கணேஷ்

இயக்கம் எஸ் ஏ சந்திரசேகரன்

நடிப்பு விஜயகாந்த் , விஜி, எம் என் நம்பியார், பி எஸ் வீரப்பா, மகேந்திரன் மற்றும் இளைய தளபதி விஜய்

நன்றி மோசெர் பேர் டி வி டி ரூபாய் 45

அப்பாவைக் கொன்றவனை பழி வாங்குவது, காலேஜில் சண்டை, கதாநாயகியைக் கடத்திக்கொண்டு போய் duet பாடுவது, அனுராதாவின் belly(?!) dance, பழங்காலத்து வில்லன்கள் கத்தி சண்டை, என 80களுக்கு உண்டான அனைத்து மசாலா items நிறைந்த படம்.

விஜயகாந்த் இளமையாக இருக்கிறார். கண்கள் சிவப்பாகவே இருக்கின்றன. மேக்கப் போட்டிருப்பது நன்றாக தெரிகிறது. துடிப்பாக சண்டை போடுகிறார்.

விஜி...பெயரைப் போல வருகையும் நடிப்பும் சுருக்.
மகேந்திரன் எரிச்சல். கமிஷனராக வரும் நம்பியார் வீண்.

பழைய்ய trademark சிரிப்போடு வில்லனாய் அறிமுகமாகும் வீரப்பா செய்வதெல்லாம் காமெடியாயிருக்கிறது. அது சரி வில்லன் என்றால் அரை குறை ஆடை பெண்களின் தோள் மேல் கை போட்டுக் கொண்டு வருவதில் என்ன logicடா சாமி?!

சங்கர் கணேஷ் இசையில் 'ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள்', 'காவல் புரிந்தவன்' பாடல்கள் நன்றாக இருக்கின்றன. 'ஆத்தி, ஆத்தி' பாட்டில் 'ஆளானாலும் ஆளு, இவ அழுத்தமான ஆளு' அப்படியே காப்பி அடிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநரின் மைத்துனர் என்பதால் S N சுரேந்திரனுக்கு அடித்தது chance!

S A சந்திரசேகரின் மற்றுமொரு 'சட்ட' படம். இடைவேளை வரை ஓரளவிற்கு உட்கார வைத்தவர், பின்பகுதியில் ஓட ஓட விரட்டுகிறார். தாங்க முடியலை!

பின்குறிப்பு:
1. விஜய்தான் குட்டி விஜயகாந்த்! அப்பா எரிவதைப் பார்க்கும்போது இன்றைய இளைய தளபதி விஜய் போல் வீறு கொண்டெழுந்து, 'குருவி' சுடுவது போல சுட்டுவிடுவாரோ என்கிற பயத்தைத் தவிர்க்க முடியவில்லை!
2. எதிர்பாராத வகையில் படம் வெற்றிகரமாக ஓடி விஜயகாந்த்/சந்திரசேகர் மார்கெட் உசந்ததாம்!